ஆனந்தவேதம்

உனக்காக,உன் வாழ்க்கைக்காக,உன் ஆனந்தத்திற்காக...

இந்த வலைப்பதிவில் தேடு

வியாழன், 3 மார்ச், 2011

அசராத மனம் !

ராதேக்ருஷ்ணா 

எத்தனை துன்பங்கள்
வந்தாலும் அசராத மனமிருந்தால்
வாழ்வில் வெல்லமுடியும் !

எத்தனை அவமானங்கள்
வந்தாலும் அசராத மனமிருந்தால்
வாழ்வில் வெல்லமுடியும் !

எத்தனை பிரச்சனைகள்
வந்தாலும் அசராத மனமிருந்தால்
வாழ்வில் வெல்லமுடியும் !

எத்தனை தடைகள்
வந்தாலும் அசராத மனமிருந்தால்
வாழ்வில் வெல்லமுடியும் !

எத்தனை தோல்விகள்
வந்தாலும் அசராத மனமிருந்தால்
வாழ்வில் வெல்லமுடியும் !

எத்தனை பயங்கரங்கள்
நடந்தாலும் அசராத மனமிருந்தால்
வாழ்வில் வெல்லமுடியும் !

எத்தனை இழப்புகள்
ஏற்பட்டாலும் அசராத மனமிருந்தால்
வாழ்வில் வெல்லமுடியும் !

எத்தனைபேர் ஏமாற்றினாலும்
அசராத மனமிருந்தால்
வாழ்வில் வெல்லமுடியும் !

வடிகட்டின முட்டாளாக
இருந்தாலும் அசராத மனமிருந்தால்
வாழ்வில் வெல்லமுடியும் !

உடலில் ஊனமிருந்தாலும்
அசராத மனமிருந்தால்
வாழ்வில் வெல்லமுடியும் !

உதவிக்கு யாருமே இல்லையென்றாலும்
அசராத மனமிருந்தால்
வாழ்வில் வெல்லமுடியும் !

ஊரே ஒதுக்கித் தள்ளினாலும்
அசராத மனமிருந்தால்
வாழ்வில் வெல்லமுடியும் !

உற்றாரே பகைவர் ஆனாலும்
அசராத மனமிருந்தால்
வாழ்வில் வெல்லமுடியும் !

எல்லாவற்றையும் இழந்தாலும்
அசராத மனமிருந்தால்
வாழ்வில் வெல்லமுடியும் !

அசராத மனம் தா !
க்ருஷ்ணா ஒரு நாளும்
அசராத மனம் தா !

அசராத மனம் தா !
க்ருஷ்ணா எதற்கும்
அசராத மனம் தா !

அசராத மனம் தா !
க்ருஷ்ணா எப்பொழுதும்
அசராத மனம் தா !

க்ருஷ்ணா நீ தான் மனம் என்று
நீதானே கீதையில் சொன்னாய் . . .

அதனால் என் மனமான நீ
என்றும் திடமாக இரு . . .


0 கருத்துகள்:

  © Blogger templates Newspaper III by Ourblogtemplates.com 2008

Back to TOP