ஆனந்தவேதம்

உனக்காக,உன் வாழ்க்கைக்காக,உன் ஆனந்தத்திற்காக...

இந்த வலைப்பதிவில் தேடு

திங்கள், 14 மார்ச், 2011

சௌக்கியமாயிருடா . . .

ராதேக்ருஷ்ணா


க்ருஷ்ணா !
 நன்றாக சாப்பிட்டாயா ?

க்ருஷ்ணா !
எல்லாவற்றையும் சாப்பிட்டாயா ?

க்ருஷ்ணா !
வயிறு நிறைந்ததா ?

க்ருஷ்ணா !
 த்ருப்தியாக சாப்பிட்டாயா ?

க்ருஷ்ணா !
 உனக்குப் பிடித்திருந்ததா ?

க்ருஷ்ணா !
வேறு ஏதேனும் வேண்டுமா ?

க்ருஷ்ணா !
பால் குடித்தாயா ?

க்ருஷ்ணா !
சீக்கிரம் படுத்துக்கொள் . . .

க்ருஷ்ணா !
நன்றாகத் தூங்கு . . .

க்ருஷ்ணா !
 காலையில் பொறுமையாக எழுந்திரு . . .

க்ருஷ்ணா !
நாளை மாடு மேய்க்கப் போகவேண்டாம் . . .

க்ருஷ்ணா !
நான் கால் பிடித்து விடவா ?

க்ருஷ்ணா !
நான் கையில் சொடுக்கு எடுக்கவா ?

க்ருஷ்ணா !
நிறைய தண்ணீர் குடி . . .

க்ருஷ்ணா !
இன்னொரு தாம்பூலம் வேண்டுமா ?

க்ருஷ்ணா !
ஜீரணத்திற்கு கஷாயம் தரட்டுமா ?

க்ருஷ்ணா !
வா ! மடியில் படுத்துக்கொள் ! ! !

க்ருஷ்ணா !
தாலாட்டுப் பாடவா !

க்ருஷ்ணா !
ஒரு நிமிஷம் . . .
இரு . . .இரு . . .
த்ருஷ்டி சுத்திப்போடுகிறேன்  . . .

இந்த தேவர்களின்
பொறாமைக் கண்கள்
உன் மீது பட்டிருக்கிறது ! ! !

அப்பாடா . . .
எத்தனை த்ருஷ்டி . . .
என் பட்டுக்குஞ்சலத்திற்கு . . .

அச்சோடா ! ! !
ராஜா . . .
செல்லமே . . .
சமத்தே . . .

நன்னாயிருடா . . .
என் தங்கமே . . .

த்வாரகாதீசா . . .
சௌக்கியமாயிருடா . . .

 

0 கருத்துகள்:

  © Blogger templates Newspaper III by Ourblogtemplates.com 2008

Back to TOP