ஆனந்தவேதம்

உனக்காக,உன் வாழ்க்கைக்காக,உன் ஆனந்தத்திற்காக...

இந்த வலைப்பதிவில் தேடு

வியாழன், 22 செப்டம்பர், 2011

நீ பாபியல்ல ! ! !

ராதேக்ருஷ்ணா

நீ பாபியல்ல . . .

தவறு செய்வது மனித இயல்பு . . .
 அதனால் நீ பாபியல்ல !

ஆசைப்படுவது மனித இயல்பு . . .
 அதனால் நீ பாபியல்ல !

கஷ்டம் வருவது வாழ்வில் சகஜம் . . .
 அதனால் நீ பாபியல்ல !

நோய் வருவது உடலின் தன்மை . . .
அதனால் நீ பாபியல்ல !

தோல்வியடைவது மிக இயல்பானது . . .
 அதனால் நீ பாபியல்ல !

அங்கஹீனம் ஒரு குறையல்ல . . .
 அதனால் நீ பாபியல்ல !

நஷ்டம் என்பது நன்மைக்கே . . .
அதனால் நீ பாபியல்ல !
 
ஜனனம் என்பது ரஹஸ்யம் . . .
அதனால் நீ பாபியல்ல !

ஏழ்மை என்றும் நிலையில்லை . . .
அதனால் நீ பாபியல்ல !

அவமானம் நிரந்தரமல்ல . . .
அதனால் நீ பாபியல்ல !

உன்னை நீ சரிசெய்துகொள்ள
வந்திருக்கிறாய் . . .
அதனால் நீ பாபியல்ல !

உடனேயே நீ சரியாகிவிடமாட்டாய் . . .
அதனால் நீ பாபியல்ல !

காலம் உன்னைப் பக்குவப்படுத்துகிறது . . .
அதனால் நீ பாபியல்ல !

நீ கடவுளின் குழந்தை . . .
அதனால் நீ பாபியல்ல . . .
நீ பாபியல்ல . . . நீ பாபியல்ல . . .

பாவத்தின் சம்பளம் மரணமல்ல . . .
அதனால் நீ பாபியல்ல !
சத்தியமாய் நீ பாபியல்ல . . .
நிச்சயமாய் நீ பாபியல்ல . . .
 

0 கருத்துகள்:

  © Blogger templates Newspaper III by Ourblogtemplates.com 2008

Back to TOP