ஆனந்தவேதம்

உனக்காக,உன் வாழ்க்கைக்காக,உன் ஆனந்தத்திற்காக...

இந்த வலைப்பதிவில் தேடு

புதன், 27 அக்டோபர், 2010

திருமலை . . .

ராதேக்ருஷ்ணா

திருமலை !

எங்கள் ஸ்ரீநிவாஸன் வாழும் மலை !

அழகு வராஹமூர்த்தியின் சொந்த மலை !

அன்பு அலர்மேல்மங்காவின் லீலா மலை !

செடியாய வல்வினைகள்
தீர்க்கும் திருமாலின் திருமலை !  

ஸ்வாமி நம்மாழ்வார் மேனி
சிலிர்த்த உன்னத மலை !

குலசேகர ஆழ்வார் படியாய்
கிடந்து பவளவாய் காண 
ஆசைப்பட்ட மலை !

ஸ்ரீநிவாஸனின் தாயாராய்
யசோதாவும் வகுளமாலிகாவாக
கைங்கர்யம் செய்யும் மலை !

சகலவிதமான பாபங்களையும்
நாசம் செய்யும்
வேங்கடாத்ரி மலை !

பகவான் தங்குவதற்காக
ஆதிசேஷனும் தானே மலையான
சேஷாத்ரி மலை !

வேதங்கள் எல்லாம் மலையாய்
பகவானை ஸ்தோத்திரம் செய்யும்
வேதாத்ரி மலை !

திருமாலுக்காக கருடனும்
ஆசை ஆசையாய் தூங்கி வந்த
கருடாத்ரி மலை !

வ்ருஷபாத்ரனும் பெருமாளின்
அனுக்ரஹத்தில் மோக்ஷம் அடைந்த
வ்ருஷபாத்ரி மலை !

அஞ்சனாதேவியும் நல்ல புத்திரன்
வேண்டி தவமிருந்து ஆஞ்சனேயரைப் பெற்ற
அஞ்சனாத்ரி மலை !

ஆதிசேஷனும்,வாயு தேவனும்
பகவானின் அருளால் ஆனந்தமடைந்த
ஆனந்தாத்ரி மலை !


ரிஷிகளும்,ஞானிகளும்,
தேவர்களும் கைங்கர்யம் செய்யும் மலை ! 

 தொண்டைமான் சக்ரவர்த்தி
தொழுத புண்ணிய மலை ! 

பெரியதிருமலை நம்பிகள்
கைங்கர்யம் செய்த மலை ! 

காரேய் கருணை இராமானுஜன்
முட்டிக்கால்போட்டு ஏறின மலை !

இன்னும் மலை ஏறவில்லை . . .




அன்னமாச்சார்யாரும் விதவிதமாய்
பாடிப் பரவசப்பட்ட மலை !


புரந்தரதாசரும் தன்னை மறந்து
கதறி அழுது ஆனந்தப்பட்ட மலை !


 பலராமரும்,விதுரரும் தீர்த்தயாத்ரையாக
வந்து தவமிருந்து மெய்சிலிர்த்த மலை !


அனந்தாழ்வான் தனது கடப்பாறையினால்
ஸ்ரீநிவாஸனின் முகத்தை பதம்பார்த்த மலை !


அனந்தாழ்வானின் மனைவி நிறைமாத
கர்ப்பிணியாய் கைங்கர்யம் செய்ய ஏறின மலை !


நிகமாந்த மஹா தேசிகரும்
கண்ணன் அடியினை காட்டும்
என்று பாசுரமிட்ட ஏழுமலை !


ஹாதிராம் பாவாஜீயும் ஸ்ரீநிவாஸனோடு
சொக்கட்டான் ஆடின அற்புத மலை ! 


வானவரும்,மன்னவரும்,இல்லாதவரும்,
குழந்தைகளும்,முதியோர்களும்,ஆடவரும்,
பெண்டிரும்,பக்தரும்,மற்றவரும்
ஏறும் உன்னத மலை . . .


திருவேங்கடமாமலை ஒன்றுமே
தொழ நம் வினை ஓயுமே . . .


எங்களையும் ஸ்ரீநிவாஸன்
தொழவைத்தார் . . .
இன்னும் நம்பமுடியவில்லை . . .
திருமலை சென்றோம் . . .
திருமலையில் ஏறினோம் . . .
திருமலையில் இருந்தோம் . . . 
  
தொழுதோம் . . .தொழுதோம் . . . தொழுதோம் . . .
ஏழுமலையையும் தொழுதோம் . . .
ஏழுமலையானையும் தொழுதோம் . . . 


ஸ்ரீநிவாஸா ! கோவிந்தா !
ஸ்ரீவேங்கடேசா ! கோவிந்தா !


 இன்னும் முடியவில்லை . . .
திருமலை அனுபவங்களை
நான் சொல்லி முடியவில்லை . . .


ஆனால் அதற்கு அடுத்த
ஆனந்தவேதம் வரை காத்திரு . . .
அதுவரை
கோவிந்தா கோவிந்தா
என்று அழைத்துக்கொண்டேயிரு . . .

0 கருத்துகள்:

  © Blogger templates Newspaper III by Ourblogtemplates.com 2008

Back to TOP