ஆனந்தவேதம்

உனக்காக,உன் வாழ்க்கைக்காக,உன் ஆனந்தத்திற்காக...

இந்த வலைப்பதிவில் தேடு

திங்கள், 23 ஜனவரி, 2012

உடன்படிக்கை . . .

ராதேக்ருஷ்ணா

என் மனமே . . .

உன்னிடம் சிலவற்றை
நான் எதிர்பார்க்கிறேன் . . .

அதை நான் உன்னிடமே
உள்ளபடி கூறுகின்றேன் . . . 

என் மனமே அமைதியாயிரு !


என் மனமே அசராமலிரு !


என் மனமே நிதானமாயிரு !


என் மனமே குதூகலமாயிரு !


என் மனமே தைரியமாயிரு !


என் மனமே நம்பிக்கையோடிரு !


என் மனமே அன்போடிரு !

என் மனமே சிரத்தையோடிரு !


என் மனமே விழித்திரு !


என் மனமே தனித்திரு !


என் மனமே பசித்திரு !


என் மனமே திருப்தியாயிரு !


என் மனமே ஆனந்தமாயிரு !


என் மனமே க்ருஷ்ணனோடிரு !


என் மனமே குருவோடிரு !


என் மனமே . . .


நீ சரியாயிருந்தால்
நான் சரியாயிருப்பேன் . . .


நான் சரியாயிருந்தால்
நீ நிம்மதியாயிருப்பாய் . . .


நாம் இருவரும்
ஒருவரை ஒருவர்
சார்ந்தே இருக்கிறோம் . . .


நம்மில் யார்
சரியில்லையென்றாலும்
கஷ்டம் நம் இருவருக்குமே !


அதனால் போட்டி வேண்டாம் . . .


இருவரும் சரியாயிருக்க
இன்று முதல்
உடன்படிக்கை செய்துகொள்வோம் !


இனி நம் வாழ்வு சுகப்படட்டும் ! ! !

0 கருத்துகள்:

  © Blogger templates Newspaper III by Ourblogtemplates.com 2008

Back to TOP