ஆனந்தவேதம்

உனக்காக,உன் வாழ்க்கைக்காக,உன் ஆனந்தத்திற்காக...

இந்த வலைப்பதிவில் தேடு

வியாழன், 16 ஆகஸ்ட், 2012

என்னிடம் வா ! ! !

ராதேக்ருஷ்ணா
 
 
 
வாழ்க்கை முழுதும் வழித்துணையாய்
நான் இருக்கிறேன் . . .
என்னிடம் வா என்றான்
திருமோகூர் மார்கபந்து !
 
 
 
மோக்ஷம் என்னும் பரமபதத்திற்கு
உனக்கு வழித்துணை நான் . . .
என்னிடம் வா என்றான்
திருமோகூர் காளமேகம் !
 
 
 
உன் மோஹம் எனக்குதான்
அதற்கும் வழித்துணை நான் . . .
என்னிடம் வா என்றான்
திருமோகூர் வழித்துணைவன் !
 
 
 
உன் தாபத்தை தீர்க்கவே நான்
திருமோகூரில் காத்திருக்கிறேன் . . .
என்னிடம் வா என்றான்
மோஹனவல்லியின் நாதன் !
 
 
 
உனது ப்ராரப்த கர்மாவிற்கு
பதிலளிக்க நான் இருக்கிறேன் . . .
 என்னிடம் வா என்றான்
திருமோகூர் ஆப்தன் !
 
 
 
உனது எதிர்காலத்திற்கு
உத்திரவாதம் நான் தருகிறேன் . . .
என்னிடம் வா என்றான்
திருமோகூர் சுடர்கொள்ஜோதி !
 
 
 
 உனது வம்சத்திற்கே
பக்தி தருவது என் பொறுப்பு . . .
என்னிடம் வா என்றான்
திருமோகூர் நண்பன் !
 
 
 
உன் துக்கங்களை ஆனந்தமாக்குவது
என்னுடைய முதல் கடமை . . .
என்னிடம் வா என்றான்
திருமோகூர் ப்ரார்த்தனா சயன பெருமாள் !
 
 
 
உனது அஞ்ஞானத்தை அழித்து
ஞானத்தைக் காட்டுவது என் வேலை . . .
என்னிடம் வா என்றான்
திருமோகூர் மரகதமணித்தடன் !
 
 
 
நானாக செல்லவில்லை . . .
மோஹினி அவதாரம் எடுத்தவன்
என்னை அவனிடம் மோஹிப்பிக்க
வைத்து என்னை இழுத்தான் !
 
 
 
சென்றேன் . . .
ப்ரமையை மழையாய் பொழிந்தான் !
 
 
நனைந்தேன் . . .
இன்னும் உடல் சிலிர்க்கின்றது !
 
 
சிலிர்க்கின்றேன் . . .
திருமோகூர் நாதனை நினைத்து !
 
 
மனமும்,உடலும்,ஆத்மாவும்
மோஹனின் வசமாயிற்று !
 
 
திருமோகூர் மோஹன்
எனது மோஹத்திற்கு காரணன் . . .
 
 
 

0 கருத்துகள்:

  © Blogger templates Newspaper III by Ourblogtemplates.com 2008

Back to TOP