ஆனந்தவேதம்

உனக்காக,உன் வாழ்க்கைக்காக,உன் ஆனந்தத்திற்காக...

இந்த வலைப்பதிவில் தேடு

புதன், 14 மார்ச், 2012

உத்திரமேரூர் . . .

ராதேக்ருஷ்ணா
 
 
இன்று நான் அடைந்தது
அற்புத ஆனந்தம் . . .
 
 
யுதிஷ்டிரர் பூஜித்த
சுந்தர வரதனை
உத்திரமேரூரில் தரிசித்தேன் !
 
 
அர்ஜுனன் பூஜித்த
அச்யுத வரதனை
உத்திரமேரூரில் தரிசித்தேன் !
 
 
நகுலன் பூஜித்த
அனிருத்த வரதனை
உத்திரமேரூரில் தரிசித்தேன் !
 
 
சகதேவன் பூஜித்த
கல்யாண வரதனை
உத்திரமேரூரில் தரிசித்தேன் !
 
 
பீமன் பூஜித்த
வைகுண்ட வரதனை
முதல் மாடியில்
உத்திரமேரூரில் தரிசித்தேன் !
 
 
அர்ஜுனனுக்கு உபதேசித்த
க்ருஷ்ணனை அவனோடு
முதல் மாடியில்
உத்திரமேரூரில் தரிசித்தேன் !
 
 
ப்ரஹ்லாத வரதனான
யோக நரசிம்மனை
முதல் மாடியில்
உத்திரமேரூரில் தரிசித்தேன் !
 
 
அழகாய் உபதேசிக்கும்
லக்ஷ்மி வராஹ ஸ்வாமியை
முதல்மாடியில்
உத்திரமேரூரில் தரிசித்தேன் !
 
 
தலைக்கும் கைக்கும்
தலையணையை வைத்துப்
படுத்திருக்கும் அரங்கநாதனை
இரண்டாவது மாடியில்
உத்திரமேரூரில் தரிசித்தேன் !
 
முதல்முதலாக
திருமண் சகிதமான சிவபெருமானை
அரங்கனின் அருகில்
இரண்டாவது மாடியில்
உத்திரமேரூரில் தரிசித்தேன் !
 
 
கங்கையும் யமுனையும்
வாயில் காப்பவர்களாக இருக்க
மார்கண்டேயரின் தலையில் கைவைத்து
அன்பாய் ஆசிர்வதிக்கும் அரங்கனை
இரண்டாவது மாடியில்
உத்திரமேரூரில் தரிசித்தேன் !
 
 
1000 பிராம்மணர்கள் வேதம் ஓதிய
உத்திரமேரூரில் ஆனந்தமாய்
வீற்றிருக்கும் ஆனந்தவல்லித் தாயாரை
உத்திரமேரூரில் தரிசித்தேன் !
 
 
நவமூர்த்திகளை நன்றாகத்
தரிசித்த சந்தோஷத்தில்
நிம்மதியாய் வந்தேன் . . .
 
 

0 கருத்துகள்:

  © Blogger templates Newspaper III by Ourblogtemplates.com 2008

Back to TOP