ஆனந்தவேதம்

உனக்காக,உன் வாழ்க்கைக்காக,உன் ஆனந்தத்திற்காக...

இந்த வலைப்பதிவில் தேடு

வெள்ளி, 26 மார்ச், 2010

அமைதி எங்கே ?



ராதேக்ருஷ்ணா


எல்லோரும் அமைதியை
தேடிக் கொண்டிருக்கிறார்கள் !

நீயும் தேடிக்கொண்டிருக்கிறாய் !

அது உன் கூடவேதான் இருக்கிறது !

உன்னுள்ளேயேதான் இருக்கிறது !

வெளியில் இல்லை !

எந்தப் பொருளிலும் இல்லை !

யாரிடமும் இல்லை !

தினமும் நீ அந்த அமைதியை
அனுபவிக்கத் தான் செய்கிறாய் !

எப்பொழுது தெரியுமா ?

நீ உன்னையே மறந்து தூங்கும்போது . . .

ஆம் ! நீ எல்லாவற்றையும் விட்டுத்
தூங்கும்போது அத்தனை அமைதியாக இருக்கிறாய் !

ஏன் ? காரணம் தெரியுமா ?

நீ உன்னுடைய அகம்பாவத்தையும்,
மமகாரத்தையும் விட்டு விடுகிறாய் . . .

நல்ல தூக்கத்தில்
நீ ஆணா, பெண்ணா என்பதை
மறந்துவிடுகிறாய் !

நீ உன் வயதை மறந்து விடுகிறாய் !

உன் படிப்பை மறந்து விடுகிறாய் !

உன் பதவியை மறந்து விடுகிறய் !

உன் குலத்தை மறந்து விடுகிறாய் !

உனக்குப் பிடித்தவர்களை மறந்து விடுகிறாய் !

உனக்குப் பிடிக்காதவர்களை மறந்து விடுகிறாய் !

உனக்கு விருப்பமானதை மறந்து விடுகிறாய் !

உனக்கு விருப்பமில்லாததை மறந்து விடுகிறாய் !

உன் தேவைகளை மறந்து விடுகிறாய் !

உன் அவமானங்களை மறந்து விடுகிறாய் !

உன்னை அவமதித்தவர்களை மறந்து விடுகிறாய் !

உன் கோபத்தை மறந்து விடுகிறாய் !

உன் துக்கங்களை மறந்து விடுகிறாய் !

உன் மனதின் காயங்களை மறந்து விடுகிறாய் !

உன் மனதின் வலிகளை மறந்து விடுகிறாய் !

உன் பெருமையை மறந்து விடுகிறாய் !

உன் பிடிவாதத்தை மறந்து விடுகிறாய் !

உன் ஏக்கங்களை மறந்து விடுகிறாய் !

உன் காமத்தை மறந்து விடுகிறாய் !

உன் திமிரை மறந்து விடுகிறாய் !

உன் பயத்தை மறந்து விடுகிறாய் !

உன் ஆசைகளை மறந்து விடுகிறாய் !

உன் மொழியை மறந்து விடுகிறாய் !

உன் ஊரை மறந்து விடுகிறாய் !

உன் திட்டங்களை மறந்து விடுகிறாய் !

உன் தோல்விகளை மறந்து விடுகிறாய் !

உன் வெற்றிகளை மறந்து விடுகிறாய் !

உன் பந்தங்களை மறந்து விடுகிறாய் !

உன் ஏமாற்றங்களை மறந்து விடுகிறாய் !

உன் வளர்ச்சியை மறந்து விடுகிறாய் !

உன் பாவங்களை மறந்து விடுகிறாய் !

உன் நிலைமையை மறந்து விடுகிறாய் !

சீதோஷ்ண நிலையை மறந்து விடுகிறாய் !

உன்னைக் கஷ்டப்படுத்தினவர்களை மறந்து விடுகிறாய் !

உன் கஷ்டங்களை மறந்து விடுகிறாய் !

இந்த உலகத்தை மறந்து விடுகிறாய் !

நேரத்தை மறந்து விடுகிறாய் !

நீ இருக்கும் இருப்பை மறந்து விடுகிறாய் !

உன் உடலை மறந்து விடுகிறாய் !

உன் குரலை மறந்து விடுகிறாய் !

உன் அழகை மறந்து விடுகிறாய் !

உன் ஆகாரங்களை மறந்து விடுகிறாய் !

உன் உடைகளை மறந்து விடுகிறாய் !

உலகின் நிகழ்வுகளை மறந்து விடுகிறாய் !

உன் தைரியத்தை மறந்து விடுகிறாய் !

உன் பொறாமையை மறந்து விடுகிறாய் !

உன் உள்ளத்தை மறந்து விடுகிறாய் !

உன் சொத்தை மறந்து விடுகிறாய் !

உன் பொருட்களை மறந்து விடுகிறாய் !

உன் குடும்பத்தை மறந்து விடுகிறாய் !

உன் பசியை மறந்து விடுகிறாய் !

உன் ருசியை மறந்து விடுகிறாய் !

உன் மதிப்பை மறந்து விடுகிறாய் !

உன் வீட்டை மறந்து விடுகிறாய் !

உன் வண்ணத்தை மறந்து விடுகிறாய் !

உன் தெருவை மறந்து விடுகிறாய்!

உன் வரவை மறந்து விடுகிறாய் !

உன் செலவை மறந்து விடுகிறாய் !

உன் சேமிப்பை மறந்து விடுகிறாய் !

உன் உடல் அளவை மறந்து விடுகிறாய் !

உன் எடையை மறந்து விடுகிறாய் !

உன் இதயத்துடிப்பை மறந்து விடுகிறாய் !

உன் அலங்காரத்தை மறந்து விடுகிறாய் !

உன் கடந்த காலத்தை மறந்து விடுகிறாய் !

உன் எதிர்காலத்தை மறந்து விடுகிறாய் !

உன் கஞ்சத்தனத்தை மறந்து விடுகிறாய் !

உன் தாகத்தை மறந்து விடுகிறாய் !

உன் சௌகர்யங்களை மறந்து விடுகிறாய் !

உன் சுயநலத்தை மறந்து விடுகிறாய் !

இத்தனையையும் நீ மறப்பதால்
ஆனந்தத்தை உள்ளபடி அனுபவிக்கிறாய் !

மறக்கிறாய் என்றால் அவைகளை நீ
விட்டு விட்டாய் என்று அர்த்தமில்லை !

அவைகளின் மேல் இருக்கும்
உன் பந்தத்தை விட்டுவிடுகிறாய் !

அவைகளின் மேல் இருக்கும்
உன் அபிமானத்தை விட்டுவிடுகிறாய் !

நீ எதையும் நஷ்டப்படுவதில்லை !

நீ எதையும் இழக்கவில்லை !

எதுவும் உன்னை விட்டு விலகவில்லை !

உன் மனம் அவைகளிலிருந்து
விடுபடுகிறது !

நீ உன் வாழ்வின் பொறுப்பை
எடுத்துக்கொள்ளவில்லை !

அதனால் பொறுப்பில்லாமல்
இருக்கிறாய் என்று அர்த்தமில்லை !

உன் மனதில் பாதிப்பில்லாமல்
இருக்கிறாய் என்று அர்த்தம் !

இப்பொழுது உனக்குப் புரிந்திருக்குமே !

அதேபோல் சிறு வயதில்
மிகவும் சந்தோஷமாக இருந்ததாக
எல்லோரும் சொல்வர் !

அதுவும் உண்மைதான் !

சிறு வயதில் எல்லோருமே
மிகவும் சந்தோஷமாகத்தானே
இருந்தோம் !

ஏனெனில் நம் வாழ்வைப் பற்றி
நாம் கவலைப்படவில்லை !

நம் வாழ்வைப் பற்றி
நாம் கற்பனை செய்யவில்லை !

நம் வாழ்வைப் பற்றி
நாம் தீர்மானிக்கவில்லை !

ஆனால் வயது ஆக ஆக,
தானாக என் வாழ்க்கை,
என் இஷ்டம்,என் தேவை,
என் பெருமை,என் அவமரியாதை,
என்று பலவித
அஹம்பாவங்களும்,
மமகாரங்களும் வந்து
மனதில் ஒட்டிக்கொள்கின்றன !

அதுவே அமைதியைக் குலைக்கிறது !

சிறு குழந்தைகள் தூங்குவதைப்
பார்க்கும்போது
நமக்கே ஒரு சந்தோஷம் வருகின்றது !

ஏனெனில் குழந்தைகள்
விகல்பம் இல்லாமல் தூங்குகிறது !

தூங்கும்போது உலகில்
உள்ள அனைவருமே நல்லவர்களே !

கொலைகாரனும்,கொள்ளைக்காரனும் கூட
தூங்கும்போது யாருக்கும் ஒரு
கெடுதலும் செய்வதில்லை !

நீ உன்னை மற !
அதுவே அமைதியின் ரஹஸ்யம் !

நீ உன்னை தூக்கத்தில்
மறக்கிறாய் !

அதுபோல் முழித்திருக்கும்போதும்
உன்னை மறக்க ஒரே உபாயம்
நாம ஸங்கீர்த்தனமே !

எப்பொழுதும் விடாமல்
நீ
"க்ருஷ்ணா" என்று
சொல்லிக்கொண்டே வர தானாக
நீ உன்னை மறப்பாய் !

அதனால் பைத்தியம் ஆகி விடுவாய்
என்று நினைக்காதே !

அதனால் உன் பொறுப்புகளை
விட்டுவிடுவாய் என்று நினைக்காதே !

அதனால் உன் கடமைகளை
தள்ளிவிடுவாய் என்று நினைக்காதே !

உன் அபிமானத்தை விட்டு
நிம்மதியாக இருப்பாய் !

விடாது நாமஜபம் செய்தே
எத்தனையோ மஹாத்மாக்கள்
தங்கள் வாழ்க்கையை அமைதியாக
அனுபவித்தார்கள் !

அதனால் அமைதி உன்னிடத்தில்தான்
இருக்கிறது !

இனியும் வெளியில் அமைதியைத் தேடாதே !

உன்னோடு உன் க்ருஷ்ணன் இருக்கிறான் !
அவனிடத்தில் உன்னை ஒப்படைத்துவிடு !

உன்னை மறந்துவிடு . . .
அமைதியாக இரு . . .
அமைதியாக பேசு . . .
அமைதியாக வேலையைக் கவனி . . .
அமைதியாகக் கடமையைச் செய் . . .
அமைதியாக தூங்கு . . .
அமைதியாகப் பழகு . . .
அமைதியாக நட . . .
அமைதியாக வாழ் . . .

இனி சாந்தி நிலவட்டும் . . .

0 கருத்துகள்:

  © Blogger templates Newspaper III by Ourblogtemplates.com 2008

Back to TOP