ஆனந்தவேதம்

உனக்காக,உன் வாழ்க்கைக்காக,உன் ஆனந்தத்திற்காக...

இந்த வலைப்பதிவில் தேடு

செவ்வாய், 24 ஜூலை, 2012

இன்றோ திருவாடிப்பூரம் !

ராதேக்ருஷ்ணா 





இன்றோ திருவாடிப்பூரம் !



இன்றோ நம் கோதை பிறந்தாள் !



இன்றோ பெரியாழ்வார் பெற்றார் !




இன்றோ வடபத்ரசாய் மகிழ்ந்தான் !



இன்றோ துளசி நெகிழ்ந்தது !



இன்றோ விண்ணவர் மகிழ்ந்தனர் !



இன்றோ மண்ணவர் திருந்தினர் !



இன்றோ நாம ஜபம் ஜெயித்தது !



இன்றோ க்ருஷ்ண ப்ரேமை சித்தித்தது  !




இன்றோ கலி கெட்டது !




இன்றோ பூமி சிலிர்த்தது !




இன்றோ பாபங்கள் அழிந்தது !



இன்றோ க்ருஷ்ணன் திளைத்தான் !




இன்றோ ரங்கன் மயங்கினான் !



இன்றோ ஸ்ரீநிவாசன் புலம்பினான் !



இன்றோ ஞானம் பிறந்தது !



இன்றோ வைராக்கியம் வந்தது !



இன்றோ ஸ்ரீவில்லிபுத்தூர் ப்ருந்தாவனமானது !



இன்றோ இடைச்சிகள் காதலடைந்தது !



இன்றோ பிராமணர்கள் அடங்கியது !



இன்றோ நமக்கு பக்தி வந்தது !



இன்றோ கோபாலவல்லி
ஆண்டாள் கைக் கிளியானது !



இன்றே தான் . . .



0 கருத்துகள்:

  © Blogger templates Newspaper III by Ourblogtemplates.com 2008

Back to TOP