ஆனந்தவேதம்

உனக்காக,உன் வாழ்க்கைக்காக,உன் ஆனந்தத்திற்காக...

இந்த வலைப்பதிவில் தேடு

ஞாயிறு, 1 ஜனவரி, 2012

நாம் ஒன்று நினைத்தால் . . .

ராதேக்ருஷ்ணா
நாம் ஒன்று நினைத்தால்,
தெய்வம் வேறொன்றை நினைக்கிறது !

இதுதான் பொதுவாக
எல்லோரும் சொல்லும் வார்த்தை . . .

ஆனால் இது தவறு . . .

தெய்வம் நல்லதை நினைக்க
நாம் தான் தவறானதைக் கேட்கிறோம் . . .

நாம் ஆசையால் நினைக்கிறோம் . . .
தெய்வம் நல்லதை நினைக்கிறது . . .

நாம் தேவையில்லாததை நினைக்கிறோம் . . .
தெய்வம் தேவையானதை மட்டுமே
நினைக்கிறது . . .

நாம் அகம்பாவத்தில் நினைக்கிறோம் . . .
தெய்வம் அன்போடு நினைக்கிறது . . .

நாம் அவசரமாய் நினைக்கிறோம் . . .
தெய்வம் நிதானமாய் நினைக்கிறது . . .

நாம் அசிங்கமாய் நினைக்கிறோம் . . .
தெய்வம் அழகாய் நினைக்கிறது . . .

நாம் தவறாய் நினைக்கிறோம் . . .
தெய்வம் சரியாய் நினைக்கிறது . . .

நாம் பிடிவாதமாய் நினைக்கிறோம் . . .
தெய்வம் உறுதியாய் நினைக்கிறது . . .

நாம் யோசிக்காமல் நினைக்கிறோம் . . .
தெய்வம் யோசித்து நினைக்கிறது . . .

நாம் தடுமாறி நினைக்கிறோம் . . .
தெய்வம் தடுமாற்றமில்லாமல் நினைக்கிறது !
நாம் நினைத்தே வீணானோம் . . .
தெய்வத்தின் அருளை தடுத்தோம் . . .
வாழ்வை பாழாக்கினோம் . . .

அதனால் இனி நாம் நினைக்கவேண்டாம் ...
நாம் நினைப்பதை நிறுத்துவோம் . . .
தெய்வம் மட்டும் இனி நினைக்கட்டும் . . .
அது மட்டுமே நடக்கட்டும் . . .

நாம் தெய்வத்தின் வழியில் செல்வோம் . . .
இன்று முதல் தெய்வமே வழி . . .
இன்று முதல் தெய்வமே கதி . . .
இன்று முதல் தெய்வமே பொறுப்பு . . .

நாம் இருப்போம் சுகமாக . . .



0 கருத்துகள்:

  © Blogger templates Newspaper III by Ourblogtemplates.com 2008

Back to TOP