ஆனந்தவேதம்

உனக்காக,உன் வாழ்க்கைக்காக,உன் ஆனந்தத்திற்காக...

இந்த வலைப்பதிவில் தேடு

வெள்ளி, 15 ஜூன், 2012

வாழ்வின் மலை . . .

ராதேக்ருஷ்ணா


திருநீர்மலை . . .


திருமங்கை ஆழ்வாரையும்
ஆறு மாதம் காக்க வைத்த
நீர்மலை . . .


வால்மீகி மஹரிஷியின்
ஆசை தீர ராமனைக் காட்டின
நீர்மலை . . .


ரங்கனும் பூதேவி ஸ்ரீதேவியோடு
சுகமாய் சயனக்கோலத்தில் இருக்கும்
நீர்மலை . . .


உலகளந்தானும் ஒய்யாரமாய்
நின்று அருள் பாலிக்கும்
நீர்மலை . . .


ப்ரஹ்லாதனைக் கொண்டாடும்
நரசிம்மனும் சாந்தமாய் இருக்கும்
நீர்மலை . . .


எனக்கு நிறைய நாம ஜபம்
கொடுத்து,என்னைப் பக்குவப்படுத்தின
நீர்மலை . . .


அமைதியான ஒரு திவ்யதேசம் . . .
ஏகாந்தமாய் ஒரு திவ்யதேசம் . . .
ஆர்ப்பாட்டமில்லாத ஒரு திவ்யதேசம் . . .


நினைத்தால் நான் போவேன் . . .
என்னை மறந்து அமர்ந்திருப்பேன் . . .
என் கண்ணனை நான் அனுபவிப்பேன் . . .

நீர்மலையே நீ என் வாழ்வின் மலை . . .
நீர்மலையே என்னை வாழவைக்கும் மலை . . .


0 கருத்துகள்:

  © Blogger templates Newspaper III by Ourblogtemplates.com 2008

Back to TOP