ஆனந்தவேதம்

உனக்காக,உன் வாழ்க்கைக்காக,உன் ஆனந்தத்திற்காக...

இந்த வலைப்பதிவில் தேடு

சனி, 17 அக்டோபர், 2009

வரவேண்டும் ! வரவேண்டும் !

ராதேக்ருஷ்ணா


ஹே ராதேக்ருஷ்ண குழந்தைகளே !


இன்று உங்கள் க்ருஷ்ணனை 
அனுபவிப்பதற்கான
விசேஷ வரப்பிரசாத நாள் ! ! !

பல கோடி ஜன்மாக்களின் 
கோடி புண்ணியங்களின்
ப்ரயோஜனம் இன்று
உயிரோடு இந்த பூமியில்
வாழ்ந்துகொண்டிருக்கிறீர்கள் ! 

பகவானிடத்தில் இப்படி ஒரு
ப்ரார்த்தனை செய் ! ! ! 

"க்ருஷ்ணா! க்ருஷ்ணா!க்ருஷ்ணா!
எத்தனை ஆனந்தம் உன் திருநாமத்தில்!

ஆயிரம் கோடி நன்றிகள்
எங்கள் ராஜாதி ராஜனே!
கருணா சாகரனே!
புவன சுந்தரனே!
ராதிகாரமணனே!
கோபிகா மணாளனே! 
யசோதா நந்தனனே!
நந்தகோப குமாரனே!

வரவேண்டும் ! வரவேண்டும் !

உன் குழந்தையான என்னோடு
இருக்கவேண்டும்... 

இன்று முதல் உன் அடிமையாக,
உன் குழந்தையாக,
உன் சொத்தாக,
உனக்குப் பிடித்தமாதிரிமட்டுமே
இருக்க அனுக்ரஹம் செய்வாய்...

உன் திருவடித் தாமரைகளில்
கோடி கோடி நமஸ்காரங்கள்..."

இந்த ப்ரார்த்தனை உன்
வாழ்க்கையை ஆனந்தத்தில்
என்றும் வைத்திடும்... 
   
 

0 கருத்துகள்:

  © Blogger templates Newspaper III by Ourblogtemplates.com 2008

Back to TOP