ஆனந்தவேதம்

உனக்காக,உன் வாழ்க்கைக்காக,உன் ஆனந்தத்திற்காக...

இந்த வலைப்பதிவில் தேடு

திங்கள், 26 அக்டோபர், 2009

உனக்கும் புரியும்!


ராதேக்ருஷ்ணா

சர்வத்ர கோவிந்த நாம
ஸங்கீர்த்தனம் ! ! !


கோவிந்தா ! கோவிந்தா ! 

பகவானுக்கு பிடிக்காதவை
அகம்பாவமும், மமகாரமும்!


அதை கொன்று போடு!
வேரோடு பிடுங்கிப் போடு!
தடயமில்லாமல் அழித்து விடு!
அகம்பாவத்தை எரித்து சாம்பலை
யமுனையில் கறைத்து விடு!


அகம்பாவமும், என்னுடையது
என்கின்ற எண்ணமும்
மலம், மூத்திரம் போல்
கேவலமானவை !


உடலில் மல, மூத்திரம் தங்கினால்
எத்தனை கஷ்டமோ, அதை விட
கோடிமடங்கு பயங்கரமான
கஷ்டம் மனதில் அகம்பாவமும்,
மமகாரமும் இருப்பதனால்
உண்டாகும்.


மல, மூத்திரங்களை வெளியே
தள்ளினால் எத்தனை சமாதானம்!
அதே போல் மனதின் மல,
மூத்திரங்களான
அகம்பாவத்தையும், மமகாரத்தையும்
தள்ளிப்பார்! உனக்கே புரியும் !


அகம்பாவமும், மமகாரமும்
அழிந்த பிறகே இந்திரனுக்கு
ஸ்ரீ க்ருஷ்ணனின் மகிமை
புரிந்தது!

நீயும் இன்று க்ருஷ்ணனிடத்தில்
சரணாகதி செய்து, அவன் நாமத்தை
ஜபித்து, அவனிடத்தில் கதறியழுது,
மனமுருகி  உன்னிடத்திலிருக்கும்
அழுக்குகளை அகற்ற ப்ரார்த்தனை செய்!



உனக்கும் புரியும்!


0 கருத்துகள்:

  © Blogger templates Newspaper III by Ourblogtemplates.com 2008

Back to TOP