ஆனந்தவேதம்

உனக்காக,உன் வாழ்க்கைக்காக,உன் ஆனந்தத்திற்காக...

இந்த வலைப்பதிவில் தேடு

சனி, 23 ஜூன், 2012

நானா பேசுகிறேன் . . .

ராதேக்ருஷ்ணா
 
 
நானா பேசுகிறேன் . . .
 
 
நானா பேசுகிறேன் . . .
என் க்ருஷ்ணனைப் பற்றி ? ! ?
 
 
என்னால் பேச முடியுமா . . .
பரப்ரும்ம பரமாத்மாவைப் பற்றி ? ! ?
 
 
எனக்கு தகுதி இருக்கிறதா . . .
உத்தம பக்தியைப் பற்றிச் சொல்ல ? ! ?
 
 
என்னால் இயலுமா . . .
அகிலாண்ட கோடி ப்ரும்மாண்ட
நாயகனை வர்ணிக்க ? ! ?
 
 
என்ன தெரியும் எனக்கு . . .
உலகையே நடத்திக்கொண்டிருக்கும்
சூத்திரதாரியைப் பற்றி ? ! ?
 
 
நான் என்ன ஞானியா . . .
அடுத்தவருக்கு பகவானை
உள்ளபடி சொல்லிக்கொடுக்க ? ! ?
 
 
உத்தம பக்தனா நான் . . .
மஹாத்மாக்களைப் பற்றி,
உள்ளபடி உபன்யசிக்க ? ! ?
 
 
எதுவுமே எனக்குத் தெரியாது . . .
 
நான் பேசவில்லை . . .
அவன் பேசுகிறான் . . .
 
நான் சொல்லவில்லை . . .
அவன் சொல்லவைக்கிறான் . . .
 
நான் ரசிகன் . . .
நான் அடியவன் . . .
நான் குழந்தை . . .
நான் அவனுடையவன் . . .
 
இதுவே எனக்குத் தெரியும் . . .
 
மற்றவை எல்லாம்
அவன் செயல் . . .
 
 

0 கருத்துகள்:

  © Blogger templates Newspaper III by Ourblogtemplates.com 2008

Back to TOP