ஆனந்தவேதம்

உனக்காக,உன் வாழ்க்கைக்காக,உன் ஆனந்தத்திற்காக...

இந்த வலைப்பதிவில் தேடு

திங்கள், 26 அக்டோபர், 2009

கண்ணனை களவு செய் !



ராதேக்ருஷ்ணா

இன்று கோவிந்த பட்டாபிஷேகம் !


கிரிதாரியிடம் இந்திரன் 
சரணாகதி செய்த நாள் !

இந்திரன் தன்னுடைய
அகம்பாவத்திற்கு பகவான்
ஸ்ரீ க்ருஷ்ணனிடம்
மன்னிப்பு கேட்ட நாள்!


அறிவொன்றுமில்லா ஆய்குலம்
கண்ணனின் மகிமையை
ரஹஸியமாய் பேசின நாள் !


ஸ்ரீ க்ருஷ்ணன்  ஏழு நாள் கழித்து
கோவர்த்தன மலையை 
மீண்டும்
கீழே வைத்த நாள் !


இந்திரன் காமதேனுவை
வைத்துக் கொண்டு
க்ருஷ்ணனுக்கு 
ஆகாச கங்கையினால்
அபிஷேகம் செய்து 
"கோவிந்தா ! கோவிந்தா !"
என்று புலம்பி கண்ணனின்
பாதத்தில் தன்னை
அர்ப்பித்த உன்னதமான நாள் !

 நீயும் உன் அகம்பாவத்தை விட்டு,

கண்ணன் அடியிணையை
பற்றிக் கொள் !

"கோவிந்தா ! கோவிந்தா !"
என்று வாய்விட்டு அலறி
ஆனந்தமாக பாடி ஆடு !


குருஜீ அம்மாவின்
திருவடி த்யானத்தோடு
கண்ணனை களவு செய் !



0 கருத்துகள்:

  © Blogger templates Newspaper III by Ourblogtemplates.com 2008

Back to TOP