ஆனந்தவேதம்

உனக்காக,உன் வாழ்க்கைக்காக,உன் ஆனந்தத்திற்காக...

இந்த வலைப்பதிவில் தேடு

செவ்வாய், 22 டிசம்பர், 2009

ராதே ராதே . . .





ராதேக்ருஷ்ணா


க்ருஷ்ண ப்ரிய ராதே ராதே

ப்ரேம ப்ரிய ராதே ராதே

பர்சானா தேவி ராதே ராதே

ப்ருந்தாவன ராணி ராதே ராதே

ராச லீலா ப்ரிய ராதே ராதே

சுந்தர மோஹன ராதே ராதே

சேவா குஞ்ச ப்ரிய ராதே ராதே

ராதே ராதே ராதே ராதே

ராச லீலா நாயகனின் தேடல்
ராதே  ராதே
  
ராஜாதி ராஜனின் தேவி
ராதே  ராதே

ஹே ராதே !
எனக்கும் உன்னைப் போல்
க்ருஷ்ண பக்தி
செய்ய ஆசை !
ராதே !


ஹே ராதே !
எனக்கும் உன்னைப் போல்
க்ருஷ்ணனிஷ்டமாக
வாழ ஆசை !
ராதே !


ஹே ராதே !
எனக்கும் உன்னைப் போல்
க்ருஷ்ண நாமத்தை
மூச்சுக்காற்றாக 
சுவாசிக்க ஆசை !
ராதே !


ஹே ராதே !
எனக்கும் உன்னைப் போல்
க்ருஷ்ணனின்
ஆடைகளை
உடுத்த ஆசை !
ராதே !


ஹே ராதே !
எனக்கும் உன்னைப் போல்
க்ருஷ்ணனால்
அலங்கரிக்கப்பட ஆசை !
ராதே !


ஹே ராதே !
எனக்கும் உன்னைப் போல்
க்ருஷ்ணனின் ஆலிங்கனத்தை
அனுபவிக்க ஆசை !
ராதே !


ஹே ராதே !
எனக்கும் உன்னைப் போல்
க்ருஷ்ணனின் அதராம்ருதத்தை
குடிக்க ஆசை !
ராதே !


ஹே ராதே !
எனக்கும் உன்னைப் போல்
க்ருஷ்ணனை
நெஞ்சில் சுமக்க ஆசை !
ராதே !


ஹே ராதே !
எனக்கும் உன்னைப் போல்
க்ருஷ்ணனின் மடியில்
தவழ ஆசை !
ராதே !


ஹே ராதே !
எனக்கும் உன்னைப் போல்
க்ருஷ்ணனின் கைகளில்
என்னைத் தர ஆசை !
ராதே !


ஹே ராதே !
எனக்கும் உன்னைப் போல்
க்ருஷ்ணனுக்கு
அன்போடு அழகான பூக்களால்
அர்ச்சிக்க ஆசை !
ராதே !


ஹே ராதே !
எனக்கும் உன்னைப் போல்
க்ருஷ்ணனை
ப்ரேமையில் 
கட்டிப்போட ஆசை !
ராதே !


ஹே ராதே !
எனக்கும் உன்னைப் போல்
க்ருஷ்ணனோடு
யமுனையில்
நீந்திக்களிக்க ஆசை !
ராதே !


ஹே ராதே !
எனக்கும் உன்னைப் போல்
க்ருஷ்ணனோடு
ஏகாந்தமாக
நிகுஞ்சத்தில்
விளையாட ஆசை !
ராதே !


ஹே ராதே !
எனக்கும் உன்னைப் போல்
க்ருஷ்ண
விரஹத்தில் துடிக்க ஆசை !
ராதே !


ஹே ராதே !
எனக்கும் உன்னைப் போல்
க்ருஷ்ணனை
மனதிற்குள்
பூட்டிவைக்க ஆசை !
ராதே !


ஹே ராதே !
எனக்கும் உன்னைப் போல்
க்ருஷ்ணன்
என்னை ரகசியமாக
அனுபவிக்க ஆசை !
ராதே !


ஹே ராதே !
எனக்கும் உன்னைப் போல்
பக்தர்களோடு
க்ருஷ்ணனை 
ரசிக்க ஆசை !
ராதே ! 


ஹே ராதே !
எனக்கும் உன்னைப் போல்
க்ருஷ்ண
சரண கமலத்தில்
சரணாகதியடைய ஆசை !
ராதே !


ஹே ராதே !
எனக்கும் உன்னைப் போல்
க்ருஷ்ணனின்
வேணு கானத்தில்
மயங்க ஆசை !
ராதே !


ஹே ராதே !
எனக்கும் உன்னைப் போல்
க்ருஷ்ணனின்
அன்புக்கு 
அடிமையாக ஆசை !
ராதே !


ஹே ராதே !
எனக்கும் உன்னைப் போல்
அகம்பாவமில்லாத
சுத்தமான ப்ரேமையில்
திளைக்க ஆசை !
ராதே !

  
ஹே ராதே !
எனக்கும் உன்னைப் போல்
க்ருஷ்ண நாமத்தைக்
கேட்டால்
மேனி சிலிர்க்க ஆசை !
ராதே !


ஹே ராதே !
எனக்கும் உன்னைப் போல்
உச்சத் தலையிலிருந்து
உள்ளங்கால் வரை,
மூச்சுக்காற்றிலிருந்து
உடம்பு வரை,
உள்ளத்திலிருந்து
ஆத்மா வரை, 
 தூக்கத்திலிருந்து
விழிப்பு வரை,
நினைவிலிருந்து
கனவு வரை,
தனிமையிலிருந்து
கூட்டம் வரை,
எங்கும்,எப்பொழுதும்
க்ருஷ்ணனை
காதலிக்க 
ஆசை !

ஆனால்
சத்தியமாக உன்னைப்போல்
ஒரு நாளும்
என்னால்
முடியவே முடியாது !

ஏனெனில் உன்
க்ருஷ்ணன்
சத்தியமாக
தன் 
இதயத்தில்
உனக்கென
தந்த இடத்தை
நிச்சயமாக
யாருக்கும்
தரவே மாட்டான் . . .

அதனால் என்னை
உன்
தாசியாக,
அடிமையாக,
சொத்தாக
ஆக்கிக்கொள் !

அது போதும் . . .

உன் வேலைக்காரியாய்
இருப்பதை விட
க்ருஷ்ண ப்ரேமை
ஒன்றும்
பெரிதுமில்லை...
சுகமுமில்லை...

தேவையுமில்லை... 
 

நான் ராதிகா தாசி
என்ற
ஒன்றிற்கே
உன்
க்ருஷ்ணன்
என்னையும்
கண்டுகொள்வான்  . . .

ஹே ராதே...
க்ருஷ்ணனின்
ஆனந்தவேதமே
நீ தான்
எனக்கு
ஆனந்தவேதம் . . .

தயவு செய்து
இந்த
அதம ஜீவனுக்கு,
தகுதியிருக்கிறதோ
இல்லையோ,
எந்த
ஜன்மத்திலும் உன்
திருவடி அருகில்
மட்டும்
வைத்துக்கொள் . . .


ராதே ராதே ராதே ராதே 
ராதே ராதே ராதே ராதே 
ராதே ராதே ராதே ராதே 
ராதே ராதே ராதே ராதே 
 
 
 
 


0 கருத்துகள்:

  © Blogger templates Newspaper III by Ourblogtemplates.com 2008

Back to TOP