ஆனந்தவேதம்

உனக்காக,உன் வாழ்க்கைக்காக,உன் ஆனந்தத்திற்காக...

இந்த வலைப்பதிவில் தேடு

ஞாயிறு, 18 மார்ச், 2012

அனுபவிப்போம் வா . . .

ராதேக்ருஷ்ணா


ஸ்ரீநிவாசா . . . கோவிந்தா !


இப்பொழுது திருமலைக்குச்
செல்லப்போகிறேன் . . .


நேற்று என் தாயார்
அலர்மேல்மங்காவை
சுகமாய் தரிசித்தேன் !


நிஜமாகவே என் தாயாரைப்
பார்த்தபிறகு என் மனம்
நிறைவாய் உள்ளது . . .


இதன் பிறகு ஸ்ரீநிவாசனைப்
பார்க்க அவசியமே இல்லை . . .


ஆயினும் எங்கள் குலசேகர
ஆழ்வார் ஏதேனும்
ஆகவேண்டும் என்று ஆசைப்பட்ட
திருமலையில் சிறிது நேரம்
நிற்க எனக்கு ஆசை . . .


படியாய் கிடந்து உன் பவளவாய்
காண்பேன் என்று குலசேகரர் புலம்பிய
திருமலையப்பனை
பார்த்தால் சுகம்தானே . . .


எங்கள் திருமலை அனந்தாழ்வானிடம்
தாடையில் கடப்பாறையால்
அடிவாங்கினவனைப் பார்த்தால்
பரமசுகம்தானே . . .


வகுளமாலிகாவின் ஸ்வீகார
புத்திரனை, திருமலையில் வாடகைக்கு
சுகமாய் நிற்பவனைப் பார்த்தால்
எல்லையில்லா சுகம்தானே . . .


எங்கள் இராமானுஜர் சங்கும்,சக்கரமும்
தர அதை சுகமாய் சுமப்பவனை
பார்த்தால் சொல்லமுடியாத
தொல்லை இன்பம் தானே . . .


திருமலை நம்பிகளின்
தீர்த்த பாத்திரத்தில் துளையிட்டு
தாகம் தீர நீரருந்தி,அவரை
அப்பா என்றழைத்தவனை
பார்த்தால் மோக்ஷம் தானே . . .


ஹாத்தி ராம் பாவாஜீயோடு
நித்தியம் சொக்கட்டான்
ஆடி பொழுது போக்குகின்றவனைப்
பார்த்தால் படு குஷி தானே . . .


என் அலர்மேல்மங்கையின்
கணவனைப் பார்க்கவே
திருமலைக்குப் போகிறேன் . . .


திருமலைக்குச் சொந்தக்காரரான
லக்ஷ்மி வராஹரைத் தரிசிக்கவே
திருமலைக்குப் போகிறேன் . . .


வா . . .போய் அனுபவிப்போம் வா . . .

0 கருத்துகள்:

  © Blogger templates Newspaper III by Ourblogtemplates.com 2008

Back to TOP