ஆனந்தவேதம்

உனக்காக,உன் வாழ்க்கைக்காக,உன் ஆனந்தத்திற்காக...

இந்த வலைப்பதிவில் தேடு

வியாழன், 15 மார்ச், 2012

நாத்திகவாதி . . .

ராதேக்ருஷ்ணா

நாத்திகம் . . .

யார் நாத்திகவாதி ?


கடவுள் இல்லையென்று
வெளியில் சொல்பவன்
நாத்திகவாதியல்ல . . .


கடவுளைக் கிண்டல்
செய்துகொண்டிருப்பவன்
நாத்திகவாதியல்ல . . .


கடவுளை நம்புபவர்களை
பரிகசித்து சிரிப்பவர்கள்
நாத்திகவாதியல்ல . . .


கடவுளைப் பற்றி
சந்தேகமாக கேள்வி கேட்பவர்
நாத்திகவாதியல்ல . . .


கடவுளின் மேல்
சந்தேகம் உள்ளவர்
நாத்திகவாதியல்ல . . .


கடவுளை அடையும்
வழிகளை விமர்சிப்பவர்
நாத்திகவாதியல்ல . . .


கடவுளின் பெயர்களை
பரிகாசமாய் சொல்லுபவர்கள்
நாத்திகவாதியல்ல . . .




கடவுள் இருப்பதை
ஏற்கமுடியாதவர்கள்
நாத்திகவாதியல்ல . . .




பக்தர்களை பரிகசித்து
அவர்களை கேள்வி கேட்பவர்
நாத்திகவாதியல்ல . . .



கடவுளை நிந்தித்து
அதனால் சந்தோஷமடைபவன்
நாத்திகவாதியல்ல . . .


பிறகு யார் தான்
நாத்திகவாதி ? ? ?


கடவுளைப் பற்றி
யோசிக்காதவனே
நாத்திகவாதி . . .


இதுவே என் தீர்மானம் . . .


அதன்படி பார்த்தால்
உலகில் எவருமே
நாத்திகவாதியல்ல . . .

0 கருத்துகள்:

  © Blogger templates Newspaper III by Ourblogtemplates.com 2008

Back to TOP