ஆனந்தவேதம்

உனக்காக,உன் வாழ்க்கைக்காக,உன் ஆனந்தத்திற்காக...

இந்த வலைப்பதிவில் தேடு

திங்கள், 6 ஜூன், 2011

பிறந்த நாள் ! ! !

ராதேக்ருஷ்ணா


நான் ஏன் பிறந்தேன் ? ? ?


ஒரு வேளை பிறந்திருக்காவிட்டால் ? ! ?
இன்று உயிரோடு
இருந்திருக்கமாட்டேன் . . .


உயிரோடு இல்லையென்றால் ? ! ?
என் குருஜீஅம்மாவை
தரிசித்திருக்கமாட்டேன் . . .


தரிசித்திருக்காவிட்டால் ? ! ?
ராதேக்ருஷ்ணா நாமத்தை
அறிந்திருக்கமாட்டேன் . . .


அறிந்திருக்காவிட்டால் ? ! ?
என்னை புரிந்துகொண்டு
இருக்கமாட்டேன் . . .


புரிந்து கொண்டிருக்காவிட்டால் ? ! ?
க்ருஷ்ணனை அனுபவித்து
இருக்கமாட்டேன் . . .


அனுபவித்திருக்காவிட்டால் ? ! ?
வாழ்வில் பக்தி
செய்திருக்கமாட்டேன். . .


பக்தி செய்திருக்காவிட்டால் ? ! ?
வாழ்வை உணர்ந்து
ரசித்திருக்கமாட்டேன் . . .


ரசித்திருக்காவிட்டால் ? ! ?
நான் மனிதனாக
இருக்கமாட்டேன் . . .


அதனால் நான் மனிதனாய்
இருப்பதற்கு
பிறந்தது பயனாயிற்று . . .

இந்த உடலைத் தாங்கிய
என் தாய்க்கு நன்றி . . .

இந்த உடலைத் தந்த
என் தந்தைக்கு நன்றி . . .

இந்த உடலைக் காப்பாற்றிய
என் க்ருஷ்ணனுக்கு நன்றி . . .

என்னை மனிதனாக்கிய
என் குருஜீஅம்மாவுக்கு நன்றி . . .

நன்றி . . .நன்றி . . .நன்றி . . .

இந்த உடலில் உயிராய்
இருக்கும் க்ருஷ்ணா . . .

உன்னையே சரணடைந்தேன் . . .
உன்னையே நம்புகின்றேன் . . .
உன் திருவடிகளைப் பிடித்துவிட்டேன் . . .

உன் இஷ்டப்படி இந்த உடலையும்,
இந்த ஆத்மாவையும்
வைத்து அனுபவித்துக்கொள் . . .

இதுவே என் பிறந்தநாளுக்கு
நீ தரும் பரிசு . . .

தருவாய் என காத்திருக்கிறேன் . . .



0 கருத்துகள்:

  © Blogger templates Newspaper III by Ourblogtemplates.com 2008

Back to TOP