ஆனந்தவேதம்

உனக்காக,உன் வாழ்க்கைக்காக,உன் ஆனந்தத்திற்காக...

இந்த வலைப்பதிவில் தேடு

வியாழன், 16 பிப்ரவரி, 2012

விட்டுக்கொடு . . .

ராதேக்ருஷ்ணா

விட்டுக்கொடு . . .

விட்டுக்கொடுத்தவர்கள்
கெட்டுப்போனதில்லை . . .


சில இடங்களில்
விட்டுக்கொடுக்கலாம் . . .


சில பேரிடம்
விட்டுக்கொடுக்கலாம் . . .


சில விஷயங்களில்
விட்டுக்கொடுக்கலாம் . . .


சில சந்தர்ப்பங்களில்
விட்டுக்கொடுக்கலாம் . . .


சில காரியங்களில்
விட்டுக்கொடுக்கலாம் . . .


விட்டுக்கொடுப்பதால்
நீ வாழ்வில் உயர்ந்துகொண்டேயிருக்கிறாய் !


விட்டுக்கொடுப்பதால்
நீ பெருமை அடைகிறாய் !


விட்டுக்கொடுப்பதால்
நீ பலம் பெறுகிறாய் !


விட்டுக்கொடுப்பதால்
நீ ஆசிர்வாதம் பெறுகிறாய் !


விட்டுக்கொடுப்பதால்
நீ பக்குவப்படுகிறாய் !


விட்டுக்கொடுப்பதால்
நீ அடுத்தவரை கடனாளியாக்குகிறாய் !


விட்டுக்கொடுப்பதால்
நீ அதிகம் பெறுகிறாய் !


விட்டுக்கொடுப்பதால்
நீ இன்பம் அடைகிறாய் !

கொஞ்சம் விட்டுக்கொடுத்துப் பார் !

உன் அன்பு எல்லைகளைக் கடக்கும் !

 
 

0 கருத்துகள்:

  © Blogger templates Newspaper III by Ourblogtemplates.com 2008

Back to TOP