ஆனந்தவேதம்

உனக்காக,உன் வாழ்க்கைக்காக,உன் ஆனந்தத்திற்காக...

இந்த வலைப்பதிவில் தேடு

வியாழன், 5 ஜனவரி, 2012

ரகசியமாய் . . .


ராதேக்ருஷ்ணா

வைகுண்ட ஏகாதசி . . .

என் கண்ணன் கண் விழிக்கும் நாள் !

ராஜாதி ராஜன் கண் மலரும் நாள் !

கண் விழித்தாயா கண்ணா . . .


ஆனந்தமாய் உறங்கி எழுந்தாயா கண்ணா . . .


கண் விழித்தவுடன் யாரை முதலில்
பார்த்தாய் கண்ணா . . .


இந்த வைகுண்ட ஏகாதசியில்
என்ன விசேஷம் . . .


இந்த வைகுண்ட ஏகாதசிக்கு
யாரெல்லாம் வைகுண்டம் வருகிறார் ?


இந்த வைகுண்ட ஏகாதசிக்கு
வைகுண்டத்தில் என்ன விசேஷம் ?


இந்த வைகுண்ட ஏகாதசிக்கு
யாருக்கெல்லாம் தரிசனம் ?


இந்த வைகுண்ட ஏகாதசியின்
த்வாதசிக்கு எங்கே ஆகாரம் ?


இந்த வைகுண்ட ஏகாதசி
யாரோடு கண் விழிக்கப்போகிறாய் ?

இந்த வைகுண்ட ஏகாதசி இரவுக்கு
யார் வீட்டில் தங்கப்போகிறாய் ?


இந்த வைகுண்ட ஏகாதசியில்
யாருக்கெல்லாம் என்ன தரப்போகிறாய் ?

இந்த வைகுண்ட ஏகாதசிக்கு
எங்கெல்லாம் போகப்போகிறாய் ?




ரகசியமாய் எனக்குச் சொல் . . .


நான் யாருக்கும் சொல்லமாட்டேன் . . .



0 கருத்துகள்:

  © Blogger templates Newspaper III by Ourblogtemplates.com 2008

Back to TOP