ஆனந்தவேதம்

உனக்காக,உன் வாழ்க்கைக்காக,உன் ஆனந்தத்திற்காக...

இந்த வலைப்பதிவில் தேடு

வெள்ளி, 24 பிப்ரவரி, 2012

இதில் என்ன தப்பு . . .

ராதேக்ருஷ்ணா
 
 
முயற்சிக்காதே . . .
 
ஒரு நாளும் முயற்சிக்காதே . . . 
 
நீ சிறந்த பக்தன்/பக்தை
என்று உலகில் நிரூபிக்க
ஒரு நாளும் முயற்சிக்காதே . . .
 
 
பக்தி என்பது உனது
தனிப்பட்ட விஷயம் . . .
 
 
அதில் அடுத்தவருக்கு
ஒரு சம்மந்தமும் இல்லை . . .
 
 
கடவுளை நம்புவதும்,
நம்பாதிருப்பதும் அவரவர்
மனது,காலம்,வாழ்க்கையைப்
பொறுத்து அமைகிறது . . .
 
 
முதலில் நம்பாதவர்
பிறகு நம்புவதும் உண்டு ! ! !
 
 
முதலில் நம்பினவர்
பிறகு சந்தேகிப்பதும் உண்டு ! ! !
 
 
பக்தி என்பது குழந்தையின்
இனம் புரியாத சந்தோஷம் போன்றது !
 
 
ஒரு குழந்தையின் சந்தோஷத்தை
யாராலும் உள்ளபடி சொல்லவேமுடியாது !
 
 
ஒரு குழந்தையின் சந்தோஷத்தின்
காரணத்தை கண்டுபிடிப்பதும் கஷ்டம் !
 
 
குழந்தை தன் மனதைக் கொண்டு
தன் சந்தோஷத்தை அனுபவிக்கிறது !
 
 
அதுபோலே பக்தன்/பக்தை
தன் மனதினால் சந்தோஷத்தை
அனுபவிக்கிறார் . . .
 
 
இதில் என்ன தப்பு . . .
 
 
பக்தியைப் பற்றி
தெரியாதவர்களுக்கு இதில் என்ன கவலை ?
 
 
நாஸ்தீகர்களுக்கு
இதில் ஏன் பொறாமை ?
 
 
 விஞ்ஞானி தன் ஆராய்ச்சியில்
சந்தோஷம் காண்கிறான் . . .
 
 
சம்சாரி தன் குடும்பத்தில்
சந்தோஷம் காண்கிறான் . . .
 
 
குடிகாரன் போதையில்
சந்தோஷம் காண்கிறான் . . .
 
 
குழந்தை பொம்மையில்
சந்தோஷம் காண்கிறது . . .
 
 
இளவயது உடலுறவில்
சந்தோஷம் காண்கிறது . . .
 
 
முதியவயது அக்கறையில்
சந்தோஷம் காண்கிறது . . .
 
 
திருடன் திருட்டில்
சந்தோஷம் காண்கிறான் . . .
 
 
 இப்படி ஒவ்வொருவரும்
ஏதோ ஒன்றில் சந்தோஷம்
அடைகிறார்கள் . . .
 
 
அது போலே பக்தரும் பக்தியில் . . .
 
 
இதில் என்ன குற்றம்  . . .
 இதில் என்ன பைத்தியக்காரத்தனம் . . .
இதில் என்ன மூடத்தனம் . . .
 
நீ உன் பக்தியை அனுபவி . . .
 
மற்றவற்றை ஒதுக்கித் தள்ளு . . .
 
 
 

0 கருத்துகள்:

  © Blogger templates Newspaper III by Ourblogtemplates.com 2008

Back to TOP