ஆனந்தவேதம்

உனக்காக,உன் வாழ்க்கைக்காக,உன் ஆனந்தத்திற்காக...

இந்த வலைப்பதிவில் தேடு

புதன், 25 நவம்பர், 2009

ஆனந்தவேதமாகட்டும் !



ராதேக்ருஷ்ணா

எதற்கும் அகம்பாவப்படாதே !

என்னைப்போல் அழகு யாருமில்லை
என்று நினைக்காதே !

என்னைப்போல் புத்திசாலியில்லை
 என்று நினைக்காதே !

 என்னைப்போல் படித்தவர்களில்லை
 என்று நினைக்காதே !

என்னைப்போல் சமையல் செய்ய
ஆளில்லை என்று நினைக்காதே !

என்னைப்போல் அழகாகக் கோலம் போடத் தெரியவேண்டுமென்று நினைக்காதே!

 என்னைப்போல் அமைதியாக இருக்கத் தெரியவில்லை என்று நினைக்காதே !

என்னைப்போல் சுத்தமாக இருக்க 
வேண்டாமா? என்று நினைக்காதே !

என்னைப்போல் ஒழுங்காக துணி உடுத்தத்
தெரியவில்லை என்று நினைக்காதே !

என்னைப்போல் எல்லோரிடமும்  அன்பு காட்டவேண்டாமா என்று நினைக்காதே!

என்னைப்போல் அடுத்தவர்களுக்கு
யார் உதவுகிறார்கள் ? என்று நினைக்காதே !

என்னைப்போல் வீட்டை சுத்தமாக
வைப்பவர்கள் யார்?என்று நினைக்காதே !


 நான் குழந்தைகளை நன்றாக
வளர்த்திருக்கிறேன்  என்று நினைக்காதே !

என்னைப்போல் பொறுப்பாக இருப்பவர்களுண்டா என்று நினைக்காதே !

எனக்கு இந்த விஷயங்கள்
அத்துப்படி என்று நினைக்காதே !

நான் மற்றவர்களுக்காக நிறைய
விஷயங்களை த்யாகம் செய்கின்றேன்
என்று நினைக்காதே !

என் குடும்பத்திற்காக நான் நிறையக்
கஷ்டப்பட்டிருக்கிறேன் என்று நினைக்காதே !

என்னைப்போல் உழைக்கிற இடத்தை
கோவிலாக யாரும் மதிப்பதில்லை
என்று நினைக்காதே !

என்னைப்போல் உபசரிக்க தெரிந்து
கொள்ளவேண்டும் என்று நினைக்காதே !

என்னைப்போல் ஒளிவு மறைவில்லாமல்
யாரிருக்கிறார்கள் என்று நினைக்காதே !

  என் குழந்தைகளைப்போல் உலகில்
யாருண்டு என்று நினைக்காதே !

என்னைப் போல் யார் அழகாக
நந்தவனம் வைத்திருக்கிறார்கள்
என்று நினைக்காதே !

எனக்கு ரொம்ப அற்புதமாக
பூத்தொடுக்கத்தெரியும் என்று நினைக்காதே !

எனக்கு எல்லா விஷயத்திலும்
நல்ல தைரியம் உண்டு என்று நினைக்காதே ! 
 
 என்னைப்போல் ஜாக்கிரதையாக
இருக்கவேண்டாமா என்று நினைக்காதே !

நான் அழகாக திட்டமிட்டு காரியங்கள்
செய்வேன் என்று நினைக்காதே ! 
 
 என் குடும்பத்திலேயே நான்மட்டும்தான்
வித்தியாசம் என்று நினைக்காதே !







நான் என் குடும்பத்தை ஒழுங்காக
நடத்துகின்றேன் என்று நினைக்காதே !

என்னைப்போல் நோயாளிகளை
நிதானமாக கவனிப்பார்களில்லை
என்று நினைக்காதே !
 
என்னைப்போல் விஷயங்களை
யதார்த்தமாக புரிந்துகொண்டு
நடக்கத்தெரியவேண்டும் 

என்று நினைக்காதே !

என்னுடைய சமயோசித புத்தியினால்
பெரிய ஆபத்து விலகியது
என்று நினைக்காதே !

எனக்கு நிறைய ஸ்லோகங்கள்
தெரியும் என்று நினைக்காதே !

நான் தினமும் விடாமல் பாராயணம் 
செய்கின்றேன் என்று நினைக்காதே ! 
  
நான் நிறைய நாம ஜபம்
செய்கின்றேன் என்று நினைக்காதே !

நான் தினமும் விடாமல் கோவிலுக்குப் போகின்றேன் என்று நினைக்காதே !

 என்னைப்போல் கோயிலில் யாரும்
கைங்கர்யம் செய்கிறார்கள்
என்று நினைக்காதே !

 இன்னும் சொல்லிக்கொண்டிருக்கலாம் !
உன்னால் தாங்கமுடியாது !

அதனால் இனி நான்தான், 
என்னைப் போல் என்ற எண்ணங்களை
 மாற்றிக்கொள் !

உன்னைவிட உயர்ந்தவர்கள்
உலகத்தில் கோடிபேர் உண்டு !

நீ எந்த விஷயத்தில் அகம்பாவப்படுகிறாயோ
அதுவே உனக்கு அடி கொடுக்கும் !

பகவானுக்குப் பிடிக்காதது
அகம்பாவமே !

க்ருஷ்ணன் க்ருபையின்றி
என்ன செய்துவிடுவாய் ?

தூங்கும்போது எப்படி
அகம்பாவமில்லாமல்
இருக்கிறாயோ அதுபோல்
விழித்துக்கொண்டிருக்கும் போதும்
இருக்க விடாது நாம ஜபம் செய் !

உன்னுடைய அத்தனை
நல்ல விஷயங்களும்
க்ருஷ்ணன் உனக்கிட்ட பிச்சை !

உன்னுடைய கெட்ட சிந்தனைகளும்,
காரியங்களும், முட்டாள்தனங்களுமே
உன்னுடையவை . . .

அதலால் அகம்பாவமே வேண்டாம் . . . 
 
உன் அகம்பாவம்தான்
உன்னுடைய சகல விதமான
துன்பங்களுக்கும் காரணம் . . .

அதனால் க்ருஷ்ணனிடம்
சரணாகதி செய்து
அகம்பாவ ராக்ஷசனை
வதம் செய்ய ப்ரார்த்தனை
செய் !

 அகம்பாவ ராக்ஷசன்
அழிந்து
உன் வாழ்க்கையே
ஆனந்தவேதமாகட்டும் !

 குருஜீஅம்மாவிடமும்,
க்ருஷ்ணனிடம் ப்ரார்த்திக்கிறேன் . . .
  
 

0 கருத்துகள்:

  © Blogger templates Newspaper III by Ourblogtemplates.com 2008

Back to TOP