ஆனந்தவேதம்

உனக்காக,உன் வாழ்க்கைக்காக,உன் ஆனந்தத்திற்காக...

இந்த வலைப்பதிவில் தேடு

வெள்ளி, 12 நவம்பர், 2010

வேட்டைக்கு போவோமா ? ! ?

ராதேக்ருஷ்ணா !


வேட்டைக்கு போவோமா ?


துன்பத்தை மறப்போமா ?

வியர்வையில் நனைவோமா ?

சப்தமின்றி நடப்போமா ?

 உத்தாரடம் திருநாள் ராஜாவோடு செல்வோமா ?

நம்மையே இழப்போமா ?

ஆனந்தத்தில் திளைப்போமா ?

 பாவத்தை கொல்வோமா ?

புண்ணியத்தை சம்பாதிப்போமா ?

தேவரை வெறுப்பேற்றுவோமா ?

அசுரரை துரத்துவோமா ?

அகம்பாவத்தை வதைப்போமா ?

மமகாரத்தைக் கொல்வோமா ?

பக்தி மீது சவாரி செய்யலாமா ?

ஞானத்தை பிடிக்கலாமா ?

வைராக்யத்தை கட்டலாமா ?



இருளில் ஒளி பெறுவோமா ?

கூடியிருந்து குளிருவோமா ?

உலகையே மறப்போமா ?

சங்கீர்த்தனம் செய்வோமா ?

ப்ரார்த்தனை பண்ணலாமா ?

கண்ணார ரசிப்போமா ?

புன்னை மர இலையை பறிப்போமா ?

ஸ்ரீ அனந்தபத்மநாபனின் திருவடியில்
சரணாகதி செய்வோமா ?

வாழ்வையே வெல்வோமா ?

அப்படியெனில்
உடனே புறப்பட்டு திருவனந்தபுரம் வா . . .

இன்று இரவு
ஸ்ரீ அனந்த பத்ம நாப ஸ்வாமி
வேட்டைக்கு வருகிறார் . . .வருகிறார். . . வருகிறார் . . .
 
 

0 கருத்துகள்:

  © Blogger templates Newspaper III by Ourblogtemplates.com 2008

Back to TOP