ஆனந்தவேதம்

உனக்காக,உன் வாழ்க்கைக்காக,உன் ஆனந்தத்திற்காக...

இந்த வலைப்பதிவில் தேடு

சனி, 18 செப்டம்பர், 2010

எல்லை . . .

ராதேக்ருஷ்ணா

எல்லை . . .

எல்லா எல்லைகளையும்
உடைத்தெறி . . .

எல்லா எல்லைகளையும்
தாண்டி வா . . .

எல்லா எல்லைகளையும்
மாற்றி அமை . . .

எல்லா எல்லைகளையும்
வீசி எறி . . .

உனக்கு மொழியும் எல்லையில்லை !

உனக்கு வயதும் எல்லையில்லை !

உனக்கு குடும்பமும் எல்லையில்லை ! 

உனக்கு வீடும் எல்லையில்லை ! 

உனக்கு ஊரும் எல்லையில்லை !

உனக்கு தேசமும் எல்லையில்லை !

உன் பாலினமும் எல்லையில்லை !

உனக்கு ஜாதியும் எல்லையில்லை !

உனக்கு குலமும் எல்லையில்லை !

உனக்கு மதமும் எல்லையில்லை !

உனக்கு சொத்தும் எல்லையில்லை !

உனக்கு படிப்பும் எல்லையில்லை !

உனக்கு கனவுகளும் எல்லையில்லை !

உனக்கு பயமும் எல்லையில்லை !

உனக்கு பலவீனமும் எல்லையில்லை !

உனக்கு பகலும் எல்லையில்லை !

உனக்கு இரவும் எல்லையில்லை ! 

உனக்கு நேரமும் எல்லையில்லை !

உனக்கு விதியும் எல்லையில்லை !

உனக்கு ராசியும் எல்லையில்லை !

உனக்கு பெயரும் எல்லையில்லை !

உனக்கு குடும்பமும் எல்லையில்லை !

உனக்கு பூமியும் எல்லையில்லை !

உனக்கு கடலும் எல்லையில்லை !

உனக்கு சந்திரனும் எல்லையில்லை !

உனக்கு சூரியனும் எல்லையில்லை !

உனக்கு வானமும் எல்லையில்லை ! 

 நீ தான் எல்லையை வைத்துக்கொண்டிருக்கிறாய் !

நீ தான் எல்லையை நிர்ணயம் செய்திருக்கிறாய் !

ஒன்றை நீ தெளிவாகப் புரிந்துகொள் !

உனக்கு ஒரு எல்லையுமில்லை !

க்ருஷ்ணனும் எல்லையில்லாதவன் !

உனக்கும் எல்லையில்லை !

பிறகு ஏன் உன் வாழ்வில்
இத்தனை எல்லைகள் !

ஒவ்வொரு எல்லையும் உன்
வாழ்வை தீர்மானிக்கின்றதே ?

உன் வாழ்வை பல எல்லைகள்
தடை செய்கின்றனவே ?

உண்மையை சொல்லவா . . .

நிஜமாகவே யாரும் உன்னை
தடைசெய்யவில்லை . . .

உனக்கு யாருமே எல்லையை
நிர்ணயிக்கவில்லை . . .

உன் மனமே உன் வாழ்வின் எல்லை . . .



எங்கெல்லாம் நீ எல்லையை
உணர்கிறாயோ,காண்கிறாயோ,
அங்கெல்லாம் உன் மனமே
உனக்கு எல்லை என்பதை புரிந்துகொள் !

உன் மனதிலுள்ள எல்லா
எல்லைகளையும் அழித்துவிட்டு
வாழ்வைப் பார் . . .

உன் வாழ்விற்கும் எல்லையில்லை !

வாழ்க்கைக்கு எல்லையில்லாததால்
உன் சிந்தனைக்கும் எல்லையில்லை !

சிந்தனைக்கு எல்லையில்லாததால்
உனக்கு வாய்ப்புகளுக்கும் எல்லையில்லை !

வாய்ப்புகளுக்கு எல்லையில்லாததால்
வெற்றிகளுக்கும் எல்லையில்லை !

வெற்றிகளுக்கு எல்லையில்லாததால்
 உன் ஆனந்தத்திற்கும் எல்லையில்லை !

எல்லையில்லாத ஆனந்தத்தை
அனுபவி !

அதை எல்லை வைக்காமல்
எல்லோருக்கும் கொடு !

உலகின் ஆனந்த எல்லையை மாற்று . . .

உலகின் சிந்தனை எல்லையை சரிசெய் . . .

உலகின் எல்லைகளை அழித்துவிடு . . .

இனி ஒரு எல்லையுமில்லை . . .





0 கருத்துகள்:

  © Blogger templates Newspaper III by Ourblogtemplates.com 2008

Back to TOP