ஆனந்தவேதம்

உனக்காக,உன் வாழ்க்கைக்காக,உன் ஆனந்தத்திற்காக...

இந்த வலைப்பதிவில் தேடு

புதன், 27 ஜூலை, 2011

வந்தோமய்யா !

ராதேக்ருஷ்ணா


திருமலைக்கு வந்தோமய்யா !
திருவருள் கிடைத்தய்யா . . .

திருப்பதிக்கு வந்தோமய்யா !
உன் தரிசனம் தந்தாயய்யா . . .

திடீரென வந்தோமய்யா !
திக்குமுக்காட வைத்தாயய்யா . . .

திமிரோடு வந்தோமய்யா !
திருந்தி திரும்பினோமய்யா . . .

காமத்தோடு வந்தோமய்யா !
ப்ரேமையைத் கொடுத்தாயய்யா . . .

சுயநலத்தோடு வந்தோமய்யா !
சுத்தமாக்கி சரிசெய்தாயய்யா . . .

நோயோடு வந்தோமய்யா !
ஆரோக்கியத்தை அளித்தாயய்யா . . .

கவலையோடு வந்தோமய்யா !
ஆனந்தத்தை பொழிந்தாயய்யா . . .

பயத்துடன் வந்தோமய்யா !
அபயமளித்து ஆட்கொண்டாயய்யா . . .

சந்தேகத்தோடு வந்தோமய்யா !
சமாதானம் செய்தாயய்யா . . .

மிருகமாய் வந்தோமய்யா !
மனிதராய் மாற்றினாயய்யா . . .

பாரத்தோடு வந்தோமய்யா !
பாசத்தோடு பார்த்தாயய்யா . . .

பசியோடு வந்தோமய்யா !
ப்ரசாதம் ஊட்டினாயய்யா . . .

களைத்து வந்தோமய்யா !
பலத்தோடு திரும்பினோமய்யா . . .

நம்பி வந்தோமய்யா !
வீண்போகாதபடி காத்தாயய்யா . . .

ஏழுமலைக்கு வந்தோமய்யா !
வாழ்வில் விளக்கேற்றினாயய்யா . . .

ஒன்றும் நாங்கள் தரவில்லையய்யா !
நீயும் எங்களை ஒதுக்கவில்லையய்யா . . .

மலையப்பா . . .ராஜா. . .கலியுக தெய்வமே !
உனக்குச் சமம் உலகில் இல்லையய்யா . . .


0 கருத்துகள்:

  © Blogger templates Newspaper III by Ourblogtemplates.com 2008

Back to TOP