ஆனந்தவேதம்

உனக்காக,உன் வாழ்க்கைக்காக,உன் ஆனந்தத்திற்காக...

இந்த வலைப்பதிவில் தேடு

செவ்வாய், 30 மார்ச், 2010

வேட்டையாடச் செல்கின்றான் !

ராதேக்ருஷ்ணா
 
வேட்டையாடச் செல்கின்றான் !
 
என் அனந்த பத்ம நாபன்
தீயவர்களை,தீமைகளை
வேட்டையாடச் செல்கின்றான் ! 
  
அகிலாண்ட கோடி
ப்ரும்மாண்ட நாயகன்
வேட்டையாடச் செல்கின்றான் !
 
  கலியுக வரதன்,
அனாதரக்ஷகன்,ஆபத் பாந்தவன்
வேட்டையாடச் செல்கின்றான் !
 
பக்தர்களைப் பாடாய்படுத்தும்,
கயவர்களை இல்லாமல் செய்ய
வேட்டையாடச் செல்கின்றான் !
 
 மேற்கு வாசல் வழியாக
வெளியில் வந்து,ஊரே
அமைதி காக்க
வேட்டையாடச் செல்கின்றான் !
 
பக்தர்களின் ப்ரார்த்தனையை
நிறைவேற்ற,வீதியில் இறங்கி
வேட்டையாடச் செல்கின்றான் !
 
பத்மநாப தாஸர்களின் பக்திக்காக,
கஜ ராணி ப்ரியதர்ஷினியின் பின்னே,
வேட்டையாடச் செல்கின்றான் !
 
இரண்யகசிபுவை கிழித்த நரசிம்மரோடு,
கோபிகைகளின் ப்ரேம ஸ்வரூபன் க்ருஷ்ணனோடு,
வேட்டையாடச் செல்கின்றான் !
 
ஒரு கையில் வில்லேந்தி,
ஒரு கையில் அம்பு கொண்டு,
வேட்டையாடச் செல்கின்றான் !
 
சர்வாபரண பூஷிதனாக,
சர்வ அலங்காரத்தோடு,
முத்து முத்தாய் வியர்வை
உடலெங்கும் துளிர்க்க
வேட்டையாடச் செல்கின்றான் !
 
ஆயிரம் கண் வேண்டுமே !
என் கண்மனி ராஜன்
ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ அனந்தபத்மநாபனைப் பார்க்க !
 
வா ! வா ! வா !
வாழ்வில் ஒரு முறையாவது
என் காதலன்
அனந்த பத்ம நாபன்
வேட்டையாடும் அழகை அனுபவிக்க, வா ! 
 
சரி ! 
நான் கிளம்புகிறேன் !
 
போய் தரிசனம் செய்துவிட்டு
வந்து
அந்த ஆனந்தத்தை உனக்கும் சொல்கிறேன் !
 
அதுவரை நீ விடாமல்
நாம ஜபம் செய் !
 
என் பத்மநாபனை நினை !
 
இதோ ! என் ப்ரபு !
என் ஸ்வாமி !
தயாராகிவிட்டான் !
 
வேட்டையாட தயாராகி விட்டான் !
 
 

0 கருத்துகள்:

  © Blogger templates Newspaper III by Ourblogtemplates.com 2008

Back to TOP