ஆனந்தவேதம்

உனக்காக,உன் வாழ்க்கைக்காக,உன் ஆனந்தத்திற்காக...

இந்த வலைப்பதிவில் தேடு

சனி, 28 நவம்பர், 2009

முடிவல்ல ஆரம்பம் ....


ராதேக்ருஷ்ணா


முடிவல்ல ஆரம்பம் ....




விடியலின் ஆரம்பத்தில்
இருளின் முடிவு . . .



பணிவின் ஆரம்பத்தில்
அகம்பாவத்தின் முடிவு . . .


தைரியத்தின் ஆரம்பத்தில்
பயத்தின் முடிவு . . .


சுறுசுறுப்பின் ஆரம்பத்தில்
சோம்பேறித்தனத்தின் முடிவு . . .


சத்தியத்தின் ஆரம்பத்தில்
பொய்யின் முடிவு . . .


உழைப்பின் ஆரம்பத்தில்
திருட்டுத்தனத்தின் முடிவு . . .


விளைச்சலின் ஆரம்பத்தில்
பசியின் முடிவு . . .



பொதுநலத்தின் ஆரம்பத்தில்
சுயநலத்தின் முடிவு . . .


பதிலின் ஆரம்பத்தில்
கேள்வியின் முடிவு . . .


தெளிவின் ஆரம்பத்தில்
சந்தேகத்தின் முடிவு . . .


விழிப்பின் ஆரம்பத்தில்
தூக்கத்தின் முடிவு . . .


நிதானத்தின் ஆரம்பத்தில்
அவசரத்தின் முடிவு . . .


தானத்தின் ஆரம்பத்தில்
கஞ்சத்தனத்தின் முடிவு . . .

அன்பின் ஆரம்பத்தில்
பிரிவினையின் முடிவு . . .


தீர்வின் ஆரம்பத்தில்
ப்ரச்சனைகளின் முடிவு . . .



தர்மத்தின் ஆரம்பத்தில்
அதர்மத்தின் முடிவு . . .



ஆனந்தத்தின் ஆரம்பத்தில்
துன்பத்தின் முடிவு . . .

ஆக்கத்தின் ஆரம்பத்தில்
அழிவின் முடிவு . . .

சத்சங்கத்தின் ஆரம்பத்தில்
வீழ்ச்சியின் முடிவு . . .



த்யானத்தின் ஆரம்பத்தில்
சஞ்சலத்தின் முடிவு . . .

பக்தியின் ஆரம்பத்தில்
குழப்பத்தின் முடிவு . . .


நாமஜபத்தின் ஆரம்பத்தில்
பாவத்தின் முடிவு . . .


ஞானத்தின் ஆரம்பத்தில்
அஞ்ஞானத்தின் முடிவு . . .

ப்ரேமையின் ஆரம்பத்தில்
காமத்தின் முடிவு . . .

சரணாகதியின் ஆரம்பத்தில்
  சம்சார சாகரத்தின் முடிவு . . .


குருக்ருபையின் ஆரம்பத்தில்
சகல துக்கங்களின் முடிவு . . .


அதனால் இனி முடிவை விட
ஆரம்பமே முக்கியம் . . .


இனி ஒன்றின் முடிவுக்கு
ஏங்குவதை விட்டுவிட்டு
எதன் ஆரம்பத்தில் 
அதன் முடிவு என்பதைக்
கண்டுபிடி . . .


உன் தேடலின் ஆரம்பத்தில்
உன் தொந்தரவுகளின் முடிவு . . .


இனி 
ஆரம்பத்தில் முடிவு . . .


அடுத்த ஆனந்தவேதத்தின் ஆரம்பத்தால்
இந்த ஆனந்தவேதத்தின் முடிவு . . .


இந்த ஆனந்தவேதத்தின் முடிவில்
உன்னுடைய புது சிந்தனையின் ஆரம்பம் . . .


எனவே
முடிவல்ல ஆரம்பமே . . .
மாற்றத்தின் ஆரம்பமே . . .


இன்றைய கைசிக,குருவாயூர்
ஏகாதசியின் ஆரம்பத்தில்,
பழைய பைத்தியக்காரச்
சிந்தனைகளின் முடிவு  . . .


உனக்கும் முடிவில்லை . . .
 உன் க்ருஷ்ணனுக்கும் முடிவில்லை . . .
உன் பக்திக்கும் முடிவில்லை . . .
உன் நாம ஜபத்திற்கும் முடிவில்லை . . .
உன் குரு க்ருபைக்கும் முடிவில்லை . . .


எனவே ஆனந்தத்தின் ஆரம்பமே . . .
இனி புது வாழ்வின் ஆரம்பமே . . .
முக்தியின் ஆரம்பமே . . .




பரமானந்த ரஹஸ்யத்தின் ஆரம்பமே . . .






0 கருத்துகள்:

  © Blogger templates Newspaper III by Ourblogtemplates.com 2008

Back to TOP