ராஜகோபாலா ! ! !
ராதேக்ருஷ்ணா
ராஜகோபாலா !
மன்னார்குடி ராஜகோபாலா ! ! !
எத்தனை நாள் உன்னை
பார்க்க ஏங்கியிருந்தேன் !
கடைசியாக உன் குழந்தையை
கூப்பிட்டு விட்டாயே
ராஜகோபாலா !
நிஜமாகவே நான் உன்னைப்
பார்த்துவிட்டேனா ?
நினைக்க நினைக்க
அதிசயமாய் இருக்கிறதே ! ? !
எனக்கு அழுகைதான் வருகிறது !
என்னையும் உன் பக்தனாக
ஏற்று உன் தரிசனத்தைத்
தந்துவிட்டாயே ? ! ?
கோபிலருக்கும்,கோப்ரலயருக்கும்
அனுக்ரஹம் செய்ய மன்னார்குடிக்கு
நீ வந்தாயென புராணம்
சொல்கிறது . . .
ஆனால் நான் சொல்கிறேன் !
இந்த உலகில் உன் பக்தியின்
எல்லையை அனுபவிக்கத்
துடிக்கும் இந்த கோபாலவல்லியை
கலியுகத்தில் தேற்றவே நீ வந்தாய் ! ! !
உன் இடுப்பு வளைவில் நான்
என்னைத் தொலைத்தேன் !
உன் அழகிய திருமார்பில் நான்
என்னை இழந்தேன் !
உன் அற்புத கை அழகில் நான்
என்னை பறிகொடுத்தேன் !
உன் அசத்தலான காலழகில் நான்
என்னை மறந்துவிட்டேன் !
உன் கையில் என்னை ஒரு
மாடு மேய்க்கும் கோலாகக்
கொள்வாயா ? ? ?
உன் காதில் என்னை ஒரு
குண்டலமாக ஏற்றுக் கொள்வாயா ? ? ?
உன் காலில் என்னை ஒரு சலங்கையாக
ஏற்றுக்கொள்வாயா ? ? ?
உன் இடுப்பில் தொங்கும்
சாவிக்கொத்தாக என்னை
மாற்றிவிடமாட்டியா ? ? ?
உன் காது குடையும் குறும்பாக
என்னை செய்யமாட்டாயா ? ? ?
உன்னால் மேய்க்கப்படும்
ஒரு மாடாக இந்த தாசனை
செய்துவிடமாட்டாயா ? ? ?
உன்னையே பார்த்துக்கொண்டிருக்கும்
ஒரு கன்றுக்குட்டியாக என்னை
செய்துகொள்வாயா ? ? ?
உன் இடுப்பில் ஒரு
அரைச்சலங்கையாக என்னை
மாட்டிக்கொள்ள மாட்டாயா ? ? ?
உன் அழகையெல்லாம்
தான் மட்டும் ரஹஸ்யமாய்
அனுபவிக்கும் உனது
பீதாம்பரமாய் என்னை
உடுத்திக்கொள்ளமாட்டாயா ? ? ?
என்னை ஏதேனும் செய் . . .
என் ராஜகோபாலா . . .
என்னை உன்னோடு எதுவாகவாவது
வைத்துக்கொள் ராஜகோபாலா ! ! !
காத்திருக்கிறேன் உன்
சொத்தாய் . . .
0 கருத்துகள்:
கருத்துரையிடுக