ஆனந்தவேதம்

உனக்காக,உன் வாழ்க்கைக்காக,உன் ஆனந்தத்திற்காக...

இந்த வலைப்பதிவில் தேடு

சனி, 21 ஜூலை, 2012

வில்லிபுத்தூர் . . .

ராதேக்ருஷ்ணா





 கோதை பிறந்த ஊர் !
பேதைமையை நீக்கும் ஊர் . . .



கோவிந்தன் வாழும் ஊர் !
கோமாதாவை ரக்ஷிக்கும் ஊர் . . .



சோதி மணிமாடங்கள் தோன்றும் ஊர் !
நித்தியமாய் பக்தி செய்யும் ஊர் . . .



நீதியால் நல்ல பத்தர் வாழும் ஊர் !
நீங்காத செல்வம் நிறைந்த ஊர் . . .



நான் மறைகள் ஓதும் ஊர் !
நாலாயிரமும் ஜெபிக்கும் ஊர் . . .



வில்லிபுத்தூர் வேதக் கோன் ஊர் !
விதியை மாற்றி வாழவைக்கும் ஊர் . . .



பாதகங்கள் தீர்க்கும் ஊர் !
பாவியரை பக்தராக்கும் ஊர் . . .



பரமனடி காட்டும் ஊர் !
பரமனை மாப்பிள்ளையாய் அடைந்த ஊர் . . .



வேதம் அனைத்திற்கும் வித்தான ஊர் !
வேதநாதன் சயனிக்கும் ஊர் . . .



கோதைத் தமிழ் ஐயைந்தும் ஐந்தும் பாடும் ஊர் !
அறியாத மானிடரை திருத்தும் ஊர் . . .



கருடனையும் கர்ப்பக்ருஹத்துள்
மரியாதையாய் தொழும் ஊர் !
காரேய் கருணை ராமானுசனை
மாமனாய் அடைந்த ஊர் . . .




திருவாடிப்பூரத்தை ரசிக்கும் ஊர் !
திருந்தண்கால் அப்பனும் வரும் ஊர் . . .



யமுனையும் திருமுக்குளமான ஊர் !
எமனையும் விரட்டியடிக்கும் ஊர் . . .



நாழிக்கிணற்றில் கண்ணன் வரும் ஊர் !
நாழிகையில் கண்ணனைக் காட்டும் ஊர் . . .



கிளியும் நாமம் சொல்லும் ஊர் !
கலியும் கெடும் என்று உணர்த்தும் ஊர் . . .



சூடிக் களைந்தாளின் சுடர் மிகு ஊர் !
பல்லாண்டு பாடுபவரின் பக்தி ஊர் . . .



ஐந்து கருட சேவை ஊர் !
ஐயமெல்லாம் தீர்க்கும் ஊர் . . .



கோபாலவல்லியின் காதல் ஊர் !
கோபாலவில்லியாக்கிய விந்தை ஊர் . . .



வினைகள் எல்லாம் நீங்கும் ஊர் !
வில்லிபுத்தூர் என்னும் ப்ரேமை ஊர் . . .



0 கருத்துகள்:

  © Blogger templates Newspaper III by Ourblogtemplates.com 2008

Back to TOP