ஆனந்தவேதம்

உனக்காக,உன் வாழ்க்கைக்காக,உன் ஆனந்தத்திற்காக...

இந்த வலைப்பதிவில் தேடு

செவ்வாய், 29 மார்ச், 2011

இனியாவது வாழ்வோம் . . .

ராதேக்ருஷ்ணா

பிறந்துவிட்டோம் . . .
வாழ்ந்து பார்ப்போம் !

தோற்றுவிட்டோம் . . .
ஜெயித்துப் பார்ப்போம் !

ஏமாந்துவிட்டோம் . . .
ஜாக்கிரதையாய் இருப்போம் !

நொந்துவிட்டோம் . . .
உற்சாகம் கொள்வோம் !

துங்கிவிட்டோம் . . .
முழித்துக்கொள்வோம் !

திட்டிவிட்டோம் . . .
அன்பாய் பேசுவோம் !

அவமானப்பட்டோம் . . .
நிரூபணம் செய்வோம் !

உளறிக்கொட்டினோம் . . .
தெளிவாய் பேசுவோம் !

செலவழித்துவிட்டோம் . . .
சேமிக்கத் தொடங்குவோம் !

அழித்துவிட்டோம் . . .
புதியதாய் விதைப்போம் !

அழுக்காக்கிவிட்டோம் . . .
சுத்தம் செய்வோம் !

புலம்பிவிட்டோம் . . .
சிரித்துக் காட்டுவோம் !

அழுதுவிட்டோம் . . .
ஆனந்தத்தை அனுபவிப்போம் !

பொறாமை பட்டோம் . . .
மனதார வாழ்த்துவோம் ! 

மறந்துவிட்டோம் . . .
ஞாபகம் கொள்வோம் !

அவசரப்பட்டுவிட்டோம் . . .
நிதானம் கொள்வோம் !

வியாதியை அநுபவித்தோம் . . .
ஆரோக்கியமாய் இருப்போம் !

இனியாவது சுகப்படுவோம் . . .
இனியாவது நிம்மதியை ருசிப்போம் !
இனியாவது வாழ்வோம் . . . 

0 கருத்துகள்:

  © Blogger templates Newspaper III by Ourblogtemplates.com 2008

Back to TOP