ஆனந்தவேதம்

உனக்காக,உன் வாழ்க்கைக்காக,உன் ஆனந்தத்திற்காக...

இந்த வலைப்பதிவில் தேடு

புதன், 25 ஜூலை, 2012

சுதாமா . . .

ராதேக்ருஷ்ணா



சுதாமா . . .
ஸ்ரீ க்ருஷ்ணனின் சகா !


சுதாமா . . .
தரித்ரத்தை ரசித்த வைராக்யசாலி !


சுதாமா . . .
பகவானிடம் எதையும் கேட்காதவன் !


சுதாமா . . .
பகவானை தன்னிடம் கேட்க வைத்தவன் !


சுதாமா . . .
சாந்தீபனி ரிஷியின் உன்னத சிஷ்யன் !


சுதாமா . . .
ஸ்ரீ க்ருஷ்ணனின் பால்ய சினேகிதன் !


சுதாமா . . .
வேதத்தை உள்ளபடி அறிந்தவன் !


சுதாமா . . .
ப்ரும்மத்தை அறிந்த சரியான ப்ராம்மணன் !


சுதாமா . . .
பக்திக்காக பக்தி செய்த பக்தன் !



சுதாமா . . .
க்ருஷ்ணனை ஆனந்தத்தில் அழ வைத்தவன் !



சுதாமா . . .
ருக்மிணியை சாமரம் வீச வைத்த ஞானி !



சுதாமா . . . 
அவலையும் பக்தியோடு தந்தவன் !



சுதாமா . . .
க்ருஷ்ணனோடு 64 நாள் பயின்றவன் !



சுதாமா . . .
க்ருஷ்ணனை பாத பூஜை செய்யவைத்தவன் !



சுதாமா . . .
என்னை தெளிய வைத்தவன் . . .



சுதாமா . . .
எனக்கு ஞானம் தந்தவன் . . .



சுதாமா . . .
எனக்கு வைராக்யம் அருளினவன் . . .



சுதாமா . . .
சுதாமா. . . சுதாமா. . .
க்ருஷ்ணனே ஜபித்த இந்தத் திருநாமம்
எனக்குப் போதும் . . .


சத்தியமாய் க்ருஷ்ணன்
என்னிடம் ஏதாவது கேட்பான் . . .





0 கருத்துகள்:

  © Blogger templates Newspaper III by Ourblogtemplates.com 2008

Back to TOP