ஆனந்தவேதம்

உனக்காக,உன் வாழ்க்கைக்காக,உன் ஆனந்தத்திற்காக...

இந்த வலைப்பதிவில் தேடு

புதன், 15 பிப்ரவரி, 2012

மன்னிப்புக் கோருகிறேன் . . .


ராதேக்ருஷ்ணா


க்ருஷ்ணா . . .
உன்னிடம் ஒரு வேண்டுகோள் !

நான் தெரிந்து பலரின்
மனதைப் புண்படுத்தி இருக்கிறேன் !
 அவர்கள் மனதிற்கு
சமாதானம் தா . . .

நான் தெரியாமல் பலரின்
நெஞ்சை காயப்படுத்தி இருக்கிறேன் !
அவர்கள் நெஞ்சத்திற்கு
ஆறுதல் தா . . .

நான் என் உடலால்
சிலருக்குக் கஷ்டம் கொடுத்திருக்கிறேன் !
அவர்கள் உடலுக்கு
இதம் தா . . .

நான் என் மனதால்
சிலருக்குக் கஷ்டம்
நினைத்திருக்கிறேன் !
அவர்களுக்கு நிம்மதி தா . . .


க்ருஷ்ணா . . .
என்னால் கஷ்டம் அடைந்த
அனைத்து ஜீவர்களிடம்
நான் என் மனதார
மன்னிப்புக் கோருகிறேன் . . .


உனக்குத் தெரியும் !
என்னால் துன்பம்
அனுபவித்தவர்கள் அனைவரையும் !


இனி என்னால் ஒரு
ஜீவனுக்கும்
ஒரு துன்பம் நேரக்கூடாது !


தயவு செய்து
நான் யாருக்கும் கஷ்டம்
தராமல் இருக்கும்படியாக
இருக்க நீ ஆசிர்வாதம் செய் !


க்ருஷ்ணா . . .
மன்னித்து விடு  . . .


உன் குழந்தைக்கு
உன்னிடம் மன்னிப்புக்
கேட்பதைத் தவிர
இந்த வாழ்வில் வேறு
எதுவும் உருப்படியாகச்
செய்யத்தெரியாது ! ! !

 

0 கருத்துகள்:

  © Blogger templates Newspaper III by Ourblogtemplates.com 2008

Back to TOP