ஆனந்தவேதம்

உனக்காக,உன் வாழ்க்கைக்காக,உன் ஆனந்தத்திற்காக...

இந்த வலைப்பதிவில் தேடு

புதன், 5 ஜனவரி, 2011

துவண்டு போகாதே . . .

ராதேக்ருஷ்ணா

துவண்டு போகாதே . . .
துன்பங்களைக் கண்டு துவண்டு போகாதே . . .

துவண்டு போனால் நீ
விதியின் முன் கோழையாகி விடுவாய் . . .

துவண்டு போனால் நீ
மற்றவரின் தயவுக்காக ஏங்குவாய் . . .

துவண்டு போனால் நீ
உன் முன்னே அவமானப்படுவாய் . . .

துவண்டு போனால் நீ
நிகழ்வுகளுக்கு அடிமையாகி விடுவாய் . . .

துவண்டு போனால் நீ
இயற்கையின் விதியை மீறிவிடுவாய் . . .

துவண்டு போனால் நீ
சூழ்நிலைக் கைதியாகி விடுவாய் . . .

துவண்டு போனால் நீ
முட்டாளாகி விடுவாய் . . .

துவண்டு போனால் நீ
எல்லோரிடமும் தோற்றுவிடுவாய் . . .

 துவண்டு போனால் நீ
கொசுவை விட சிறியதாகிவிடுவாய் . . .

துவண்டு போனால் நீ
சிறு தூசிக்கும் பயப்படுவாய் . . .

துவண்டு போனால் நீ
பகவானின் கருணையை அறியமாட்டாய் . . .

துவண்டு போனால் நீ
உன் வாழ்க்கையை ரசிக்கமாட்டாய் . . .

துவண்டு போனால் நீ
உன்னையே வெறுத்துவிடுவாய் . . .

துவண்டு போனால் நீ
உனக்கு வரும் நன்மைகளை தடுத்துவிடுவாய் . . .

துவண்டு போனால் நீ
உன்னையே இழந்துவிடுவாய் . . .

அதனால்
துவண்டு போகாதே . . .
எந்த நிலையிலும் துவண்டு போகாதே . . .
எதற்க்கும் துவண்டு போகாதே . . .

நீ உன் வாழ்க்கையை வாழாமல்
துவண்டு போனால்,
உன் வாழ்க்கை அழும் . . .

உன் வாழ்க்கை சந்தோஷமாக இருக்கவேண்டும் . . .

0 கருத்துகள்:

  © Blogger templates Newspaper III by Ourblogtemplates.com 2008

Back to TOP