ஆனந்தவேதம்

உனக்காக,உன் வாழ்க்கைக்காக,உன் ஆனந்தத்திற்காக...

இந்த வலைப்பதிவில் தேடு

திங்கள், 19 அக்டோபர், 2009

இன்று கோவர்தன பூஜை !




ராதேக்ருஷ்ணா


இன்று கோவர்தன பூஜை !


பகவான் ஸ்ரீ க்ருஷ்ணனே 
கோவர்தன பூஜை செய்தான் !


ஆஞ்சனேயரே தூக்கிக் கொண்டு
வந்த உன்னதமான மலை !



இந்திரனின் அகம்பாவத்தை அழிக்க
பகவான் ஸ்ரீ க்ருஷ்ணன் பூஜை
செய்த மலை ! 



சத் சிஷ்யனாக இருக்கவேண்டுமென்று

எல்லோருக்கும் உபதேசிக்கும் மலை!



நந்தகோபரைப் போல் 
பகவான் ஸ்ரீ க்ருஷ்ணனுக்கு
தந்தையாய் இருந்து காத்த மலை !



கோகுலத்திற்கும், ப்ருந்தாவனத்திற்கும்,
நலம் தரும் மலை!




ஸ்ரீ க்ருஷ்ண சைதன்ய மஹாப்ரபு,
ஸ்ரீமான் மாதவேந்திர புரி, 
ஸ்ரீ சனாதன கோஸ்வாமி,
ஸ்ரீ ரூப கோஸ்வாமி,
ஸ்ரீமதி மீரா, போன்ற 
உன்னதமான பக்தர்கள்,
ப்ரதக்ஷிணம் செய்த மலை !




தினம் தினம் உன்னதமான பல
பக்தர்கள் கிரி வலம் செய்யும்
அற்புதமான மலை !



ஸ்வயம் க்ருஷ்ண ஸ்வரூபமாக
விளங்கும் மலை !



யாருக்கு என்ன வேண்டுமோ,
அதை நிறைவேற்றும் மலை !


கோபர்களும், கோபிகைகளும்,
ஆனந்தமாக அனுபவித்த மலை !



ஏழு வயது பாலனான கண்ணன் 
தன் சுண்டு விரலால் தூக்கி
உயரப்பிடித்த மலை !


தேவர்களும் தங்கள் அகம்பாவம்
அழியக் காரணமான மலை !


ராதிகாவும் க்ருஷ்ணனோடு
ஆனந்தமாக விளையாடிய மலை !




எல்லா மலைகளுக்கும் 
ராஜனான
கிரிராஜனான
நம்முடைய
கோவர்த்தன மலை !

கிரிராஜனைக் கொண்டாடி,
கிரிராஜனுக்கு நிவேதனம் செய்து,
கிரிராஜனை வலம் வந்து,
கிரிராஜனை ஸ்மரித்து,
கிரிராஜனின் திருவடிகளில் தொழுது,
கிரிராஜனிடம் ப்ரார்த்தித்து,
கிரிராஜனுக்கு அன்னகூடோத்ஸவம் செய்து,
இன்று கோவர்த்தன பூஜை செய்வோம் !
வாருங்கள் ! வாருங்கள் ! வாருங்கள் !


ஜெய் போலோ கிரிராஜனுக்கு! ஜெய் !
ஜெய் போலோ கிரிதர கோபாலனுக்கு ! ஜெய் !
ஜெய் போலோ ராதேக்ருஷ்ணனுக்கு ! ஜெய் !
ஜெய் போலோ மீரா மாதாவுக்கு ! ஜெய் !
ஜெய் போலோ குருஜீ அம்மாவுக்கு ! ஜெய் !


0 கருத்துகள்:

  © Blogger templates Newspaper III by Ourblogtemplates.com 2008

Back to TOP