ஆனந்தவேதம்

உனக்காக,உன் வாழ்க்கைக்காக,உன் ஆனந்தத்திற்காக...

இந்த வலைப்பதிவில் தேடு

வெள்ளி, 31 டிசம்பர், 2010

திருமலையே நீ வாழ்க !

ராதேக்ருஷ்ணா . . .

திருமலையே நீ வாழ்க !

ஸ்ரீ வராஹ மூர்த்தியின் சொத்தே . . .
திருமலையே நீ வாழ்க !

ஸ்ரீ ஸ்ரீநிவாஸனின் வாசஸ்தலமே . . .
திருமலையே நீ வாழ்க !

பாபங்களை நாசமாக்கும் வேங்கடாத்ரி . . .
திருமலையே நீ வாழ்க !

ஆதிசேஷனாய் இருக்கும் சேஷாத்ரி . . .
திருமலையே நீ வாழ்க !

வேதங்களே மலையான வேதாத்ரி . . .
திருமலையே நீ வாழ்க !

கருடன் கொண்டு வந்த கருடாத்ரி . . .
திருமலையே நீ வாழ்க !

வ்ருஷபனுக்கு மோக்ஷம் கிடைத்த வ்ருஷபாத்ரி . . .
திருமலையே நீ வாழ்க !

அஞ்சனாதேவி தவமிருந்த அஞ்சனாத்ரி . . .
திருமலையே நீ வாழ்க !

பரமானந்தத்தின் இருப்பிடம் ஆனந்தாத்ரி . . .
திருமலையே நீ வாழ்க !

ஏழுமலையே . . .திருவேங்கட மலையே . . .
திருமலையே நீ வாழ்க !

பக்தர்களை வசீகரித்து,பக்தியைத் தரும்
திருமலையே நீ வாழ்க !

வைகுந்தவாசன் தன் திருவடி பதித்த
ஸ்ரீவாரி பாதம் தாங்கும்
திருமலையே நீ வாழ்க !

குலசேகர ஆழ்வாரும் ஏதேனுமாக
ஆசைப்பட்ட திருமலையே நீ வாழ்க !


குரவநம்பி சதா சர்வதா ஸ்மரித்த
திருமலையே நீ வாழ்க !


அன்னமாச்சார்யார் பாடி அனுபவித்த
அற்புத திருமலையே நீ வாழ்க !


ஸ்வாமி இராமானுஜரும் முழங்காலால் ஏறிய
பவித்ரமான திருமலையே நீ வாழ்க !


திருமலையாழ்வாரே உன்னை பணிந்தேன் !


எனக்கு பெரிய பக்தியில்லை !
எனக்கு நல்ல சிரத்தையில்லை !
எனக்கு திடமான புத்தியில்லை !
எனக்கு கர்ம யோகம் தெரியாது !
எனக்கு ஞானம் புரியாது !


திருமலையாழ்வாரே நீரே எனக்கு கதி !
ஸ்ரீநிவாசனே உன் மேலிருக்கிறார் . . .
நீ என்னை உன் குழந்தையாக
ஏற்றுக்கொள் . . .

நிச்சயம் ஸ்ரீநிவாசன் என்னை ஏற்றுக்கொள்வார் . . .

ஏற்றுக்கொள்வாயா . . .?
இந்த முட்டாள் குழந்தையை . . .?

திருமலையாழ்வாரே . . .
நீர் மிகவும் பெரியவர் . . .
நானோ மிகப்பெரிய பாபி . . .

தயவு செய்து இந்தப் பாபிக்கு
மோக்ஷம் தாரும் . . .

அகலகில்லேன் இறையுமென்று
அலர்மேல் மங்கை உறை மார்பனின்
சிம்மாசனமாகிய திருமலையே . . .

உன் திருமுடியில் பாலாஜிக்கு இடம்தந்தாய் . . .
உன் திருவடியில் இந்த ஏழைக்கு இடம் தா . . .

அதற்கு நான் என்ன கைமாறு செய்வேன் ?

உன்னை வாயார,மனதார,நாத்தழும்பேற
எல்லா ஜன்மங்களிலும் வாழ்த்துவேன் . . .

திருமலையே நீ வாழ்க . . .

 

Read more...

வெள்ளி, 17 டிசம்பர், 2010

சமாதி . . .

ராதேக்ருஷ்ணா

சமாதி . . .

ஜீவ சமாதி . . .

எல்லோராலும் உயிருடனே
சமாதி அடையமுடியாது . . .

எல்லோருக்கும் உயிர் இருக்கும்போதே
குகையில் உட்கார்ந்து தன்னை
மறக்கமுடியாது . . .

உலகை வாழவைக்க,
தன் வாழ்க்கையை அர்ப்பணிக்க
எல்லோராலும் முடியாது . . .

ஆனால் அப்படி ஜீவ சமாதியடைந்த
மஹாத்மாக்களின் ஜீவ சமாதி
இடத்திற்குச் சென்றால் தானாக
நிம்மதி தேடி வரும் . . .

நானும் சென்றேன் . . .
ஆலந்தி சென்றேன் . . .
சந்த் ஞானேஸ்வரரின் ஜீவ சமாதிக்குச் சென்றேன் . . .

சென்றேன் . . .
என்னை மறந்தேன் . . .
புதியதாகப் பிறந்தேன் . . .

ஆலந்தி ஸ்ரீ ஞானேஸ்வரரின்
ஜீவ சமாதியில்,
என்னுடைய அகம்பாவம்
சமாதி அடைந்தது . . .

ஆலந்தி ஸ்ரீ ஞானேஸ்வரரின்
ஜீவ சமாதியில்,
என்னுடைய சுயநலம் 
சமாதி அடைந்தது . . .

ஆலந்தி ஸ்ரீ ஞானேஸ்வரரின்
ஜீவ சமாதியில்,
என்னுடைய காமம்
சமாதி அடைந்தது . . .

ஆலந்தி ஸ்ரீ ஞானேஸ்வரரின்
ஜீவ சமாதியில்,
என்னுடைய கோபம் 
சமாதி அடைந்தது . . .

ஆலந்தி ஸ்ரீ ஞானேஸ்வரரின்
ஜீவ சமாதியில்,
என்னுடைய பயம்
சமாதி அடைந்தது . . .

ஆலந்தி ஸ்ரீ ஞானேஸ்வரரின்
ஜீவ சமாதியில்,
என்னுடைய முன்வினை
சமாதி அடைந்தது . . .

ஆலந்தி ஸ்ரீ ஞானேஸ்வரரின்
ஜீவ சமாதியில்,
என்னுடைய பாபம்
சமாதி அடைந்தது . . .

ஆலந்தி ஸ்ரீ ஞானேஸ்வரரின்
ஜீவ சமாதியில்,
என்னுடைய ஆசைகள்
சமாதி அடைந்தது . . .

ஆலந்தி ஸ்ரீ ஞானேஸ்வரரின்
ஜீவ சமாதியில்,
என்னுடைய குழப்பங்கள்
சமாதி அடைந்தது . . .

ஆலந்தி ஸ்ரீ ஞானேஸ்வரரின்
ஜீவ சமாதியில்,
என்னுடைய பிரச்சனைகள்
சமாதி அடைந்தது . . .

ஆலந்தி ஸ்ரீ ஞானேஸ்வரரின்
ஜீவ சமாதியில்,
என்னுடைய தோல்விகள்
சமாதி அடைந்தது . . .

ஆலந்தி ஸ்ரீ ஞானேஸ்வரரின்
ஜீவ சமாதியில்,
என்னுடைய வியாதிகள்
சமாதி அடைந்தது . . .

நான் இன்னும் மீளவில்லை. . .
கொஞ்ச நேரம் கழித்து சொல்கிறேன் . . .
 

Read more...

சனி, 11 டிசம்பர், 2010

பிச்சைக்காரன் . . .

ராதேக்ருஷ்ணா

பிச்சைக்காரன் . . .

நான் ஒரு பிச்சைக்காரன் . . .

பல வருடங்களாக
உண்மையான அன்பிற்காக
ஏங்கும் ஒரு பிச்சைக்காரன் . . .

பல யுகங்களாக
தெளிவான ஞானத்திற்க்காக
ஏங்கும் ஒரு பிச்சைக்காரன் . . .

பல ஜன்மங்களாக
வைராக்கியத்திற்க்காக அலையும்
ஒரு பிச்சைக்காரன் . . .

பல கோடி வருஷங்கள்
மனிதர்களின் பின்னால்
அலைந்துகொண்டிருக்கும்
முட்டாள் பிச்சைக்காரன் . . .

பல சமயங்களில்
தெய்வத்தின் அனுக்ரஹத்தை
அவமதித்துவிட்டு,அதனைத் தேடும்
பைத்தியக்கார பிச்சைக்காரன் . . .

ஆசை வயப்பட்டு எதையோ கேட்டு,
தெய்வம் தந்ததை ஒதுக்கிவிட்டு,
பிறகு அதற்க்காக அழும்
அவசரக்கார பிச்சைக்காரன் . . .

 மனிதர்களின் வெளி வேஷத்தையும்,
சுயநலத்தையும் உள்ளபடி பார்த்துவிட்டு,
பயந்து நடுங்கி தெய்வத்தின்
தயவிற்க்காக பிச்சை கேட்கும்
பாவப்பட்ட பிச்சைக்காரன் . . .

பிச்சை இன்னும் முடியவில்லை . .. 



Read more...

  © Blogger templates Newspaper III by Ourblogtemplates.com 2008

Back to TOP