ஆனந்தவேதம்

உனக்காக,உன் வாழ்க்கைக்காக,உன் ஆனந்தத்திற்காக...

இந்த வலைப்பதிவில் தேடு

செவ்வாய், 16 நவம்பர், 2010

தவறில்லை . . .

ராதேக்ருஷ்ணா

பேசுவது தவறில்லை . . .
ஆனால் எதைப்பற்றி பேசுகிறாய்
என்பது முக்கியம் . . .


கேட்பது தவறில்லை . . .
ஆனால் என்ன கேட்கின்றாய்
என்பது முக்கியம் . . .

நினைப்பது தவறில்லை . . .
ஆனால் எதைப்பற்றி நினைக்கிறாய்
என்பது முக்கியம் . . .


படிப்பது தவறில்லை. . .
ஆனால் எதைப்பற்றி படிக்கின்றாய்
என்பது முக்கியம் . . .


எழுதுவது தவறில்லை . . .
ஆனால் எதைப்பற்றி எழுதுகின்றாய்
என்பது முக்கியம் . . .


சொல்வது தவறில்லை . . .
ஆனால் என்ன சொல்கின்றாய்
என்பது முக்கியம் . . .


பழகுவது தவறில்லை . . .
ஆனால் யாரோடு பழகுகின்றாய்
என்பது முக்கியம் . . .


பார்ப்பது தவறில்லை . . .
ஆனால் என்ன பார்க்கின்றாய்
என்பது முக்கியம் . . .


செய்வது தவறில்லை . . .
ஆனால் என்ன செய்கின்றாய்
என்பது முக்கியம் . . .

சிரிப்பது தவறில்லை . . .
ஆனால் எதற்க்காக சிரிக்கின்றாய்
என்பது முக்கியம் . . .


அழுவது தவறில்லை . . .
ஆனால் என்ன காரணத்திற்க்காக
அழுகின்றாய் என்பது முக்கியம் . . .


போட்டி போடுவது தவறில்லை . . .
ஆனால் எதற்காக போட்டி
போடுகின்றாய் என்பது முக்கியம் . . .


சண்டையிடுவது தவறில்லை . . .
ஆனால் ஏன் சண்டை
போடுகின்றாய் என்பது முக்கியம் . . .

யோசிப்பது தவறில்லை . . .
ஆனால் எப்படி யோசிக்கிறாய்
என்பது முக்கியம் . . .

உதவுவது தவறில்லை . . .
ஆனால் என்ன உதவி செய்கிறாய்
என்பது முக்கியம் . . .

பிடிவாதம் தவறில்லை . . .
ஆனால் எதற்கு பிடிவாதம்
பிடிக்கிறாய் என்பது முக்கியம் . . .

செலவழிப்பது தவறில்லை . . .
ஆனால் எதற்கு செலவு செய்கின்றாய்
என்பது முக்கியம் . . .

 போனது போகட்டும் . . .

விடு . . .

இனி வாழ்வில் தவறில்லாமல் வாழ் . . .

தவறோடு வாழ்ந்தால்
உனக்கும் நிம்மதியில்லை . . .
உன் க்ருஷ்ணனுக்கும் நிம்மதியில்லை . . .

உன்னால் முடியும் . . .
முயற்சி செய் . . .
க்ருஷ்ணன் உன்னோடு இருக்கிறான் . . .

உன் வாழ்க்கையை
ஒழுங்காக வாழவேண்டும்
என்று நீ நினைப்பதில்
தவறில்லை . . . .

 

0 கருத்துகள்:

  © Blogger templates Newspaper III by Ourblogtemplates.com 2008

Back to TOP