ஆனந்தவேதம்

உனக்காக,உன் வாழ்க்கைக்காக,உன் ஆனந்தத்திற்காக...

இந்த வலைப்பதிவில் தேடு

ஞாயிறு, 29 நவம்பர், 2009

க்ருஷ்ணனை நம்பு !


ராதேக்ருஷ்ணா


க்ருஷ்ணனை நம்பு ! 
க்ருஷ்ணனைப் புரிந்து கொள் !

க்ருஷ்ணன் உனக்கு  என்றுமே 
நல்லது மட்டுமே செய்கின்றான் !

க்ருஷ்ணனைத் தவிர
யார் உனக்கு என்ன
நல்லது செய்துவிட முடியும் ? ! ?

இன்று வரை நீ தான்
உனக்குக் கஷ்டத்தைக்
கொடுத்துக் கொண்டிருக்கிறாய் !

அதையும் தாண்டி
உன் க்ருஷ்ணன் உனக்கு
நல்லது மட்டும்தான் செய்கிறான் !

நீயே நினைத்தாலும் உன்னை
உன் க்ருஷ்ணன் உன்னை துக்கத்தில்
வாழ விடுவதில்லை !

நீ கேட்காவிட்டாலும் உன் 
க்ருஷ்ணன் உனக்கு
ஆனந்தத்தை மட்டுமே
தருகிறான்  !

நீ நம்பாவிட்டாலும் உன்
க்ருஷ்ணன் உன்னிடத்தில்
திடமான நம்பிக்கை
வைத்திருக்கிறான் !

நீ மறந்தாலும் உன்
க்ருஷ்ணன் உன்னை
ஒருநாளும் மறக்கப்
போவதில்லை !

நீ வெறுத்தாலும் உன்
க்ருஷ்ணன் உன்னை
ஒருபொழுதும்
வெறுக்கப் போவதில்லை !

நீயே துரத்தினாலும்
உன் க்ருஷ்ணன் 
உன்னைவிட்டு 
ஒரு சமயத்திலும்
விலகப்போவதில்லை ! 
 
 எத்தனை பேரிடத்தில்
எவ்வளவு ஆழமான
நம்பிக்கை வைத்திருக்கிறாய் !

உன் உடலுக்கு சுகம்
தருபவர்களை எத்தனை
த்ருடமாக நம்புகிறாய் . . .

வெளியூருக்குச் செல்லும்போது
அந்த வண்டியை ஓட்டுபவரை
எத்தனை அற்புதமாக
நம்புகிறாய் . . .

நீ அமரும் நாற்காலி
உன்னைத் தாங்கும் என்பதை
எத்தனை தைரியமாக
நம்புகிறாய் . . .

வீட்டைக் காக்கும்
வாலை ஆட்டிக்கொண்டுவரும்
நாயை எத்தனை சத்தியமாக
நம்புகிறாய் . . .

உனக்கு சம்மந்தமேயில்லாத
உணவு விடுதியின் உணவில்
விஷம் இருக்குமா என்று
சந்தேகமேபடாமல்
நிம்மதியாக நம்புகிறாய் . . .

இரவை நம்புகின்றாய் . . .
பகலை நம்புகின்றாய் . . .
சூரியனை நம்புகின்றாய் . . .
சந்திரனை நம்புகின்றாய் . . .
காற்றை நம்புகின்றாய் . . .
கடலை நம்புகின்றாய் . . .
செடியை நம்புகின்றாய் . . .
கொடியை நம்புகின்றாய் . . .
மரத்தை நம்புகின்றாய் . . .
பூட்டை நம்புகின்றாய் . . .
செருப்பை நம்புகின்றாய் . . .
துணியை நம்புகின்றாய் . . .
இரயில் சினேகத்தை நம்புகின்றாய் . . .
ஆகாயவிமானத்தை நம்புகின்றாய் . . .
மலரை நம்புகின்றாய் . . .
பணத்தை நம்புகின்றாய் . . .
வீட்டுமனையை நம்புகின்றாய் . . .
தங்கத்தை நம்புகின்றாய் . . .
வைரத்தை நம்புகின்றாய் . . .
சர்க்கரையை நம்புகின்றாய் . . .
உப்பை நம்புகின்றாய் . . .
மிளகாயை நம்புகின்றாய் . . .
விரல் நகத்தை நம்புகின்றாய் . . .
தலைமுடியை நம்புகின்றாய் . . .
துடைப்பத்தை நம்புகின்றாய் . . .
கடிகாரத்தை நம்புகின்றாய் . . .
தொலைபேசியை நம்புகின்றாய் . . .
பத்திரத்தை நம்புகின்றாய் . . . 
விளம்பரங்களை நம்புகின்றாய் . . .
விஞ்ஞானத்தை நம்புகின்றாய் . . . 
உன் கண்ணை நம்புகின்றாய் . . .
உன் காதை நம்புகின்றாய் . . .
உன் மூக்கை நம்புகின்றாய் . . .
உன் கையை நம்புகின்றாய் . . .
உன் வலியை நம்புகின்றாய் . . .
 உன் தலையணையை நம்புகின்றாய் . . .
உன் போர்வையை நம்புகின்றாய் . . .
உன் குளிர்சாதனப்பெட்டியை நம்புகின்றாய். . .
உன் நாக்கின் ருசியை நம்புகின்றாய் . . .
உன் காமத்தை நம்புகின்றாய் . . .
உனக்குப் பிடித்தவர்களை நம்புகின்றாய் . . .
உடல் வியாதியை நம்புகின்றாய் . . .
 அழியக்கூடிய உன் உடலை நம்புகின்றாய் . . .
உன் தன்னம்பிக்கையை நம்புகின்றாய் . . . 
உன் புத்தியை நம்புகின்றாய் . . .
உன் மனதை நம்புகின்றாய் . . .

 இன்னும் எத்தனையோ 
 கேவலங்களை அப்படியே
நம்புகின்ற உன்னால்
க்ருஷ்ணனை நம்பமுடியாதோ ! ? !

முடியும்...உன்னால் முடியும்...

உன்னால் க்ருஷ்ணனை 
நம்பவம் முடியும் . . .
உன்னால் க்ருஷ்ணனை
பார்க்கவும் முடியும் . . .
உன்னால் க்ருஷ்ணனுடன்
பேசவும் முடியும் . . .
உன்னால் க்ருஷ்ணனை
அனுபவிக்கவும் முடியும் . . .

க்ருஷ்ணனை நம்பித்தான் பாரேன் ! ! !

பிறகு பலருக்கு நீயே சொல்வாய் . . .
"க்ருஷ்ணனை நம்பு "





0 கருத்துகள்:

  © Blogger templates Newspaper III by Ourblogtemplates.com 2008

Back to TOP