ஆனந்தவேதம்

உனக்காக,உன் வாழ்க்கைக்காக,உன் ஆனந்தத்திற்காக...

இந்த வலைப்பதிவில் தேடு

ஞாயிறு, 31 ஜனவரி, 2010

மீண்டும் ஒரு முறை !


ராதேக்ருஷ்ணா

ஜனனம் என்பது உலகில்
தினம் தினம்
நிகழும் ஒரு அற்புதம் !

பகவானுடைய அருளினால்
மட்டுமே உலகில் உள்ள
பல ஜீவராசிகளின் வம்சம்
வளர்கிறது !

அவனுடைய அனுக்ரஹத்தை
வாங்கி அனுபவிக்க நாம்
விடாமல் ப்ரார்த்தனை
செய்யவேண்டும் !

அதிலும் மனித உருவில்
பல சந்தர்ப்பங்களில்
மஹாத்மாக்களும், மஹதிகளும்
அவதாரம்
செய்து கொண்டேயிருக்கிறார்கள் !

எத்தனையோ பக்தர்களும்,
பக்தைகளும் இந்த பூமியில்
அவதாரம் செய்தார்கள் !

அவர்கள் அத்தனைபேரையும்
சரித்திரமாகத் தான் நாம்
இன்று அனுபவிக்கிறோம் !

உன்னதமான பக்தி உள்ளவர்களுக்கு
மஹாத்மாக்கள், மஹதிகள்
ப்ரத்யக்ஷத்திலோ,கனவிலோ
தினமும் தரிசனம் தருகிறார்கள் !

எனக்கு ஒரு ஆசை !
எனக்கு ஒரு ப்ரார்த்தனை !
எனக்கு ஒரு தேடல் !

மீண்டும் ஒரு முறை
பக்த கூட்டம் பூமியில்
வரவேண்டும் . . .

அகம்பாவத்தை ஒழித்த
விதுரர்
மீண்டும் ஒரு முறை
இங்கு அவதரிக்கவேண்டும் !
க்ருஷ்ணா அருள் செய் . . .
ராதே ஆசீர்வாதம் செய் . . .

சஹஸ்ர நாமம் ஜபித்த
பீஷ்மபிதாமஹர்
மீண்டும் ஒரு முறை
இங்கு அவதரிக்கவேண்டும் !
க்ருஷ்ணா அருள் செய் . . .
ராதே ஆசீர்வாதம் செய் . . .

ஸ்ரீ மத் பகவத் கீதையைக் கேட்ட
அர்ஜுனன்
மீண்டும் ஒரு முறை
இங்கு அவதரிக்கவேண்டும் !
க்ருஷ்ணா அருள் செய் . . .
ராதே ஆசீர்வாதம் செய் . . .

கோபிகைகளிடம் தூது சென்ற
உத்தவர்
மீண்டும் ஒரு முறை
இங்கு அவதரிக்கவேண்டும் !
க்ருஷ்ணா அருள் செய் . . .
ராதே ஆசீர்வாதம் செய் . . .

க்ருஷ்ணனை வயிற்றில் சுமந்த
தேவகி
மீண்டும் ஒரு முறை
இங்கு அவதரிக்கவேண்டும் !
க்ருஷ்ணா அருள் செய் . . .
ராதே ஆசீர்வாதம் செய் . . .

க்ருஷ்ணனை பிள்ளையாய் பெற்ற
வசுதேவர்
மீண்டும் ஒரு முறை
இங்கு அவதரிக்கவேண்டும் !
க்ருஷ்ணா அருள் செய் . . .
ராதே ஆசீர்வாதம் செய் . . .

க்ருஷ்ணனுக்குத் தாய்ப்பால் தந்த
யசோதை
மீண்டும் ஒரு முறை
இங்கு அவதரிக்கவேண்டும் !
க்ருஷ்ணா அருள் செய் . . .
ராதே ஆசீர்வாதம் செய் . . .

க்ருஷ்ணனுக்குப் பிடித்த
நந்தகோபர்
மீண்டும் ஒரு முறை
இங்கு அவதரிக்கவேண்டும் !
க்ருஷ்ணா அருள் செய் . . .
ராதே ஆசீர்வாதம் செய் . . .

க்ருஷ்ணனை ஸ்தோத்திரம் செய்த
குந்திதேவி
மீண்டும் ஒரு முறை
இங்கு அவதரிக்கவேண்டும் !
க்ருஷ்ணா அருள் செய் . . .
ராதே ஆசீர்வாதம் செய் . . .

க்ருஷ்ணனோடு ராசம் ஆடிய
கோபிகைகள்
மீண்டும் ஒரு முறை
இங்கு அவதரிக்கவேண்டும் !
க்ருஷ்ணா அருள் செய் . . .
ராதே ஆசீர்வாதம் செய் . . .

க்ருஷ்ணனோடு வெண்ணை திருடிய
கோப குழந்தைகள்
மீண்டும் ஒரு முறை
இங்கு அவதரிக்கவேண்டும் !
க்ருஷ்ணா அருள் செய் . . .
ராதே ஆசீர்வாதம் செய் . . .

க்ருஷ்ணனுக்கு மாலை தந்த
மாலாகாரன்
மீண்டும் ஒரு முறை
இங்கு அவதரிக்கவேண்டும் !
க்ருஷ்ணா அருள் செய் . . .
ராதே ஆசீர்வாதம் செய் . . .

க்ருஷ்ணனை கன்றாக அனுபவித்த
கோமாதாக்கள்
மீண்டும் ஒரு முறை
இங்கு அவதரிக்கவேண்டும் !
க்ருஷ்ணா அருள் செய் . . .
ராதே ஆசீர்வாதம் செய் . . .


க்ருஷ்ணனையே அனுபவித்த
ஸ்வாமி நம்மாழ்வார்
மீண்டும் ஒரு முறை
இங்கு அவதரிக்கவேண்டும் !
க்ருஷ்ணா அருள் செய் . . .
ராதே ஆசீர்வாதம் செய் . . .

க்ருஷ்ணனை குழந்தையாக அனுபவித்த
பெரியாழ்வார்
மீண்டும் ஒரு முறை
இங்கு அவதரிக்கவேண்டும் !
க்ருஷ்ணா அருள் செய் . . .
ராதே ஆசீர்வாதம் செய் . . .

க்ருஷ்ணனை காதலனாக அனுபவித்த
எங்கள் ஆண்டாள்
மீண்டும் ஒரு முறை
இங்கு அவதரிக்கவேண்டும் !
க்ருஷ்ணா அருள் செய் . . .
ராதே ஆசீர்வாதம் செய் . . .

பலராமனாய் வந்த ஆதிசேஷனாகிய
ராமானுஜன்
மீண்டும் ஒரு முறை
இங்கு அவதரிக்கவேண்டும் !
க்ருஷ்ணா அருள் செய் . . .
ராதே ஆசீர்வாதம் செய் . . .

க்ருஷ்ணப்ரிய கோபியான
மீரா தேவி
மீண்டும் ஒரு முறை
இங்கு அவதரிக்கவேண்டும் !
க்ருஷ்ணா அருள் செய் . . .
ராதே ஆசீர்வாதம் செய் . . .

க்ருஷ்ண ப்ரேம ரசிகையான
ஜனாபாய்
மீண்டும் ஒரு முறை
இங்கு அவதரிக்கவேண்டும் !
க்ருஷ்ணா அருள் செய் . . .
ராதே ஆசீர்வாதம் செய் . . .

க்ருஷணனுக்கு இதயத்தைத் தந்த
சாவ்தாமாலி
மீண்டும் ஒரு முறை
இங்கு அவதரிக்கவேண்டும் !
க்ருஷ்ணா அருள் செய் . . .
ராதே ஆசீர்வாதம் செய் . . .

க்ருஷ்ணனோடு கோலிகுண்டு விளையாடிய
கோவிந்ததாஸர்
மீண்டும் ஒரு முறை
இங்கு அவதரிக்கவேண்டும் !
க்ருஷ்ணா அருள் செய் . . .
ராதே ஆசீர்வாதம் செய் . . .

க்ருஷ்ண ப்ரேம ரஹஸ்யம் சொன்ன
ஸ்ரீ க்ருஷ்ண சைதன்ய மஹாப்ரபு
மீண்டும் ஒரு முறை
இங்கு அவதரிக்கவேண்டும் !
க்ருஷ்ணா அருள் செய் . . .
ராதே ஆசீர்வாதம் செய் . . .

க்ருஷ்ண லீலையில் திளைத்த
சூரதாஸர்
மீண்டும் ஒரு முறை
இங்கு அவதரிக்கவேண்டும் !
க்ருஷ்ணா அருள் செய் . . .
ராதே ஆசீர்வாதம் செய் . . .

க்ருஷ்ணனைத் திரும்பி நிற்கவைத்த
கனகதாசர்
மீண்டும் ஒரு முறை
இங்கு அவதரிக்கவேண்டும் !
க்ருஷ்ணா அருள் செய் . . .
ராதே ஆசீர்வாதம் செய் . . .

க்ருஷ்ணனை சாக்ஷி சொல்ல வைத்த
கல்யாண ப்ரம்மச்சாரி
மீண்டும் ஒரு முறை
இங்கு அவதரிக்கவேண்டும் !
க்ருஷ்ணா அருள் செய் . . .
ராதே ஆசீர்வாதம் செய் . . .

க்ருஷ்ணனைப் பாயசம் திருட வைத்த
மாதவேந்திரபுரி
மீண்டும் ஒரு முறை
இங்கு அவதரிக்கவேண்டும் !
க்ருஷ்ணா அருள் செய் . . .
ராதே ஆசீர்வாதம் செய் . . .

ஜபத்தால் க்ருஷ்ணனை அடைந்த
ஹரிதாஸ் யவன்
மீண்டும் ஒரு முறை
இங்கு அவதரிக்கவேண்டும் !
க்ருஷ்ணா அருள் செய் . . .
ராதே ஆசீர்வாதம் செய் . . .

ராதா க்ருஷ்ண லீலையைப் பாடிய
ஜயதேவர்
மீண்டும் ஒரு முறை
இங்கு அவதரிக்கவேண்டும் !
க்ருஷ்ணா அருள் செய் . . .
ராதே ஆசீர்வாதம் செய் . . .

க்ருஷ்ணனுக்காக சர்வத்தையும் விட்ட
ஹஸீனா, ஹமீதா
மீண்டும் ஒரு முறை
இங்கு அவதரிக்கவேண்டும் !
க்ருஷ்ணா அருள் செய் . . .
ராதே ஆசீர்வாதம் செய் . . .

க்ருஷ்ணனையே பர்தாவாக அடைந்த
விஷ்ணுப்ரியாதேவி
மீண்டும் ஒரு முறை
இங்கு அவதரிக்கவேண்டும் !
க்ருஷ்ணா அருள் செய் . . .
ராதே ஆசீர்வாதம் செய் . . .



க்ருஷ்ணனைத் திருடிக்கொண்டு போன
த்வாரகா ராமதாஸர்
மீண்டும் ஒரு முறை
இங்கு அவதரிக்கவேண்டும் !
க்ருஷ்ணா அருள் செய் . . .
ராதே ஆசீர்வாதம் செய் . . .

க்ருஷ்ணனைக் குட்டனாகக் கொஞ்சிய
பூந்தானம்
மீண்டும் ஒரு முறை
இங்கு அவதரிக்கவேண்டும் !
க்ருஷ்ணா அருள் செய் . . .
ராதே ஆசீர்வாதம் செய் . . .

க்ருஷ்ண லீலையில் திளைத்த
லீலா சுகர்
மீண்டும் ஒரு முறை
இங்கு அவதரிக்கவேண்டும் !
க்ருஷ்ணா அருள் செய் . . .
ராதே ஆசீர்வாதம் செய் . . .

ராதிகாவின் அஷ்டசகிகள்
லலிதா,விசாகா,செண்பகலதா,சித்ரா,
துங்கவித்யா,இந்துலேகா,ரங்கதேவி,சுதேவி
மீண்டும் ஒரு முறை
இங்கு அவதரிக்கவேண்டும் !
க்ருஷ்ணா அருள் செய் . . .
ராதே ஆசீர்வாதம் செய் . . .

 
ராதா சுதா நிதி பாடிய
ஹிதஹரி வம்ச மஹாப்ரபு
மீண்டும் ஒரு முறை
இங்கு அவதரிக்கவேண்டும் !
க்ருஷ்ணா அருள் செய் . . .
ராதே ஆசீர்வாதம் செய் . . .

ராதிகாவின் அந்தரங்க தாஸிகளான
சனாதன கோஸ்வாமியும், ரூப கோஸ்வாமியும்
மீண்டும் ஒரு முறை
இங்கு அவதரிக்கவேண்டும் !
க்ருஷ்ணா அருள் செய் . . .
ராதே ஆசீர்வாதம் செய் . . .

ராதிகாவின் தர்சனம் அனுபவித்த
த்ருவதாஸன்
மீண்டும் ஒரு முறை
இங்கு அவதரிக்கவேண்டும் !
க்ருஷ்ணா அருள் செய் . . .
ராதே ஆசீர்வாதம் செய் . . .


என் ஆசை தீரவில்லை . . .
இன்னும் ப்ரார்த்தனை இருக்கிறது...


ஆனாலும் என் ராதிகாவுக்கும்,

க்ருஷ்ணனுக்கும்தான்
என் ஹ்ருதயம் தெரியுமே !

நான் என்ன சொல்ல . . .?


இன்னும் பல க்ருஷ்ண பக்தர்கள்
வரவேண்டும் !


இந்த உலகம் முழுவதும்
க்ருஷ்ண பக்தியில் திளைத்து
ப்ரேம சாம்ராஜ்யமாக
ஆகவேண்டும் ! ! !


எல்லா க்ருஷ்ண பக்தர்களும்
ஒன்றாக ஒரே சமயத்தில்
இந்த பூமிக்கு வரவேண்டும் !


கலியுகம்
பக்தியுகமாக வேண்டும் !


க்ருஷ்ண பக்த சங்கமம்
இந்த பூமியில்
நடக்க வேண்டும் . . .


நானும் ஒரு கோடியில்
நின்று
அதை ரசிக்க வேண்டும் . . .


வருகின்ற க்ருஷ்ண பக்தர்கள்
அனைவரின் திருவடிகளையும்
அலம்ப வேண்டும் . . .
க்ருஷ்ண பக்த பாத தீர்த்தத்தை
அள்ளிப் பருக வேண்டும் . . .


அத்தனை பக்தர்களுக்கும்
கழுத்தில் மாலையிட்டு,
நெற்றியில் திலகமிட்டு,
தலையில் மலர் தூவி,
ஜய கோஷம் பாடி,
ஆனந்த நர்த்தனமாடி,
ஆலத்தி வழித்து
வரவேற்க வேண்டும் . . .

பக்தர்களுக்கு
தலைவாழை இலை போட்டு,
அறுசுவை அன்னம் பரிமாறி,
அவர்களுக்குத் தாம்பூலம்
மடித்துத் தரவேண்டும் . . .

அதன்பிறகு அவர்களுடைய
உச்சிஷ்ட ப்ரசாதத்தை
நன்றாக அனுபவிக்க வேண்டும் . . .


பக்தர்களோடு பஜனையில்
ஈடுபட்டு க்ருஷ்ணனை
அனுபவிக்கவேண்டும் . . .


இரவில் பக்தர்களோடு
காலார நடந்து கொண்டு
சத் சங்கத்தை
அனுபவிக்கவேண்டும் . . .


பக்தர்களோடு பக்தி
பாஷையில் பேசிப்
பரிகசித்துச் சிரித்து
மகிழவேண்டும் . . .


பக்தர்களோடு ஒன்றாக
ராதா க்ருஷ்ண த்யானத்தோடு,
தூங்கவேண்டும் . . .

பக்தர்களோடு விடியற்காலையில்
எழுந்து, புன்னகைத்துக்கொண்டு
"ராதேக்ருஷ்ணா" என்று 
உரக்க விண்ணைப் பிளக்கும்படி
கோஷிக்க வேண்டும் . . .


பக்தர்களோடு ஆனந்தமாக
ப்ரேம நதியில்
ஜலக்ரீடை செய்யவேண்டும் . . .


இப்படியே ஒரு வாழ்க்கை
வாழ வேண்டும் . . .


பக்தர்களைப் பார்த்துக் கொண்டு,
பகவன் நாமத்தை ஜபித்துக் கொண்டு,
ப்ரேமையில் சிலிர்த்துக் கொண்டு,
கண்களில் கண்ணீர் வழிய,
அப்படியே இந்த உடலை விட வேண்டும் . . .


மீண்டும் பக்தர்களின் கூட்டத்தோடு
வர வேண்டும் . . .


மீண்டும் மீண்டும் மீண்டும்
இப்படியே ஒரு வாழ்க்கை
அனுபவிக்க வேண்டும் ! ! !

அதற்கு

க்ருஷ்ணா அருள் செய் . . .
ராதே ஆசீர்வாதம் செய் . . .

அதற்கு
சத்குருநாதா ஒரு வாய்ப்பு தா !

 




 

Read more...

வியாழன், 28 ஜனவரி, 2010

இன்று மாறலாம்

  ராதேக்ருஷ்ணா!!!


"இன்று" என்பது மிகப் பலமுடையது 

"இன்று" எல்லாவற்றையும் மாற்றக் கூடியது 

"இன்று" புதியதாகப் பிறந்துள்ளது 

"இன்று" மிகவும் விசேஷமானது 

இன்று என்பது நேற்றைய மிச்சம் அல்ல 

இன்று என்பது நாளைய தொடக்கம் 

இன்று எத்தனையோ மாறலாம் 

இப்படி யோசித்துப் பார்

நேற்றைய விரோதங்கள் இன்று மாறலாம் 

நேற்றைய தோல்விகள் இன்று மாறலாம்

நேற்றைய அவமானங்கள் இன்று மாறலாம்

நேற்றைய சண்டைகள் இன்று மாறலாம்

நேற்றைய பிரச்சனைகள் இன்று மாறலாம்

நேற்றைய குழப்பங்கள் இன்று மாறலாம்

நேற்றைய பொறாமை இன்று மாறலாம்

நேற்றைய நஷ்டங்கள் இன்று மாறலாம்

நேற்றைய வியாதிகள் இன்று மாறலாம்

நேற்றைய பலவீனங்கள் இன்று மாறலாம்

நேற்றைய மனோபாரங்கள் இன்று மாறலாம்

நேற்றைய பகைகள் இன்று மாறலாம்

நேற்றைய ஏமாற்றங்கள் இன்று மாறலாம்

நேற்றைய ஜன்ம கர்ம வினைகள்
இன்று மாறலாம்

நேற்றைய தொந்தரவுகள் இன்று மாறலாம்

நேற்றைய காமம் இன்று மாறலாம்

நேற்றைய பாபங்கள் இன்று மாறலாம்

நேற்றைய தோல்வி மனப்பான்மை  
இன்று மாறலாம்

நேற்றைய கெட்ட பழக்கங்கள் 
இன்று மாறலாம்

நேற்றைய காயங்கள் இன்று மாறலாம்

நேற்றைய பிரிவு இன்று மாறலாம்

நேற்றைய மனக்கசப்புகள் இன்று மாறலாம்

நேற்றைய அழிவுகள் இன்று மாறலாம்

நேற்றைய விரோதி இன்று மாறலாம்

நேற்றைய கனவுகள் இன்று மாறலாம்

நேற்றைய கற்பனைகள்  இன்று மாறலாம்

நேற்றைய எதிர்ப்பார்ப்புகள் இன்று மாறலாம்

நேற்றைய உலகம் இன்று மாறலாம்

நேற்றைய மாற்றம் இன்று மாறலாம்

நேற்றைய பழையது இன்று மாறலாம்

நேற்றைய புதியது இன்று மாறலாம்

நேற்றைய சிந்தனை இன்று மாறலாம்

நேற்றைய பயம் இன்று மாறலாம்

நேற்றைய எண்ணங்கள் இன்று மாறலாம்

நேற்றைய கோபம் இன்று மாறலாம்

நேற்றைய மௌனம் இன்று மாறலாம்

நேற்றைய சோம்பேறித்தனம் இன்று மாறலாம்

நேற்றைய இழப்பு இன்று மாறலாம்

நேற்றைய துன்பம் இன்று மாறலாம்

நேற்றைய துரதிஷ்டம் இன்று மாறலாம்

நேற்றைய நாஸ்திகம் இன்று மாறலாம்

நேற்றைய கேள்வி இன்று மாறலாம்

நேற்றைய தேடல் இன்று மாறலாம்

நேற்றைய முட்டாள் இன்று மாறலாம்

நேற்றைய பைத்தியம் இன்று மாறலாம்

நேற்றைய தீவிரவாதி இன்று மாறலாம்

நேற்றைய தீவிரவாதம் இன்று மாறலாம்

நேற்றைய பிரிவினை இன்று மாறலாம்

நேற்றைய கெடுதல்கள் இன்று மாறலாம்

மாறட்டுமே எல்லா கெட்டவைகளுமே   இன்று மாறட்டுமே 

எல்லா கெட்டவர்களும் இன்று மாறட்டுமே 

எல்லா குழப்பங்களும் இன்று மாறட்டுமே 

எல்லா பைதியகாரத்தனங்களும் இன்று மாறட்டுமே

நீ உன் புத்தியினால் நல்ல மாற்றங்களை கெடுக்கிறாய்     

இன்று எல்லாம் மாறுவதற்கு பல கோடி சந்தர்பங்கள் உண்டு

இதுவரை நேற்றைய எச்சத்தில் வாழ்ந்து வீண் ஆனாய் 

இதுவரை நாளைய கற்பனையில்
 சிறகடித்து தோற்றுப் போனாய்   

இன்று முதல் 
இன்று வாழ் 

இன்று முதல் 
இன்று அன்பு செய் 

இன்று முதல் 
இன்று உண்மையாக இரு 

இன்று முதல் 
இன்று உழை 

இன்று முதல் 
இன்று ஷ்ரத்தையோடு இரு 

இன்று முதல் 
இன்று பணிவோடு இரு 

இன்று முதல் 
இன்று கோபப்படாமல் இரு 

இன்று முதல் 
இன்று சோம்பேறித்தனத்தை விடு 

இன்று முதல் 
இன்று கெட்ட பழக்கங்களை விடு 

இன்று முதல் 
இன்று நாமஜபம் செய் 

இன்று முதல் 
இன்று பக்தி செய்

இன்று முதல் 
இன்று சரணாகதி செய் 

இன்று வாழ்க்கையின் நாள்
இன்று மாறுதல் ஆரம்பம் 
இன்றிலிருந்து மாறுதல் உண்டு

இன்றே உன் பலம்

இன்றே உன் வாழ்க்கை

இன்றே உன் நம்பிக்கை

இன்றே உன் தேவை

இன்றே உன் வெற்றி


இனி
நேற்றில்லை;நாளையில்லை;
இன்று மட்டுமே!
  

Read more...

புதன், 27 ஜனவரி, 2010

சொல்ல மறந்த வார்த்தை !


ராதேக்ருஷ்ணா !

உலகில் எல்லோருக்கும் தினமும் பலமுறை 
சொல்லும் அற்புதமான வார்த்தை

எத்தனையோ பேருக்கு தினமும்
நாம் சொல்லும் வார்த்தை..

நம்முடைய  மனதில்  சந்தோஷத்தை  
வெளிப்படுத்தும்  ஒரு  வார்த்தை

வாழ்வின் கடைசி வரை சொல்லியே ஆக வேண்டிய  ஒரு வார்த்தை

உலகம் முழுவதிலும் எல்லா மொழிகளிலும் மிகச் சிறந்த ஒரு வார்த்தை

எத்தனையோ பேருக்கு சொல்லும் வார்த்தை

சில விஷயங்களுக்கும் சிலருக்கும்
 சொல்ல மறந்த ஒரு வார்த்தை


அந்த வார்த்தை... நன்றி
இனி சொல்வாய்....
இன்றிலிருந்து சொல்வாய்...
இப்பொழுதிலிருந்து சொல்வாய்...
சொல்லிப் பார்..


கண்களே உன்னால் நான் 
உலகைப் பார்க்கிறேன்
உங்களுக்கு நன்றி
காதுகளே உங்களால் நான் கேட்கிறேன்
உங்களுக்கு நன்றி
மூக்கே உன்னால்  நான் சுவாசிக்கிறேன்
உனக்கு நன்றி
நாக்கே உன்னால் நான் ருசிக்கிறேன்
உனக்கு நன்றி
வாயே உன்னால் நான் பேசுகிறேன்
உனக்கு நன்றி
தோலே உன்னால் நான் உணர்கின்றேன்
உனக்கு நன்றி

கைகளே உன்னால் நான்
வேலை செய்கிறேன்
 உங்களுக்கு நன்றி

கால்களே உங்களால் நான் நடக்கிறேன் 
உங்களுக்கு நன்றி

பற்களே உங்களால் நான் மெல்லுகின்றேன்
உங்களுக்கு நன்றி

இமைகளே உங்களால் நான் சிமிட்டுகின்றேன் 
உங்களுக்கு நன்றி

பூமியே உன் மடி மீது வாழ்கின்றேன் 
உனக்கு நன்றி

மேகமே உன்னால் மழையை 
அனுபவிக்கின்றேன்
உனக்கு நன்றி

காற்றே உன்னால் உயிர் வாழ்கிறேன்
உனக்கு நன்றி

சூரியனே உன்னால்
வெளிச்சத்தை  உணர்கின்றேன் 
உனக்கு நன்றி

சந்திரனே உன்னால் இருளும்
அழகாகின்றது
உனக்கு நன்றி

இரவே உன்னால் உறங்குகின்றேன்
உனக்கு நன்றி

பகலே உன்னால் வேலை செய்கின்றேன்
உனக்கு நன்றி

ஆகாரமே உன்னால் பலமடைகின்றேன்
உனக்கு நன்றி

செருப்பே உன்னால் பாதங்கள்
நன்றாக இருக்கிறது
உனக்கு நன்றி

எழுதுகோலே உன்னால் எழுதுகிறேன்
உனக்கு நன்றி

விளக்கே உன்னால் இரவிலும்
பார்க்கின்றேன்
உனக்கு நன்றி 

தாயே உன்னால் உலகில் பிறந்தேன்
உனக்கு நன்றி

தந்தையே உன்னால் உற்பத்தி ஆனேன்
உனக்கு நன்றி

வயதானவர்களே உங்களின் அனுபவத்தில்
பல கற்றுக்கொண்டேன்
உங்களுக்கு நன்றி

மரங்களே உங்களின் நிழலில்
ஒதுங்குகின்றேன் 
உங்களுக்கு நன்றி

பழங்களே உங்களால் இனிப்பின் பல
பரிமாணத்தை அனுபவிக்கின்றேன்
உங்களுக்கு நன்றி

தண்ணீரே உன்னால் தாகம் தணிகிறேன்
உனக்கு நன்றி

கடிகாரமே உன்னால் நேரம் அறிகின்றேன் 
உனக்கு நன்றி

தலையணையே உன்னால் படுக்கையில் 
சுகமாய் இருக்கிறேன் 
உனக்கு நன்றி
   
படுக்கையே உன்னால் சுகமாய்
விழித்திடுகிறேன்
உனக்கு நன்றி

      தோழர்களே/தோழிகளே உங்களால்
நட்பை அனுபவிக்கிறேன்
உங்களுக்கு  நன்றி

சகோதரர்களே/சகோதரிகளே உங்களால்
 சகோதரத்துவத்தை ரசிக்கிறேன்
    உங்களுக்கு நன்றி

         ஆசிரியர்களே உங்களால் அறிவு
பெறுகிறேன்
உங்களுக்கு நன்றி

புத்தகமே உன்னால் படிக்கிறேன்
உனக்கு நன்றி

மின்சாரமே உன்னால் பல நன்மை
அடைகிறேன்
உனக்கு நன்றி

செயற்கைகோளே உன்னால் உலகை
ரசிக்கிறேன்
உனக்கு நன்றி

பூக்களே உங்களிடமிருந்து அழகை
புரிந்து கொண்டேன்
உங்களுக்கு நன்றி 

கணவனே/மனைவியே உன்னால் 
தாம்பத்தியம் அனுபவிக்கிறேன்
உனக்கு நன்றி 

குழந்தைகளே உங்களிடமிருந்து அன்பை
தெரிந்து கொள்கிறேன்
உங்களுக்கு நன்றி

மொழிகளே உங்களால் என் மனதை
வெளிப்படுத்துகின்றேன்
உங்களுக்கு நன்றி

மழையே உன்னால் ஆகாரமும்
தண்ணீரும் அனுபவிக்கிறேன்
உனக்கு நன்றி

நெருப்பே உன்னால் பல நன்மை
அடைகிறேன்
உனக்கு நன்றி

வேலைகாரர்களே உங்களால் பல
வேலைகள் சுலபமாகின்றன 
உங்களுக்கு நன்றி 

விஞ்ஞானிகளே உங்களால் பல 
உபகாரங்களை அனுபவிக்கிறேன் 
உங்களுக்கு நன்றி

தொலைப்பேசியே உன்னால் பலருடன் 
உரையாடுகின்றேன் 
உனக்கு நன்றி 

கைப்பேசியே உன்னால் எல்லா 
இடங்களிலிருந்தும் பேசுகிறேன்
உனக்கு நன்றி

இது போல் இன்னும் கோடி பேருக்கு 
கோடி விஷயங்களுக்கு நன்றி 
சொல்ல மறந்து விட்டோம் 

இனி மறக்காமல் சொல் 
சொல்ல சொல்ல சுகமாய் இரு 

இன்னும் சில நன்றிகளும் 
மறக்காமல் சொல்ல வேண்டும் 

சத்சங்கமே உன்னால் நானும் 
சுத்தமாகிறேன்
உனக்கு நன்றி 

பக்தர்களே உங்களால் நானும்
பக்தி செய்கிறேன் 
உங்களுக்கு நன்றி

பக்தியே உன்னால் நான் பகவானை 
உணர்கின்றேன் 
உனக்கு நன்றி 

ஞானிகளே உங்களால் ஞானத்தை 
தெரிந்து கொள்கிறேன் 
உங்களுக்கு நன்றி 

நாமஜபமே உன்னால் பகவானை 
அனுபவிக்கிறேன் 
உனக்கு நன்றி 

க்ருஷ்ணனே உன்னால் தான்
இவை எல்லாவற்றையும் நான்
அனுபவிக்கின்றேன்  
உனக்கு நன்றி 

ராதையே உன்னால் தான் பிரேமை 
புரிகின்றது 
உனக்கு நன்றி     

சத்குருவே உங்களால் தான் இத்தனையும்
புரிந்தது புரிகின்றது 
இன்னும் பலவும் புரியப் போகிறது 

அதனால் உங்களுக்குத் தான் 
விசேஷமான நன்றி 

சத்குருநாதா மற்ற எல்லாருடைய 
கடனையும் நான் நன்றி சொல்லி 
தீர்த்து விடுவேன் 

ஆனால் உமக்கு நான் பட்டிருக்கும் 
கடனை ஒரு நாளும் 
அடைக்கவே முடியாது   

என்றும் எபோழுதும் எல்லா
ஜன்மாவிலும் சத்குருநாதா 
உங்களுக்கு நான் 
நன்றிக் கடன் பட்டவனே

என்றும் இந்த நன்றிக் கடன்
மாறாதிருக்க ஒரு 
ஆசீர்வாதம் செய்யுங்கள்!!!



Read more...

செவ்வாய், 26 ஜனவரி, 2010

உன்னை விட்டு விலகும்...



பாபமும்
உன்னை விட்டு விலகும் 

புண்ணியமும் 
 உன்னை விட்டு விலகும்

கோபமும்
உன்னை விட்டு விலகும்

பொறாமையும்
உன்னை விட்டு விலகும்

நோயும்
உன்னை விட்டு விலகும்

ஆரோக்யமும்
உன்னை விட்டு விலகும்

அழகும்
உன்னை விட்டு விலகும்

சுத்தமும்
உன்னை விட்டு விலகும்

அழுக்கும்
உன்னை விட்டு விலகும்

அசிங்கமும்
உன்னை விட்டு விலகும்

அத்ருஷ்டமும்
உன்னை விட்டு விலகும்

துரத்ருஷ்டமும்
உன்னை விட்டு விலகும்

அவமரியாதையும்
உன்னை விட்டு விலகும்

மரியாதையும்
உன்னை விட்டு விலகும்

பெருமையும்
உன்னை விட்டு விலகும்

மானமும்
உன்னை விட்டு விலகும்

அவமானமும்
உன்னை விட்டு விலகும்

துன்பமும்
உன்னை விட்டு விலகும்

இன்பமும்
உன்னை விட்டு விலகும்

தூக்கமும்
உன்னை விட்டு விலகும்

விழிப்பும்
உன்னை விட்டு விலகும்

கனவும்
உன்னை விட்டு விலகும்

கற்பனையும்
உன்னை விட்டு விலகும்

காதலும்
உன்னை விட்டு விலகும்

நட்பும்
உன்னை விட்டு விலகும்

நம்பிக்கையும்
உன்னை விட்டு விலகும்

அவநம்பிக்கையும்
உன்னை விட்டு விலகும்

அன்பும்
உன்னை விட்டு விலகும்

தைரியமும்
உன்னை விட்டு விலகும்

பயமும்
உன்னை விட்டு விலகும்

கோழைத்தனமும்
உன்னை விட்டு விலகும் 

வீரமும் 
உன்னை விட்டு விலகும் 

பேச்சும்
உன்னை விட்டு விலகும் 

கேட்கும் திறனும் 
உன்னை விட்டு விலகும் 

பயணமும் 
உன்னை விட்டு விலகும் 

பண்பும் 
உன்னை விட்டு விலகும் 

கேள்வியும் 
உன்னை விட்டு விலகும் 

பதிலும் 
உன்னை விட்டு விலகும் 

சந்தேகமும் 
உன்னை விட்டு விலகும் 

சண்டையும் 
உன்னை விட்டு விலகும் 

சமாதானமும் 
உன்னை விட்டு விலகும் 

பலமும் 
உன்னை விட்டு விலகும் 

பலவீனமும் 
உன்னை விட்டு விலகும் 

குழப்பமும் 
உன்னை விட்டு விலகும் 

குதூகலமும் 
உன்னை விட்டு விலகும் 

குடும்பமும் 
உன்னை விட்டு விலகும் 

விதியும் 
உன்னை விட்டு விலகும் 

பழியும் 
உன்னை விட்டு விலகும் 

பசியும் 
உன்னை விட்டு விலகும் 

உணவும் 
உன்னை விட்டு விலகும் 

தாகமும்  
உன்னை விட்டு விலகும் 

தவிப்பும் 
உன்னை விட்டு விலகும் 

தன்மானமும் 
உன்னை விட்டு விலகும் 

தன்னம்பிக்கையும் 
உன்னை விட்டு விலகும் 

தடுமாற்றமும் 
உன்னை விட்டு விலகும் 

தயையும்
உன்னை விட்டு விலகும் 

விரோதமும் 
உன்னை விட்டு விலகும் 

காமமும்

உன்னை விட்டு விலகும்

கஞ்சத்தனமும்
உன்னை விட்டு விலகும்

வளமும்
உன்னை விட்டு விலகும்

வலியும்
உன்னை விட்டு விலகும்

வனப்பும்
உன்னை விட்டு விலகும்

வயிற்றெரிச்சலும்
உன்னை விட்டு விலகும்

கடனும்
உன்னை விட்டு விலகும்

தனமும்
உன்னை விட்டு விலகும்

தானமும்
உன்னை விட்டு விலகும்

உலகமும்
உன்னை விட்டு விலகும்

உழைப்பும்
உன்னை விட்டு விலகும்

தாழ்வு மனப்பான்மையும்
உன்னை விட்டு விலகும்

தன்னடக்கமும்
உன்னை விட்டு விலகும்

தயக்கமும்
உன்னை விட்டு விலகும்

வெட்கமும்
உன்னை விட்டு விலகும்

சொந்தங்களும்
உன்னை விட்டு விலகும்

தாயும்
உன்னை விட்டு விலகுவாள்

தந்தையும்
உன்னை விட்டு விலகுவார்

சகோதரனும்
உன்னை விட்டு விலகுவான்

சகோதரியும்  
உன்னை விட்டு விலகுவாள்

கணவனும்
உன்னை விட்டு விலகுவான்

மனைவியும்
உன்னை விட்டு விலகுவாள்

குழந்தையும்
உன்னை விட்டு விலகும்

நினைவும்
உன்னை விட்டு விலகும்

நிம்மதியும் 
உன்னை விட்டு விலகும்


உயிரும் 
உன்னை விட்டு விலகும்


மூச்சும் 
உன்னை விட்டு விலகும்


நீயும் 
உன்னை விட்டு விலகுவாய் 


அனால் என்றும் விலகாத ஒன்று 
உன்னுடன் நிரந்தரமாக உண்டு 

உன் உடலை விட்டு நீ போனாலும் 
அது  உன்னுடன் உண்டு 

உலகில் உள்ள அனைத்துமே  
உன்னை விட்டு விலகினாலும்
விலகாத ஒன்று உண்டு 

அது உன் க்ருஷ்ணன் மட்டுமே..

எதற்காகவும் அவன் உன்னை விட்டு விலகுவதும் இல்லை 
என்றும் அவன் உன்னை கைவிடுவதும் இல்லை 
யாருக்காகவும் அவன் உன்னை விட்டுப் பிரிவதும் இல்லை 



உன் க்ருஷ்ணனை மட்டும்  திடமாக பற்றிக் கொள்...      


 






  

Read more...

புதன், 20 ஜனவரி, 2010

பயணம் !

ராதேக்ருஷ்ணா

பயணம்...

வாழ்வில் தவிர்க்க முடியாத
சில நிகழ்வுகளில்
பயணமும் ஒன்று . . .

வாழ்வே பயணம் . . .

ஜனனத்திலிருந்து
 மரணத்திற்கு ஒரு பயணம் . . .

அந்த வாழ்க்கையிலும் எத்தனை பயணம் . . .

இந்த உடலின் பயணம் . . . 

தந்தையின் உடலிலிருந்து
தாயின் கருவறைக்கு ஒரு பயணம் . . .

தாயின் கருவறையிலும் அதில்
சுற்றிச் சுற்றி ஒரு பயணம் . . .

தாயின் கருவறையிலிருந்து உலகில்
வந்து பிறக்க ஒரு பயணம் . . . 

   பிறந்தபிறகு ஒவ்வொருவர்
கையாக மாறி மாறிப் பயணம் !

வளர்ச்சியில் ஒரு பயணம் !

தாயோடு ஒரு பயணம் !

தந்தையோடு ஒரு பயணம் !

பெற்றோரோடு ஒரு பயணம் !

உற்றாரோடு ஒரு பயணம் ! 

பொம்மைகளோடு ஒரு பயணம் !

 பள்ளிக்கூடத்திற்காக ஒரு பயணம் !

பள்ளிக்கூடத்தில் ஒரு பயணம் !

தோழர்கள்/தோழிகளோடு ஒரு பயணம் !

அறிவிற்காக ஒரு பயணம் !

அறிவில்லாத சில பயணம் !

ஆசைக்காக சில பயணம் !

 அன்பிற்காக சில பயணம் !

அவசரத்தில் சில பயணம் !

அவசியத்தில் சில பயணம் !

வேலைக்காக சில பயணம் !

விசேஷங்களுக்காக சில பயணம் !

வெறுப்பில் சில பயணம் !

வைராக்யத்தில் சில பயணம் !

கோபத்தில் சில பயணம் !

அழுகையில் சில பயணம் !

துக்கத்தில் சில பயணம் !

சந்தோஷத்தில் சில பயணம் !

 குதூகலத்தில் சில பயணம் !

மனக்குறைகளோடு சில பயணம் !

அரைகுறை மனதோடு சில பயணம் ! 

பயத்தோடு சில பயணம் !

தைரியத்தோடு சில பயணம் !

குழப்பத்தோடு சில பயணம் !

சிந்தனையோடு சில பயணம் !

சிரிப்போடு சில பயணம் !

சிலிர்ப்போடு சில பயணம் !

சிடுசிடுப்போடு சில பயணம் !

சில்லென்று சில பயணம் !

தேவைக்காக சில பயணம் !

வெட்டியாக சில பயணம் !

வேதனையோடு சில பயணம் !

கோழையாக சில பயணம் !

வீரத்தோடு சில பயணம் !

கட்டாயமாக சில பயணம் !

காரணமேயில்லாமல் சில பயணம் !

ஊர்சுற்ற சில பயணம் !

மற்றவருக்காக சில பயணம் !

இழப்பில் சில பயணம் !

எதிர்ப்பார்ப்போடு சில பயணம் !

ஏமாற்றத்தோடு சில பயணம் !

வைத்தியத்திற்காக சில பயணம் !

வியாதிக்காக சில பயணம் !

வியாதியோடு சில பயணம் !

பிரச்சனைகளோடு சில பயணம் !

தீர்வுகளோடு சில பயணம் !

கேள்விகளோடு சில பயணம் !

பதில்களோடு சில பயணம் !

தூக்கத்தோடு சில பயணம் !

தூக்கமில்லாத சில பயணம் !

கனவுகளோடு சில பயணம் !

லக்ஷியங்களோடு சில பயணம் !

அமைதியாய் சில பயணம் !

ஆடம்பரமாய் சில பயணம் !

மௌனமாய் சில பயணம் !

சப்தத்தோடு சில பயணம் !

பட்டினியாய் சில பயணம் !

அஜீரணத்தில் சில பயணம் !

சாப்பிட்டுக்கொண்டே சில பயணம் ! 

சாப்பிடுவதற்காக சில பயணம் !

நன்றியோடு சில பயணம் !

புலம்பலோடு சில பயணம் !

தேடலில் சில பயணம் !

பரிதவிப்போடு சில பயணம் !

பரிவில் சில பயணம் !

பரபரப்போடு சில பயணம் !

பாதிப்போடு சில பயணம் !

பண்போடு சில பயணம் !

பழியோடு சில பயணம் !

பாவத்தோடு சில பயணம் !

புண்ணியத்திற்காக சில பயணம் !

தனியாக சில பயணம் !

துணையாக சில பயணம் !

துணைக்காக சில பயணம் ! 



தன்னடக்கத்தோடு சில பயணம் !

அகம்பாவத்தோடு சில பயணம் !

அமைதியில்லாமல் சில பயணம் !

நடுக்கத்தோடு சில பயணம் ! 

அமைதிக்காக சில பயணம் !

மாற்றத்திற்காக சில பயணம் !

மாற்றமுடியாமல் சில பயணம் !

இரவில் சில பயணம் !

பகலில் சில பயணம் !

நீண்ட தூரம் சில பயணம் !

நீண்ட நேரம் சில பயணம் !


குளிரில் சில பயணம் !

வியர்வையில் சில பயணம் !

வலியில் சில பயணம் !

மனஅழுத்தத்தோடு சில பயணம் !

தயக்கத்தில் சில பயணம் !

தயங்காமல் சில பயணம் !

தாளமுடியாமல் சில பயணம் !

வேலையாளாக சில பயணம் !

முதலாளியாக சில பயணம் !

முடியாமல் சில பயணம் !

முடிவோடு சில பயணம் !

அசடாக சில பயணம் !

புத்திசாலியாக சில பயணம் !

அசட்டையாக சில பயணம் !

அசிரத்தையாக சில பயணம் !

பொறுப்போடு சில பயணம் !

பொறுப்பில்லாமல் சில பயணம் !

காமத்திற்காக சில பயணம் !

காமத்தில் சில பயணம் !

துடிப்போடு சில பயணம் !

களைப்போடு சில பயணம் !

கலகலப்பாக சில பயணம் !

கடன் வாங்க சில பயணம் !

கடனை அடைக்க சில பயணம் !

கடனே என்று சில பயணம் !

 சேர்த்திக்காக சில பயணம் !

பிரிவுடன் சில பயணம் !

பிரியாவிடையுடன் சில பயணம் !

கற்பனைகளோடு சில பயணம் !

காசில்லாமல் சில பயணம் !

காசு செலவழித்து சில பயணம் !

வழக்கிற்காக சில பயணம் !

வழக்கு முடிந்து சில பயணம் !

ஜனனத்திற்காக சில பயணம் !

மரணத்திற்காக சில பயணம் !

புது உறவிற்காகச் சில பயணம் !

உறவை அறுத்து சில பயணம் !

உள்ளக்குமுறல்களோடு சில பயணம் !

உடைந்து போன உள்ளத்தோடு சில பயணம் !

ஆனந்தக்கண்ணீரோடு சில பயணம் !

சுமைதாங்கியாய் சில பயணம் !

சுமையாக சில பயணம் !

சுமையேயில்லாமல் சில பயணம் !

சுறுசுறுப்பாக சில பயணம் !

சுட்டித்தனமாக சில பயணம் !

கஷ்டப்படுத்தி சில பயணம் !

கட்டுப்பாடுகளோடு சில பயணம் !

சுதந்திரமாய் சில பயணம் !

சிக்கல்களோடு சில பயணம் !

சிக்கலாய் சில பயணம் !

தொலைப்பதற்காக சில பயணம் !

தேடுதலோடு சில பயணம் !

வேடிக்கையாகச் சில பயணம் !

வாடிக்கையாய் சில பயணம் !

புரியாமல் சில பயணம் !

புதிரோடு சில பயணம் !

புது மனிதர்களோடு சில பயணம் !

பழகினவர்களோடு சில பயணம் !

பழக்கமேயில்லாமல் சில பயணம் !

பழகிக்கொள்ள சில பயணம் !

குற்ற உணர்ச்சியோடு சில பயணம் !

நிம்மதியாக சில பயணம் !

திருட்டுத்தனமாய் சில பயணம் !

உரிமையோடு சில பயணம் !

உரிமைக்காக சில பயணம் !

உறைந்துபோய் சில பயணம் !

உறுத்தலோடு சில பயணம் !

உணர்ச்சிபூர்வமாய் ஒரு பயணம் !

உடல் உள்ளவரை பயணம் உண்டு!

உடலில் வாழ்வதே பயணம் தான்!

பயணங்கள் பலவிதம்! எண்ணங்கள் பலவிதம்!

பார்! பயணப்படுவது என்னவோ நீ தான்! 

உன் மனதின் தன்மைக்கேற்றவாறு எத்தனை விதமான பயணம்  என்று பார்!

இவை இல்லாமல் சில பயணங்களும் உண்டு!

பக்தர்களோடு சில பயணம்!

பக்திக்காக சில பயணம்!

சத்குரு தரிசனத்திற்காக சில பயணம்!

சத்குருவோடு சில பயணம்!

பக்தியோடு சில பயணம்!

சத்சிஷ்யர்களோடு சில பயணம்!

இன்னும் சில பயணம் பாக்கி உண்டு....

மரணப் படுக்கையில் ஒரு பயணம்!

மரணத்தின் பயணம்!      

மரணம் அடைந்த பின் பயணம்!

பக்தியினால் முக்தி அடைந்தால் வைகுந்தப் பயணம்!

ஆசை வயப்பட்டால் மீண்டும் அடுத்த உடலுக்கு பயணம்!

அதனால் பயணம் நிச்சயம் உண்டு! 

எப்படியும் பயணப்படத்தான் போகிறாய்!

அதை நாமஜபத்தோடு பயணித்தால் முக்தி அடையலாம்!  

எதர்க்காக பயணித்தாலும் நாமஜபத்தோடு  பயணம் செய்!
     
உன் பயணம் தொடரும்!

என் பயணமும் தொடரும்!

என்றாவது எங்காவது சந்திப்போம்!

அதுவரை அவரவர் வழியில், குரு சொன்ன முறைப்படி பக்தியோடு பகவான் இஷ்டப்படி பயணம் செய்து கொண்டே இருப்போம்!

பயணத்தின் முக்கிய நோக்கம், ஒரே  நோக்கம் என்றாவது ஒரு நாள் பகவானோடு ஒரு சந்திப்பு நிகழும் !  

நிச்சயம் என்றாவது பகவானுடைய ஒரு சந்திப்பு உண்டு!

அதுவரை பயணம் முடிய வேண்டாம்..

முடியவே வேண்டாம்!!!








 

Read more...

  © Blogger templates Newspaper III by Ourblogtemplates.com 2008

Back to TOP