ஆனந்தவேதம்

உனக்காக,உன் வாழ்க்கைக்காக,உன் ஆனந்தத்திற்காக...

இந்த வலைப்பதிவில் தேடு

திங்கள், 24 அக்டோபர், 2011

காரணம் யாரோ ? ? ?

ராதேக்ருஷ்ணா


கண்களிலே ஆனந்த பாஷ்பம் . . .
காரணம் யாரோ ? ? ?

உடலெல்லாம் மயிர்கூச்சல் . . .
காரணம் யாரோ ? ? ?

மனம் முழுக்க சந்தோஷம் . . .
காரணம் யாரோ ? ? ?

நினைக்க நினைக்க இனிக்கிறது . . .
காரணம் யாரோ ? ? ?

வாயெல்லாம் சிரிப்பு . . .
காரணம் யாரோ ? ? ?

வார்த்தைகளிலெல்லாம் குதூகலம் . . .
காரணம் யாரோ ? ? ?

நடையெல்லாம் துள்ளல் . . .
காரணம் யாரோ ? ? ?

பேச்செல்லாம் ஆனந்தமயம் . . .
காரணம் யாரோ ? ? ?

காரியங்களிலெல்லாம் நம்பிக்கை . . .
காரணம் யாரோ ? ? ?

வாழ்வெல்லாம் பரமானந்தம் . . .
காரணம் யாரோ ? ? ?

சொல்லமுடியாத சுகம் . . .
காரணம் யாரோ ? ? ?

மறைக்கமுடியாத அனுபவம் . . .
காரணம் யாரோ ? ? ?

காரணம் யாரோ . . .?

என் பத்மநாபனைத் தவிர
வேறு யார்தான் காரணம் . . .

என் காதலா . . .
என் அழகா . . .
என் கணவா . . .

பத்மநாபா . . .

என்றும் உன் கோபாலவல்லி . . .



0 கருத்துகள்:

  © Blogger templates Newspaper III by Ourblogtemplates.com 2008

Back to TOP