ஆனந்தவேதம்

உனக்காக,உன் வாழ்க்கைக்காக,உன் ஆனந்தத்திற்காக...

இந்த வலைப்பதிவில் தேடு

வியாழன், 10 டிசம்பர், 2009

நீ அனுபவித்தால் !




ராதேக்ருஷ்ணா


நீ க்ருஷ்ணனை கர்பத்தில்
அனுபவித்தால்
உன்னை தேவகிக்குப் பிடிக்கும் !


நீ க்ருஷ்ணனை பிள்ளையாய்
அனுபவித்தால்
உன்னை வசுதேவருக்குப் பிடிக்கும்!


நீ க்ருஷ்ணனை குழந்தையாய்
அனுபவித்தால்
உன்னை யசோதைக்குப் பிடிக்கும் !


நீ க்ருஷ்ணனை மாட்டுக்காரனாக
அனுபவித்தால்
உன்னை நந்தகோபருக்குப் பிடிக்கும் !

நீ க்ருஷ்ணனை காதலனாய்
அனுபவித்தால்
உன்னை கோபிகைகளுக்குப் பிடிக்கும்!



நீ க்ருஷ்ணனை தகப்பனாக 
அனுபவித்தால்
உன்னை ருக்மிணிக்குப் பிடிக்கும் !




நீ க்ருஷ்ணனை பார்த்தசாரதியாய்
அனுபவித்தால்
உன்னை அர்ஜுனனுக்குப் பிடிக்கும்!

நீ க்ருஷ்ணனை நண்பனாய்
அனுபவித்தால்
உன்னை உத்தவருக்குப் பிடிக்கும் !


நீ க்ருஷ்ணனை தூதுவனாய்
அனுபவித்தால்
உன்னை பாண்டவர்களுக்குப் பிடிக்கும் !

நீ க்ருஷ்ணனை தெய்வமாய்
அனுபவித்தால்
உன்னை பீஷ்மருக்குப் பிடிக்கும் !


நீ க்ருஷ்ணனை கீதாசார்யனாக
அனுபவித்தால்
உன்னை சஞ்சயனுக்குப் பிடிக்கும் !


நீ க்ருஷ்ணனை ஆபத்பாந்தவனாக
அனுபவித்தால்
உன்னை த்ரௌபதிக்குப் பிடிக்கும் !

நீ க்ருஷ்ணனை ரங்கனாய்
அனுபவித்தால்
உன்னை ஆண்டாளுக்குப் பிடிக்கும்!

நீ க்ருஷ்ணனை நாராயணனாய்
அனுபவித்தால்
உன்னை ராமானுஜருக்குப் பிடிக்கும் !

நீ க்ருஷ்ணனை குருவாயூரப்பனாக
அனுபவித்தால்
உன்னை மஞ்சுளாவுக்குப் பிடிக்கும்!


நீ க்ருஷ்ணனை பாண்டுரங்கனாக
அனுபவித்தால்
உன்னை புண்டலீகனுக்குப் பிடிக்கும் !

நீ க்ருஷ்ணனை உடுப்பி க்ருஷ்ணனாக
அனுபவித்தால்
உன்னை கனகதாஸருக்குப் பிடிக்கும்!

நீ க்ருஷ்ணனை கிரிதாரியாக
அனுபவித்தால்
உன்னை மீராவுக்குப் பிடிக்கும் !


நீ க்ருஷ்ணனை ஸ்ரீ நாத்ஜீயாக
அனுபவித்தால்
உன்னை வல்லபாச்சார்யருக்குப் பிடிக்கும்!


நீ க்ருஷ்ணனை பூரி ஜகந்நாதனாக
அனுபவித்தால் உன்னை
க்ருஷ்ண சைதன்யருக்குப் பிடிக்கும்!


நீ க்ருஷ்ணனை ராஸநாயகனாக
அனுபவித்தால்
உன்னை ஜயதேவருக்குப் பிடிக்கும்!


நீ க்ருஷ்ணனை அனந்த பத்ம நாபனாக
அனுபவித்தால் உன்னை
மஹாராஜா ஸ்வாதித் திருநாளுக்குப்
பிடிக்கும் !


நீ க்ருஷ்ணனை ஸ்ரீமத் பாகவதமாக
அனுபவித்தால்
உன்னை சுகப்ரம்மரிஷிக்கும்ப் பிடிக்கும்!


நீ க்ருஷ்ணனை நாமஜபமாக
அனுபவித்தால்
உன்னை ஹரிதாஸ்யவனுக்குப் பிடிக்கும்!

நீ க்ருஷ்ணனை ராதிகாதாஸனாக
அனுபவித்தால்
உன்னை க்ருஷ்ணனுக்குப் பிடிக்கும் !


நீ க்ருஷ்ணனிடம் ப்ரேமையில்
உன்னையே கொடுத்து
அவன் இஷ்டப்படி வாழ்ந்தால்
உன்னை ராதிகாவுக்குப் பிடிக்கும் !


நீ ராதிகாவோடு க்ருஷ்ணனை
அனுபவித்தால்
உன்னை குருஜீஅம்மாவுக்குப் பிடிக்கும் !


நீ ராதேக்ருஷ்ணனை 
குருஜீ அம்மா சொல்படி
அனுபவித்தால்
உன்னை எனக்கு ரொம்பவே பிடிக்கும்!


உன்னிடத்தில் இத்தனைபேர்
ப்ரியம் வைக்கக் காத்திருக்க
நீ ஏன்
அல்ப மனிதர்களின்
வெளி வேஷமான
பொய்யான அன்பிற்காக
ஏங்குகிறாய் !!!


என்ன கொடுமை இது...

0 கருத்துகள்:

  © Blogger templates Newspaper III by Ourblogtemplates.com 2008

Back to TOP