ஆனந்தவேதம்

உனக்காக,உன் வாழ்க்கைக்காக,உன் ஆனந்தத்திற்காக...

இந்த வலைப்பதிவில் தேடு

சனி, 17 செப்டம்பர், 2011

விழுந்தாய் . . .எழுந்திரு !

ராதேக்ருஷ்ணா



பத்து தடவை கீழே விழுந்தால்
ஆயிரம் தடவை எழுந்திரு . . .



ஐம்பது தடவை ஏமாந்துபோனால்
பத்தாயிரம் தடவை ஏமாறாமலிரு . . .



நூறு தடவை தோற்றுப்போனால்
லக்ஷம் தடவை ஜெயித்துவிடு . . .


ஆயிரம் தடவை அவமானப்பட்டால்
கோடி தடவை மரியாதையை அடைந்துவிடு . . .


கோடி தடவை பயந்துபோனால்
பலகோடி தடவை தைரியமாயிரு . . .

விடாதே . . .
உன்னை நீயே பலவீனமாக்காதே . . .


மறந்துவிடாதே . . .
உனக்குள் இருக்கும் சக்தியை
மறந்துவிடாதே . . .


தொலைத்துவிடாதே . . .
உன்னுள் புதைந்திருக்கும் திறமையை
தொலைத்துவிடாதே . . .


விட்டுக்கொடுக்காதே . . .
உன் முயற்சிகளை
விட்டுக்கொடுக்காதே . . .

நீ விழுந்ததைக்
கணக்குப் பண்ணாதே . . .
நீ எழுந்ததை மட்டுமே
நினைவில் வைத்திரு . . .


நீ தோற்றதை
எண்ணிப் புலம்பாதே . . .
நீ ஜெயித்ததை எண்ணி
இன்னும் ஜெயிக்கப்பார் . . .


நீ அவமானப்பட்டதை
நினைத்து அழாதே . . .
நீ பெருமையடைந்ததை
நினைத்து வென்றுகாட்டு . . .


யாருக்கும் இங்கே நேரமில்லை !


உன்னுடைய புலம்பலைக் கேட்டு
உனக்குச் சமாதானம் சொல்ல . . .


உன்னுடைய தோல்விகளில்
உனக்குத் தோள் கொடுக்க . . .


உன்னுடைய பலவீனங்களுக்காக
உனக்கு உதவி செய்ய . . .


யாருக்கும் இங்கே நேரமில்லை . . .


இது வெல்பவர்களின் உலகம் !
இது வெல்பவர்களுக்கான உலகம் !


இங்கே தோற்றவரைக் கொண்டாடுவதில்லை !
இங்கே புலம்புவர் மதிக்கப்படுவதில்லை !
இங்கே அழுபவர் பெருமையடைவதில்லை !


உனக்கு உதவிக்கு யாரும் வேண்டாம் !
இந்த மனிதரை நம்பி நேரத்தை வீணாக்காதே !


நீயே விழுந்தாய் . . நீயே எழுந்திரு !
நீயே தோற்றாய் . . .நீயே வெல் !
நீயே அவமானப்பட்டாய் . . .நீயே மரியாதை அடை !


நீயேதான் எழ வேண்டும் . . .
உன்னை கைதூக்கி விட
இந்த உலகிற்கு நேரமில்லை . . .


நீயேதான் வெல்லவேண்டும் . . .
உனக்கு வழிசொல்லிக் கொடுக்க
இந்த உலகிற்கு பொறுமையில்லை . . .


நீயேதான் மரியாதையைப் பெறவேண்டும் . . .
உனக்கு மரியாதை தர
இங்கு யாரும் தயாராகயில்லை . . .

முயல் . . .அடைவாய் . . .
போராடு . . .பெறுவாய் . . .
தீர்மானி . . .நிரூபிப்பாய் . . .



0 கருத்துகள்:

  © Blogger templates Newspaper III by Ourblogtemplates.com 2008

Back to TOP