ஆனந்தவேதம்

உனக்காக,உன் வாழ்க்கைக்காக,உன் ஆனந்தத்திற்காக...

இந்த வலைப்பதிவில் தேடு

ஞாயிறு, 30 ஜனவரி, 2011

நீயே சாட்சி . . .

ராதேக்ருஷ்ணா

க்ருஷ்ணா . . .
எனது நல்ல செயல்களுக்கு
நீயே சாட்சி . . .

க்ருஷ்ணா . . .
எனது கெட்ட செயல்களுக்கும்
நீயே சாட்சி . . .

க்ருஷ்ணா . . .
எனது நல்ல எண்ணங்களுக்கு
நீயே சாட்சி . . .

க்ருஷ்ணா . . .
எனது கெட்ட எண்ணங்களுக்கும்
நீயே சாட்சி . . .

க்ருஷ்ணா . . .
எனது முயற்சிகளுக்கமும்
நீயே சாட்சி . . .

க்ருஷ்ணா . . .
எனது சோம்பேறித்தனத்திற்கும்
நீயே சாட்சி . . .

க்ருஷ்ணா . . .
எனது தைரியத்திற்க்கும்
நீயே சாட்சி . . .

க்ருஷ்ணா . . .
எனது பயத்திற்கு
நீயே சாட்சி . . . 
 
க்ருஷ்ணா . . .
எனது முட்டாள்தனத்திற்கு
நீயே சாட்சி . . .

க்ருஷ்ணா . . .
எனது புத்திசாலித்தனத்திற்க்கும்
நீயே சாட்சி . . .

க்ருஷ்ணா . . .
எனது காமத்திற்கும்
நீயே சாட்சி . . .
 
க்ருஷ்ணா . . .
எனது பக்திக்கும்
நீயே சாட்சி . . .

 
க்ருஷ்ணா . . .
எனது அறியாமைக்கும்
நீயே சாட்சி . . .

க்ருஷ்ணா . . .
எனது ஞானத்திற்கும்
நீயே சாட்சி . . .

க்ருஷ்ணா . . .
எனது வருத்தத்திற்க்கும்
நீயே சாட்சி . . .

க்ருஷ்ணா . . .
எனது கோபத்திற்க்கும்
நீயே சாட்சி . . .

க்ருஷ்ணா . . .
எனது பொறாமைக்கும்
நீயே சாட்சி . . .

க்ருஷ்ணா . . .
எனது அன்பிற்க்கும்
நீயே சாட்சி . . .

க்ருஷ்ணா . . .
எனது தோல்விகளுக்கும்
நீயே சாட்சி . . .

க்ருஷ்ணா . . .
எனது வெற்றிகளுக்கும்
நீயே சாட்சி . . . 

க்ருஷ்ணா . . .
எனது அஹம்பாவத்திற்க்கும்
நீயே சாட்சி . . .

க்ருஷ்ணா . . .
எனது அழுகைக்கும்
நீயே சாட்சி . . .

க்ருஷ்ணா . . .
எனது சிரிப்பிற்க்கும்
நீயே சாட்சி . . .

க்ருஷ்ணா . . .
எனது நடிப்பிற்க்கும்
நீயே சாட்சி . . .

க்ருஷ்ணா . . .
எனது நகைச்சுவைக்கும்
நீயே சாட்சி . . .

க்ருஷ்ணா . . .
எனது நம்பிக்கைக்கும்
நீயே சாட்சி . . .

க்ருஷ்ணா . . .
எனது வலிகளுக்கும்
நீயே சாட்சி . . .

க்ருஷ்ணா . . .
என் லக்ஷியங்களுக்கும்
நீயே சாட்சி . . .

க்ருஷ்ணா . . .
எனது உண்மைக்கும்
நீயே சாட்சி . . .

க்ருஷ்ணா . . .
எனது பொய்மைக்கும்
நீயே சாட்சி . . .

க்ருஷ்ணா . . .
எனது பாபத்திற்க்கும்
நீயே சாட்சி . . .

க்ருஷ்ணா . . .
எனது புண்ணியத்திற்க்கும்
நீயே சாட்சி . . . 

க்ருஷ்ணா . . .
எனது மனதிற்க்கும்
நீயே சாட்சி . . .

க்ருஷ்ணா . . .
எனது வாக்குக்கும்
நீயே சாட்சி . . . 

க்ருஷ்ணா . . .
என் வாழ்க்கைக்கும்
நீயே சாட்சி . . .

க்ருஷ்ணா . . .
எனக்கும் நீயே சாட்சி . . .

அதனால் சாட்சிக்காரா . . .

நீயே சரி செய் . . .

எல்லோரும் சொல்லுவார்கள் . . .
சாட்சிக்காரன் காலில் விழுவதை விட,
சண்டைக்காரன் காலில் விழுவது மேல் . . .

ஆனால், அர்ஜுனன் எனக்குச்
சொல்லித்தந்த பாடம் . . .
சண்டைக்காரன் காலில் விழுவதை விட,
சாட்சிக்காரன் காலில் விழுவது மேல் . . .

இதுவல்லவா சுலபம் . . .
ஏனெனில் உலகமே என்னோடு
சண்டைபோடுகிறது . . .
ஏன் ! உலகம் . . .
நானே என்னோடு சண்டையல்லவா
ஒவ்வொரு நிமிடமும்
போட்டுக்கொண்டிருக்கின்றேன் . . .

ஆனால் சாட்சிக்காரன் நீ மட்டும்தானே . . .

அதனால் நான் தீர்மானமாக முடிவெடுத்துவிட்டேன் !

நிரந்தர சாட்சிக்காரனான உன் காலில்
விழுந்தால் தான் இந்தக் கொடிய, சுயநல
சண்டைக்காரர்களிடமிருந்து
நிரந்தரமாகத் தப்பிக்கமுடியும் ! ! !

அதனால் நின்னைச் சரணடைந்தேன் . . .
கண்ணா . . .
நின்னையே சரணடைந்தேன் . . .
நின்னை மட்டுமே சரணடைந்தேன் . . .

காப்பாற்று . . .காப்பாற்று . . .காப்பாற்று . . .

உன்னை சரணடைந்ததற்க்கும்,
க்ருஷ்ணா . . .நீயே சாட்சி . . .

என்னைக் காப்பாற்று என்று அலறுவதற்க்கும்,
க்ருஷ்ணா. . .நீயே சாட்சி . . .

 அதனால் சாட்சிக்காரா !
எல்லோரிடமும் நீயே சாட்சி சொல் . . . 
எமனிடமும் நீயே சாட்சி சொல் . . .

 

0 கருத்துகள்:

  © Blogger templates Newspaper III by Ourblogtemplates.com 2008

Back to TOP