ஆனந்தவேதம்

உனக்காக,உன் வாழ்க்கைக்காக,உன் ஆனந்தத்திற்காக...

இந்த வலைப்பதிவில் தேடு

செவ்வாய், 27 அக்டோபர், 2009

மஞ்சனமாடச் செல்கின்றான் !





ராதேக்ருஷ்ணா

இன்று, இப்பொழுது

திருவனந்தபுரத்தில்
வாழ்பவர்கள்
பாக்கியவான்கள் !

சங்கை இடக்கையில்
கொண்டவன்
சங்குமுக தீரத்தில்
மஞ்சனமாடச் செல்கின்றான் !


திருவனந்தபுரத்து 
ஆயன் 
மஞ்சனமாடச் செல்கின்றான் !

 த்வாரகா நாதன் 
மஞ்சனமாடச் செல்கின்றான் !

திவாகர முனியின்
செல்லப் பிள்ளை
மஞ்சனமாடச் செல்கின்றான் !

நம்மாழ்வாரின் காளை
மஞ்சனமாடச் செல்கின்றான் !

திருவனந்தபுரத்து செல்வன்
மஞ்சனமாடச் செல்கின்றான் !

பில்வமங்களரின் பகவான்
மஞ்சனமாடச் செல்கின்றான் !

குலசேகர வம்சத்தின்
காவலன் மஞ்சனமாடச் செல்கின்றான் !


ஸ்யானந்தூரத்தின்
ஆனந்தன்
மஞ்சனமாடச் செல்கின்றான் !

பெண்களை பேதையாக்கும்
பெண்பித்தன்
மஞ்சனமாடச் செல்கின்றான் !

பதினெட்டு அடி பக்தவத்ஸலன் 
மஞ்சனமாடச் செல்கின்றான் !

பிரியத்தின் பொக்கிஷம்
பிரியதர்ஷினியோடு
மஞ்சனமாடச் செல்கின்றான் !


அலங்கார பூஷிதன்
மஞ்சனமாடச் செல்கின்றான் !

அழகுப்பெட்டகம்
மஞ்சனமாடச் செல்கின்றான் !

முகத்திரை போடுபவர்களின்
முகமும் காதலில்
சிவக்க 
மஞ்சனமாடச் செல்கின்றான் !


பார்ப்பவர்களின்
பாபத்தை

கொள்ளையடிக்கும்
பவழத்தூண்
மஞ்சனமாடச் செல்கின்றான் !

கோபாலவல்லியின்
உள்ளத்தைக் 
கொள்ளை கொண்ட
கொள்ளைக்காரன்
மஞ்சனமாடச் செல்கின்றான் ! 


0 கருத்துகள்:

  © Blogger templates Newspaper III by Ourblogtemplates.com 2008

Back to TOP