ஆனந்தவேதம்

உனக்காக,உன் வாழ்க்கைக்காக,உன் ஆனந்தத்திற்காக...

இந்த வலைப்பதிவில் தேடு

வியாழன், 26 நவம்பர், 2009

உன் க்ருஷ்ணன் !



ராதேக்ருஷ்ணா


உன் க்ருஷ்ணன் 
உன்னுடனேயே
இருக்கின்றான் !



உன் க்ருஷ்ணன்
உன் கண்ணின் காணும் சக்தியாக
இருக்கின்றான் !

உன் க்ருஷ்ணன்
உன் காதின் கேட்கும் சக்தியாக
இருக்கின்றான் !

உன் க்ருஷ்ணன்
உன் மூக்கின் முகரும் சக்தியாக
இருக்கின்றான் !



உன் க்ருஷ்ணன்
உன் நாக்கின் ருசிக்கும் சக்தியாக
இருக்கின்றான !


உன் க்ருஷ்ணன்
உன் வாயின் பேசும் சக்தியாக
இருக்கின்றான் !


உன் க்ருஷ்ணன்
உன் தோலின் தொடு உணர்ச்சியாக
இருக்கின்றான் !


உன் க்ருஷ்ணன்
உன் மனதின் சிந்தனை சக்தியாக
இருக்கின்றான் !


உன் க்ருஷ்ணன்
உன் கைகளின் வேலை செய்யும்
சக்தியாக இருக்கின்றான் !


உன் க்ருஷ்ணன்
உன் கால்களின் நடையாக
இருக்கின்றான் !

உன் க்ருஷ்ணன்
உன் புத்திசாதுர்யமாக
இருக்கின்றான் !


உன் க்ருஷ்ணன்
உன்னுடைய பசியாக
இருக்கின்றான் !

உன் க்ருஷ்ணன்
உனக்கு ஆகாரமாக
இருக்கின்றான் !


உன் க்ருஷ்ணன்
உன்னுடைய ஜீரண சக்தியாக
இருக்கின்றான் !


உன் க்ருஷ்ணன்
உன் உடலின் நோய் எதிர்ப்பு
சக்தியாக இருக்கின்றான் !


உன் க்ருஷ்ணன்
உன் மனதில் அன்பாக
இருக்கின்றான் !


உன் க்ருஷ்ணன்
உன்னுடைய பரிவாக
இருக்கின்றான் !


உன் க்ருஷ்ணன்
உன்னுடைய உபகார 
சிந்தையாக இருக்கின்றான் !


உன் க்ருஷ்ணன்
உன்னுடைய திறமையாக
இருக்கின்றான் !


உன் க்ருஷ்ணன்
உன்னுடைய தூக்கமாக
இருக்கின்றான் !


உன் க்ருஷ்ணன்
உன் விழிப்பாக
இருக்கின்றான் !


உன் க்ருஷ்ணன்
உன்னைத் தூண்டும் சக்தியாக
இருக்கின்றான் !


உன் க்ருஷ்ணன்
உன் மூச்சுக்காற்றாக
இருக்கின்றான் !


உன் க்ருஷ்ணன்
உன்னுடைய தைரியமாக
இருக்கின்றான் !



உன் க்ருஷ்ணன்
உன்னுடைய நல்ல எண்ணங்களாக
இருக்கின்றான் !


உன் க்ருஷ்ணன்
உன்னடைய பொறுமையாக
இருக்கின்றான் !

உன் க்ருஷ்ணன்
உன்னுடைய தர்மத்திற்கு
விரோதமில்லாத காமமாக
இருக்கின்றான் !


உன் க்ருஷ்ணன்
உன் வம்சத்தை உற்பத்தி
செய்யும் சக்தியாக
இருக்கின்றான் !


உன் க்ருஷ்ணன்
உனக்குள் நம்பிக்கையாக
இருக்கின்றான் !


உன் க்ருஷ்ணன்
உன்னுடைய ஆனந்தமாக
இருக்கின்றான் !


உன் க்ருஷ்ணன்
உன்னுடைய நல்ல
பழக்கவழக்கங்களாக
இருக்கின்றான் !


உன் க்ருஷ்ணன்
உன்னுடைய நியாயமான
கோபமாக இருக்கின்றான் !


உன் க்ருஷ்ணன்
உன்னுடைய ரகசியமாக
இருக்கின்றான் !


உன் க்ருஷ்ணன்
உன் பலமாக
இருக்கின்றான் !


உன் க்ருஷ்ணன்
உன் உடலில்
ரத்தமாக 
ஓடிக்கொண்டிருக்கின்றான் !


உன் க்ருஷ்ணன்
உன்னுடைய
கள்ளமில்லாத
சிரிப்பாக இருக்கின்றான் !


உன் க்ருஷ்ணன்
உன்னுடைய
ஆனந்தக்கண்ணீராக
இருக்கின்றான் !

உன் க்ருஷ்ணன்
உன்னுடைய நாம ஜபமாக
இருக்கின்றான் !


உன் க்ருஷ்ணன்
உன்னுடைய பக்தியாக
இருக்கின்றான் !


உன் க்ருஷ்ணன்
உனக்குள்
அந்தர்யாமியாக
இருக்கின்றான் !


உன் க்ருஷ்ணன்
இப்படி பலவிதமாக
உன் கூடவேதான்
என்றும் இருக்கின்றான் !


அதனால் ஆனந்தமாகயிரு !
என்றும் ஆனந்தமாகயிரு !
எப்பொழுதும் ஆனந்தமாகயிரு !
எங்கும் ஆனந்தமாகயிரு !


இனி உன் வாழ்க்கையில்
ஆனந்தத்தைத் தவிர
வேறு எதுவுமே
இருக்கக்கூடாது !




0 கருத்துகள்:

  © Blogger templates Newspaper III by Ourblogtemplates.com 2008

Back to TOP