ஆனந்தவேதம்

உனக்காக,உன் வாழ்க்கைக்காக,உன் ஆனந்தத்திற்காக...

இந்த வலைப்பதிவில் தேடு

ஞாயிறு, 10 ஜூன், 2012

கோபிகா கீதம் . . .

ராதேக்ருஷ்ணா


கோபிகா கீதம் . . .


தன்னை மறந்த கோபிகைகளின்
ப்ரேம கீதம் !


தங்கள் வீடுகளை விட்ட
பக்தைகளின்  உன்னத கீதம் !


லோக மரியாதையை விட்ட
உத்தமிகளின் கீதம் !


வேத வார்த்தையை மீறின
தைரியசாலிகளின் கீதம் !


 சாஸ்திர தர்மத்தை தள்ளின
பெண்களின் கீதம் !


உற்றாரையும் பெற்றோரையும்
ஒதுக்கினவர்களின் கீதம் !


கணவரையும், குழந்தைகளையும்
மறந்தவர்களின் கீதம் !


அஹம்பாவத்தையும் மமகாரத்தையும்
கொன்றவர்களின் கீதம் !


க்ருஷ்ணனின் ஆசையை
பூர்த்தி செய்தவரின் கீதம் !


சாக்ஷாத் மன்மத மன்மதனாக
கிருஷ்ணனை வசீகரித்த கீதம் !


ராதிகாவின் தாசிகளின்
விரஹ தாப கீதம் !


நம் பாவத்தை களைந்து
நமக்கு பக்தியைத் தரும் கீதம் !


அர்த்த ராத்திரியில்
ஒரு காதல் கீதம் !


கிருஷ்ணனே ஒளிந்துகொண்டு
ரசித்துக் கேட்ட கீதம் !


யமுனை ஆற்றங்கரையில்
ஒரு யஞ்ய கீதம் !


என்னை மயக்கின ஒரு கீதம் !
நான் பைத்தியமான ஒரு கீதம் !
என்னை அழ வைத்த கீதம் !

எனக்கு கிருஷ்ணனை தந்த கீதம் !
என் கிருஷ்ணனை நான் அனுபவித்த கீதம் !

கோபிகா கீதம் . . .
பாகவத சாரம் . . .
பாகவத ரஹஸ்யம் . . .

தனியாய் பாடு . . .

தானே க்ருஷ்ணன்  வருவான் . . .

நானும் ஒரு கோபியே . . .

 

0 கருத்துகள்:

  © Blogger templates Newspaper III by Ourblogtemplates.com 2008

Back to TOP