ஆனந்தவேதம்

உனக்காக,உன் வாழ்க்கைக்காக,உன் ஆனந்தத்திற்காக...

இந்த வலைப்பதிவில் தேடு

புதன், 4 நவம்பர், 2009

நிவேதனம் செய் ! ! !



ராதேக்ருஷ்ணா


காலாற நடக்கலாமா ! பண்டரீபுரத்திற்கு
கிளம்பலாமா ! ஆஷாட சுத்த ஏகாதசிக்கு 
போகலாமா ! வார்கரி பக்தர்களோடு
சுமக்கலாமா !  ஞானதேவரின் பல்லக்கை

இறங்கலாமா ! சந்திரபாகாவில்
ஏறலாமா !  த்ருடமாக பக்தியில்
பயணிக்கலாமா ! பக்தர்களோடு படகில்
கடக்கலாமா ! பேராசைப் பெருங்கடலை

புகழலாமா !  புண்டலீகனின் வரத்தை
நிற்கலாமா  ! நீண்ட பக்தர் வரிசையில்
காத்திருக்கலாமா ! அபங்கத்தைப் பாடி
நர்த்தனமாடலாமா ! விட்டலனின் தியானத்தில்
 தெரியாமல் இடிப்போமா  ! மஹாத்மாக்களை


பற்றலாமா ! விட்டோபாவின் பாதங்களை
அழலாமா ! மனதார
உதறலாமா ! கோரமான சம்சார சாகரத்தை
மாறுவோமா ! செங்கல்லாக
நிற்கவைப்போமா ! ப்ரும்மாண்ட நாயகனை

கொஞ்சலாமா  ! ருக்குமாயியை
கெஞ்சலாமா  ! சத்யபாமாவிடத்தில்
தஞ்சமாவோமா  ! ராதிகா ராணியிடம்

கூடியாடுவோமா ! பாண்டுரங்கன் கோயிலில்
மறந்துவிடுவோமா ! எல்லா பேதங்களையும்

முழிக்கலாமா ! காகட ஆரத்திக்காக
துரத்தியடிக்கலாமா ! முன்வினையை

விழலாமா ! விஷ்ணு பாதத்தில்
ஒதுக்கலாமா ! காமங்களை
ஒதுங்கலாமா ! ரக்குமாயிபதியின் உள்ளத்தில்
  
நாமம் ஜபிக்கலாமா ! நாமதேவரின் வீட்டில்
  உட்காரலாமா ! அவர் திருமடியில்


பிடிக்கலாமா ! மரமான கானோபாத்ராவை
மூழ்கலாமா ! பக்தி வெள்ளத்தில்

   துணி நெய்யலாமா  ! கபீர்தாசரைப்போல்
தடுக்கலாமா ! பண்டரீநாதனின் ஆட்டத்தை

எழுந்திருக்கலாமா ! அர்த்த ராத்திரியில் 
 அடிக்கலாமா  ! குணாபாயியைப் போல்

கட்டிப் போடலாமா ! வீட்டுத் தூணில்
ஒடிப்போகலாமா  ! சக்குபாயைப் போல்

தம்பூராவை மீட்டலாமா ! விடியும்வரை பாட
துள்ளித் திரியலாமா ! துகாராமைப்போல்

கணவனாய் அடையலாமா ! விட்டலனின் பைத்தியத்தை
மாயனைத் திட்டலாமா  ! ஆவலியைப் போல்

ஒதுக்கப் படுவோமா ! ஊரைவிட்டு 
பாரணை செய்யலாமா ! சோகாமேளரைப் போல்

எல்லாவற்றையும் தரலாமா ! சத்குருவிற்கு
அடிமையாக்கலாமா  ! சத்ரபதி சிவாஜியைப்போல்

அளப்போமா ! அவன் இடுப்பை
 ஏமாறலாமா ! நரஹரியைப் போல்

செருப்பு தைக்கலாமா ! ரைதாஸரைப் போல்
 வேலைக்காரனாக்கலாமா ! ஓரிரவில்
  
ஊர்ந்து பார்க்கலாமா ! கூர்மதாசரைப் போல்
வரவைப்போமா ! நம் இடத்திற்கு

 சோளமாவைத் தரலாமா ! த்வாதசிக்கு
திவ்ய தம்பதியைப் பார்க்கலாமா ! கோமாபாயைப் போல் 

பக்தரை கவனிப்போமா ! சேனாநாவிதரைப் போல்
நாவிதனாக்கலாமா ! ராஜாதிராஜனை அரசனுக்கு

கையை இழக்கலாமா ! கோராகும்பரைப் போல்
தம்பியாக்கலாமா ! குடும்பத்தைக் கவனிக்க

விருந்தோம்பலாமா ! ராமதாஸரைப் போல்
  ராமனாக்கலாமா ! மாட்டுக்காரனை

ப்ரார்த்திக்கலாமா ! பூனைக் குடும்பத்திற்காக 
நிரூபிக்கலாமா ! ராகாகும்பாரைப் போல்


கணக்குப் பார்ப்போமா ! சரியாக வரும் வரை
 கங்கையைத் தரலாமா ! ஏகநாதரைப்போல்


பூ தொடுக்கலாமா ! சாவ்தாமாலியைப் போல்
 இதயம் தரலாமா ! எங்கும் நிறைந்தவனுக்கு 


யோகியாகலாமா ! ஞானேஸ்வரரைப் போல்
 உணரலாமா ! உள்ளத்துள் உறைபவனை 

கடன்காரனாகலாமா ! வயிறார உணவு தந்து
கடனைத் தீர்க்கவைக்கலாமா ! விசோபாவைப் போல்

கஞ்சனாவோமா ! பணத்தாசையினால்
பொறுப்பை விடுவோமா ! புரந்தரரைப் போல் 

 புதைந்து பார்க்கலாமா  ! கூபாகும்பரைப் போல்
வாழ்வோமா ! கிணற்றுக்குள் ரகசியமாக

தரித்திரனாகலாமா ! தானம் செய்து
கனவு காண்போமா ! தாமாஜீயைப் போல்
  
 அடம் பிடிக்கலாமா ! பானுதாசரைப் போல்
அழைத்துப் போகலாமா ! நாதனை அவனிடத்திற்கு !
  

அலையலாமா ! கோபால் பூரில்
அலம்பலாமா ! ஜனாபாயோடு பாத்திரங்களை
வம்பளக்கலாமா ! பண்டரீநாதனைப் பற்றி

பைத்தியமாகலாமா ! விட்டலனிடத்தில்
தேடலாமா ! அவனுக்குள் ஒரு இடத்தை
திரியலாமா ! விட்டலனின் வீதிகளில்

ராம் க்ருஷ்ண ஹரி சொல்வோமா !
வாசுதேவ ஹரியைப் பிடிப்போமா 


இத்தனையும் செய்யலாமா !

நிச்சயமாக இவையெல்லாம் கிடைக்குமா !

வழி உண்டு !
வெகு சுலபம் !




நிவேதனம் செய் - உன் வாழ்க்கையை



நீ செய்வாய் ! 
எனக்குத் தெரியும் ! ! ! 



0 கருத்துகள்:

  © Blogger templates Newspaper III by Ourblogtemplates.com 2008

Back to TOP