அவன் க்ருபை போதும் . . .
ராதேக்ருஷ்ணா
நான் ஒன்றும் பெரிய
பக்தனில்லை . . .
நான் ஒன்றும் உத்தம
சன்னியாசியில்லை . . .
நான் எல்லாவற்றையும்
வெறுத்த தியாகியுமில்லை . . .
நான் எதையும் விடத்தயாராயிருக்கும்
வைராக்கியசாலியில்லை !
நான் எதையும் தாங்கும்
இதயம் படைத்தவனில்லை !
நான் எப்போதும் பொறுமையைக்
கடைபிடிக்கும் உத்தமனில்லை !
நான் விடாது நாமஜபம்
செய்யும் ஆசையுடையவனில்லை !
நான் எல்லாவற்றையும்
உணர்ந்த ஞானியுமில்லை !
இது தான் என் உண்மை நிலவரம் !
இதையும் தாண்டி
க்ருஷ்ணனை நான் நேசிக்கிறேன்
என்றால் அது அவன் க்ருபை . . .
இதையும் தாண்டி
அவன் நாமம் என் வாயில்
வருகிறதென்றால்
அது அவன் க்ருபை . . .
இதையும் தாண்டி
உலகம் என்னை க்ருஷ்ண பக்தன்
என்று ஏற்றுக்கொண்டிருக்கிறதென்றால்
அது அவன் க்ருபை . . .
இதையும் தாண்டி
நான் வாழ்வில் ஜெயித்துக் கொண்டிருக்கிறேனென்றால்
அது அவன் க்ருபை . . .
இதையும் தாண்டி
நான் ஆனந்தமாயிருக்கிறேன்
என்றால் அது அவன் க்ருபை. . .
இதையும் தாண்டி
நான் தைரியமாய் இந்த உலகில்
வாழ்கின்றேனென்றால்
அது அவன் க்ருபை . . .
எனக்கு இது போதும் . . .
ஆம் . . .
அவன் க்ருபை போதும் . . .
க்ருஷ்ண க்ருபை போதும் . . .
என்றும் இது போதும் . . .
0 கருத்துகள்:
கருத்துரையிடுக