ஆனந்தவேதம்

உனக்காக,உன் வாழ்க்கைக்காக,உன் ஆனந்தத்திற்காக...

இந்த வலைப்பதிவில் தேடு

புதன், 29 ஆகஸ்ட், 2012

திருவோணம் !

ராதேக்ருஷ்ணா
 
 
திருவோணம் . . .
 
நீ பிறந்த திருவோணம் !
 
 
வாமனா . . .
இன்று நீ பிறந்த திருவோணம் !
 
 
கச்யபருக்கும் அதிதி தேவிக்கும்
நீ பிறந்த திருவோணம் !
 
 
மஹாபலிக்கு அனுக்ரஹம் செய்ய
நீ பிறந்த திருவோணம் !
 
 
இந்திரனுக்கு சொர்க்கம் தர
நீ பிறந்த திருவோணம் !
 
 
மூவடி நிலம் யாசகம் கேட்க
நீ பிறந்த திருவோணம் !
 
 
 பால ப்ரஹ்மசாரியாய் வர
நீ பிறந்த திருவோணம் !


உலகையெல்லாம் அளக்க
நீ பிறந்த திருவோணம் !


வாமனா . . .
நீ நன்றாயிருக்கவேண்டும் !
 உனக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள் !



அன்று இவ்வுலகம் அளந்தாய்
அடி போற்றி !


இன்று எங்களை ஆட்கொண்டாய்
கருணை போற்றி !


அன்று இவ்வுலகைப் பெற்றாய்
குணம் போற்றி !


இன்று எங்களை வாழவைக்கிறாய்
பலம் போற்றி !


அன்று மஹாபலியைக் காத்தாய்
சத்தியம் போற்றி !


இன்று எங்களைக் காக்கின்றாய்
நிதானம் போற்றி !


அன்று சொர்க்கம் மீட்டாய்
பொறுப்பு போற்றி !


இன்று எங்களை மீட்கின்றாய்
வாத்சல்யம் போற்றி !


 அன்று கங்கையைத் தந்தாய்
லீலை போற்றி !


இன்று திருவோணம் தந்தாய்
மஹத்துவம் போற்றி !


வாமனா . . . திருவிக்கிரமா . . .
உலகளந்தோனே . . .
உன் பெருமை பேச என்னால் முடியுமோ !


ஏதோ உன் மீதுள்ள
ஆசையால்,
ஆழ்வார்கள் சொன்ன
வார்த்தைகளால்,
அசடாய் பேசிவிட்டேன் . . .


இந்த அசடையும்,
இதோடு இருக்கும் கூட்டத்தையும்
என்றும் ரக்ஷிப்பாய் ! ! !


நாங்கள் அஹம்பாவிகள் !
நீ தான் எங்களை வழிபடுத்தவேண்டும்!


 

0 கருத்துகள்:

  © Blogger templates Newspaper III by Ourblogtemplates.com 2008

Back to TOP