ஆனந்தவேதம்

உனக்காக,உன் வாழ்க்கைக்காக,உன் ஆனந்தத்திற்காக...

இந்த வலைப்பதிவில் தேடு

சனி, 9 ஜூன், 2012

சமத்தாக யோசி . . .

ராதேக்ருஷ்ணா


எல்லோரும் வெள்ளைக்கு
நடுவிலிருக்கும் ஒரு கறையைப்
பார்த்தால் . . .
நீ அந்தக் கறையைச் சுற்றியிருக்கும்
வெள்ளையைப் பார் !


எல்லோரும் ரோஜாச் செடியில்
உள்ள முட்களை கவனித்தால் . . ,
நீ அந்த முள்ளுச் செடியில் மலரும்
ரோஜாக்களைப் பார் !


எல்லோரும் கோடைக் காலத்தில்
சூரியனை சபித்தால் . . ,
நீ சூரிய வெப்பத்தின் சக்தியை
உபயோகப்படுத்தப் பார் !


எல்லோரும் மழையை வெறுத்து
ஒதுங்கி நின்றால் . . ,
நீ அந்த மழையில் நனைந்து
உன்னை குளிராக்கிக் கொள் !


எல்லோரும் பிரச்சனைகளில்
துவண்டு அழும்போது . . ,
நீ பிரச்சனைகளை உனது
வெற்றிப் படியாக்கிக் கொள் !


எல்லோரும் செலவுகளைக் கண்டு
வெறுத்து புலம்பினால் . . ,
நீ செலவுகளையே உனது
சேமிப்பாக வரவாக மாற்றி விடு !


எல்லோரும் பயத்தினால் வாழ்வை
யோசிக்க மறக்கும்போது . . ,
நீ தைரியத்தை மூலதனமாகக் கொண்டு
மாற்றி யோசிப்பாய் !


யோசிக்காமல் வாழமுடியாது !
சரியாக யோசிக்காமல் ஜெயிக்கமுடியாது !
தப்பாக யோசித்தால் தப்பிக்கமுடியாது !



மாற்றி யோசி . . .
விதவிதமாய் யோசி . . .
வித்தியாசமாய் யோசி . . .
விசித்திரமாய் யோசி . . .
விநோதமாய் யோசி . . .


எல்லோரும் எதைப் பலவீனமாக
நினைக்கிறார்களோ, அதை நீ
பலமாக மாற்றிக்கொள் !


எல்லோரும் எதைப் பலமாக
வைத்திருக்கிறார்களோ, அதை நீ
உன் அடிமையாக்கிக் கொள் !


பணத்தை உன் அடிமையாக்கு . . .
க்ருஷ்ணனுக்கு நீ அடிமையாயிரு . . .


இந்திரியங்களை உனக்கு அடிமையாக்கு . . .
குருவுக்கு நீ கொத்தடிமையாயிரு . . .


ஆசைகளை உன் கொத்தடிமையாக்கு . . .
நாமஜபத்திற்கு நீ நிரந்தர அடிமையாயிரு . . .


சரியாக யோசி . . .
சமத்தாக யோசி . . .
பலமாக யோசி . . .

அப்பொழுது சுலபமாய் ஜெயிப்பாய் !

இல்லையேல் தவறாக யோசிப்பதை விடு !
உடனே விடு !
இப்பொழுதே விடு !

நிம்மதியாய் அனுபவி . . .
நித்தியமாய் அனுபவி . . .
சுகமாய் அனுபவி . . .

வாழும் வரை அனுபவி . . .
வாழ்வை அனுபவி . . .


0 கருத்துகள்:

  © Blogger templates Newspaper III by Ourblogtemplates.com 2008

Back to TOP